தமிழ்நாடு (Tamil Nadu)
உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் 6 உயிரிழப்பு
- மேட்டத்தூரில் சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வேனில் திருச்செந்தூர் முருகன் கோவில் சென்றனர்.
பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுலா வேனில் ஊருக்கு திரும்பினார்கள். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூரில் சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
அதில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 13 பேர் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story