தமிழ்நாடு செய்திகள்

தர்மபுரி அருகே லாரி மோதி விபத்து - 4 பேர் பலி
- லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
- விபத்தில் படுகாயமடைந்தவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்ற லாரி முன்னால் சென்ற பைக், ஆம்னி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story





