என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    தெரு நாய் கடித்ததில் சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளி உயிரிழப்பு
    X

    தெரு நாய் கடித்ததில் சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளி உயிரிழப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த மாதம் 27-ந்தேதி இரவு தோட்டத்தின் அருகில் இருந்த நாயை அடிக்க முற்பட்டார்.
    • சம்பவம் குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த நாட்றம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனி மல்லப்பா (வயது 50) கூலி தொழிலாளி. இவர் முன்ராஜ் என்பவரின் தோட்டத்தில் கடந்த 3 வருடங்களாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த மாதம் 27-ந்தேதி இரவு தோட்டத்தின் அருகில் இருந்த நாயை அடிக்க முற்பட்டார். அப்போது அந்த நாய் முனி மல்லப்பாவை கடித்ததாக கூறப்படுகிறது.

    பின்னர், முனி மல்லப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். அங்கு முனி மல்லப்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முனி மல்லப்பா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து தளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×