என் மலர்

    உலகம்

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தில் குற்றம்சாட்டப்பட்ட 2 தலைவர்கள் வங்கதேச தேர்தலில் வெற்றி
    X

    லுட்போஸ்மேன் பாபர், அப்துஸ் சலாம் பின்டு

    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தில் குற்றம்சாட்டப்பட்ட 2 தலைவர்கள் வங்கதேச தேர்தலில் வெற்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஹூஜி தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு.
    • ஷேக் ஹசீனா மீது நடத்தப்பட்ட கிரானைட் தாக்குதல் வழக்கில் இவருக்கு மரண தண்டனை.

    வங்கதேசத்தில் கடந்த 2024 ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்ந்த பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வந்தது.

    இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை நடந்த பாராளுமன்ற தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மொத்தம் உள்ள 300 இடங்களில் 200க்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு பிரதான கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையலான கூட்டணி 71 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது.

    இந்த தேர்தலில், ஒரு காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று முக்கியத் தலைவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்கின்றனர்.

    இவர்களில் இருவர் தாரிக் ரஹ்மானின் பிஎன்பிகட்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்தவர்.

    பிஎன்பியை சேர்ந்த தலைவர் லுட்போஸ்மேன் பாபர். 2004-இல் ஷேக் ஹசீனா மீது நடத்தப்பட்ட கிரானைட் தாக்குதல் வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

    மேலும், 2004 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரிவினைவாதக் குழுவான உல்பாவுக்கு சிட்டகாங் வழியாக கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்த வழக்கில்ஈடுபட்டதற்காக அவருக்கு 2015 ஆம் ஆண்டு இரண்டாவது மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    ஆனால், டிசம்பர் 2024-இல் வங்கதேச உயர் நீதிமன்றம் இவரை விடுவித்தது. தற்போது நடந்த தேர்தலில் 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

    பிஎன்பியை சேர்ந்த மற்றொரு தலைவர் அப்துஸ் சலாம் பின்டு. இவரும் கிரானைட் தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்டவர்.

    இந்தியாவில் நடந்த சில குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஹூஜி தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவளித்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. இவர் தற்போது 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    ஜமாத் இ இஸ்லாமி கட்சியை அசாருல் இஸ்லாம், ற்போது நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.

    1971 வங்கதேச விடுதலைப் போரின் போது 1,200 பேரைக் கொன்றது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுகளுக்காக 2014-இல் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு இவர் விடுவிக்கப்பட்டார்.

    இந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட தலைவர்களின் தற்போதைய வெற்றி இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே 2004 அதிகாரத்தில் இருந்தபோது, இந்தியாவின் பிரிவினைவாதக் குழுவான உல்பாவுக்கு சிட்டகாங் வழியாக கப்பல் நிறைய ஆயுதங்களை அனுப்பி வைத்த வழக்கில் தற்போது பிரதமர் ஆக உள்ள தாரிக் ரஹ்மானுக்குத் தொடர்பு இருப்பதாக அப்போது இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×