உலகம்

ஈரானில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 21 பேர் உயிரிழப்பு - 34 பேர் படுகாயம்
- ஷிராஸ், ஃபார்ஸ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.
- பேருந்து நெடுஞ்சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரானின் ஷிராஸ் நகரில் நடந்த சாலை விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழநதனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர்.
ஷிராஸ், ஃபார்ஸ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந்த விபத்து இன்று (ஜூலை 19) காலை 11:05 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 55 பேரை ஏற்றிச்சென்ற பேருந்து நெடுஞ்சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story