உலகம்

இந்தியர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் எல்லாமே 'Spam' தான் - நியூசிலாந்து பெண் அமைச்சர் சர்ச்சை கருத்து
- எனக்கு இந்தியர்களிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன.
- நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து குடிவரவு துறை (Immigration) பெண் அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் இந்தியர்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குடியேற்றத் தகவல்களைக் கேட்டு இந்தியர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் திறக்கப்படுவதில்லை என்றும், அவை Spam (போலி) ஆக கருதப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "எனக்கு இந்தியர்களிடமிருந்து நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அனைத்தும் குடியேற்றப் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கேட்கும் மின்னஞ்சல்கள்.
ஆனால் அவர்களின் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்கப்படுவதில்லை. நான் அதைத் திறந்து பார்ப்பதில்லை. அவை Spam போன்றது" என்று கூறினார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளது.
"அமைச்சர் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களைத் தனிமைப்படுத்துகிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது" என நியூசிலாந்தின் இந்திய வம்சாவளி எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.