உலகம்

ஈரானில் துணிகரம்: நோபல் பரிசு வென்றவருக்கு கொலை மிரட்டல்
- பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்து வந்தார்.
- இதற்காக பலமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
டெஹ்ரான்:
ஈரானைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர் நர்கெஸ் முகமதி.
இவர் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதற்காக பலமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்தது.
இந்நிலையில் பெண்களுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருவதால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story