என் மலர்

    உலகம்

    சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவால் தடம் புரண்ட பயணிகள் ரெயில் - சிக்கித் தவித்த 80 பேர் மீட்பு
    X

    சுவிட்சர்லாந்தில் திடீர் பனிச்சரிவால் தடம் புரண்ட பயணிகள் ரெயில் - சிக்கித் தவித்த 80 பேர் மீட்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன.
    • தகவல் அறிந்து ஹெலிகாட்பர்களில் மீட்புப்படை விரைந்தது.

    சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாகாணத்தில் கோபென்ஸ்டைன் அருகே இன்று காலை பனிச்சரிவு காரணமாக பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டது.

    பிரிக் நகரிலிருந்து புறப்பட்ட ரெயில், ஸ்டாக்ராபன் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மலை உச்சியிலிருந்து சரிந்து விழுந்த பனியில் சிக்கியது.

    இதில் ரெயிலின் பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன. விபத்தின்போது ரெயிலில் சுமார் 80 பயணிகள் இருந்தனர்.

    தகவல் அறிந்து ஹெலிகாட்பர்களில் வந்த மீட்புப்படையினர் மோசமான வானிலைக்கு மத்தியில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

    ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காயமடைந்த 5 பேருக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×