என் மலர்

    ஆட்டோமொபைல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாடல்கள் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும்.
    • அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி, விர்டுஸ் மிட்சைஸ் செடான் மற்றும் டிகுவான் எஸ்யூவி ஆகிய 3 மாடல்களுக்கு பெருமளவு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

    டைகுன் மீதான தள்ளுபடிகள் கடந்த மாதம் கிடைத்ததை விட கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் விர்டுஸ் மற்றும் டிகுவான் மீதான தள்ளுபடிகள் சற்று குறைந்துள்ளன. தள்ளுபடி மற்றும் சலுகைகள் ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்பட மாறுபடும்.

    சில டீலர்கள் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் வரவிருக்கும் டாடா கர்வ்வ் மற்றும் சிட்ரோயன் பாசால்ட் ஆகியவற்றுக்கு போட்டியாக விளங்கும் ஜெர்மன் பிராண்டின் MY2023 மாடல்களை இன்னும் வைத்திருக்கிறார்கள்.

    இந்த மாடல்கள் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும். மேலும் இவற்றுக்கு அதிகபட்சம் ரூ.2.28 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.


    MY2024 மாடல்களுக்கு வரும் மாறுபாட்டைப் பொறுத்து, VW 1.0 லிட்டர் TSI பதிப்புகளில் ரூ. 1.2 லட்சம் வரை தள்ளுபடியையும், 1.5 TSI மாடல்களில் ரூ. 1.87 லட்சம் வரையிலான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ரொக்க தள்ளுபடியுடன், என்ட்ரி லெவல் டைகுன் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.70 லட்சத்தில் இருந்து ரூ.10.90 லட்சமாக குறைந்துள்ளது.

    ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா ஆகிய மாடல்களுக்கான ஃபோக்ஸ்வேகனின் பதிலாக அறிமுகம் செய்யப்பட்ட கார் வோக்ஸ்வேகன் விர்டுஸ். இந்த மாடலுக்கு தற்போது ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதன் மிட் ரேஞ்ச் 1.0 TSI ஹைலைன் AT வேரியண்டிற்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்கிடையில், 1.5 TSI எஞ்சின் கொண்ட விர்டுஸ் மாடலுக்கு ரூ.70,000 வரையிலான பலன்களை பெறுகிறது.

    விர்டுஸ் மற்றும் டைகுன் ஆகியவை 115 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    வோக்ஸ்வேகன் டிகுவான் மாடலுக்கு ரூ. 1.5 லட்சம் வரை பலன்கள் வழங்கப்படுகின்றன. இது 2023 இல் தயாரிக்கப்பட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். MY2024 டிகுவான் மாடலுக்கு இந்த மாதத்தில் ரூ.1.25 லட்சம் வரை மொத்த பலன்கள் வழங்கப்படுகிறது.

    டிகுவான் மாடலில் 190 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 7 ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இது வோக்ஸ்வேகனின் 4 மோஷன் AWD தொழில்நுட்பம் வழியாக 4-வீல் டிரைவ் வசதியை வழங்குகிறது. ஐந்து இருக்கைகள் கொண்ட எஸ்யூவியின் விலை தற்போது ரூ.35.17 லட்சமாக உள்ளது.

    அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர புள்ளிகளுடன் பாதுகாப்பான கார் என்ற சாதனையையும் இது பெற்றுள்ளது.
    • தற்போது, பெட்ரோல், CNG மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் பன்ச் மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் வேரியன்ட் 4 லட்சம் யூனிட் விற்பனையை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டு அக்டோரில் அறிமுகப்படுத்தபட்ட பன்ச், சிட்ரோயன் C3 மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.

    அறிமுகமான 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 லட்சம் யூனிட் விற்பனையை அதாவது உற்பத்தி தொடங்கிய 10 மாதங்களில் எட்டியது. இதைத் தொடர்ந்து மே 2023 மற்றும் டிசம்பர் 2023 இல் முறையே 2 லட்சம் மற்றும் 3 லட்சம் யூனிட் விற்பனையானது. குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர புள்ளிகளுடன் பாதுகாப்பான கார் என்ற சாதனையையும் இது பெற்றுள்ளது.

    பன்ச் பிராண்ட் குறைந்த காலத்தில் அதிக விற்பனை மைல்கல்லை அடைய உதவிய ஒரு முக்கிய காரணமாக, ஒரு குறுகிய காலத்தில் பல்வேறு வகையான எரிபொருள் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுவது தான். தற்போது, பெட்ரோல், CNG மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் பன்ச் மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.


    EV மற்றும் இரட்டை-CNG சிலிண்டர் கொண்ட வெர்ஷன்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக, இது ஒரு சிலிண்டர் சிஎன்ஜி டேங்கில் மட்டுமே கிடைத்தது.

    பன்ச் மாடலின் ஒட்டுமொத்த விற்பனையில் பெட்ரோல் எஞ்சின் வேரியண்ட்கள் மட்டும் 53 சதவீதம் ஆகவும் இதைத் தொடர்ந்து 33 சதவீதம் CNG ஆப்ஷனாகவும் உள்ளது. சிட்ரோயன் eC3க்கு போட்டியை ஏற்படுத்தும் இந்த காரின் EV மாடல், 14 சதவீத விற்பனையைக் கொண்டுள்ளது.

    இந்தியாவில் டாடா பன்ச் EV வாங்கிய வாடிக்கையாளர்களில் 21 சதவீதம் பேர் முதல்முறை கார் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்டீரியர் C3 ஏர்கிராஸில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
    • சி3 ஏர்கிராஸ் போலல்லாமல், பாசால்ட் தரமான 1.2 பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் பாசால்ட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக சில விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு;-

    இந்தியாவில் இது சிட்ரோயனின் நான்காவது கார். இது C-Cubed திட்டத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் இருவிதமான பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களில் வழங்கப்படும்.

    உட்புறங்கள் மற்றும் அம்சங்கள்:-

    இப்போது முதல் முறையாக, சிட்ரோயன் வாகனத்தின் உட்புற தோற்றம் வெளியாகியுள்ளது. கேபின் ஒரு பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் இன்டீரியர் C3 ஏர்கிராஸில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

    இருப்பினும், பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய காலநிலை கட்டுப்பாடு, இரண்டாவது வரிசையை அட்ஜெட் செய்யும் வசதி, முழு எல்இடி ஹெட்லேம்ப்கள், இரண்டு வரிசைகளுக்கும் ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.

    சன்ரூஃப், சுற்றுப்புற விளக்குகள், காற்றோட்டமான இருக்கைகள் மற்றும் பட்டன்கள் போன்ற அம்சங்கள் இந்த காரில் இடம்பெறவில்லை. பூட் ஸ்பேஸ் 470-லிட்டராக உள்ளது, அதே நேரத்தில் வீல்பேஸ் 2.64-மீட்டராக உள்ளது, இது செக்மென்ட்டில் உள்ள பெரிய கார்களில் ஒன்றாகும்.


    பவர்டிரெய்ன் விருப்பங்கள்:-

    சி3 ஏர்கிராஸ் போலல்லாமல், பாசால்ட் தரமான 1.2 பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.

    இதன் NA யூனிட் 82bhp மற்றும் 155Nm உற்பத்தி செய்கிறது மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.

    டர்போ பெட்ரோல் யூனிட் 109 bhp மற்றும் 190 nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

    நிறங்கள் மற்றும் வடிவமைப்பு சிறப்பம்சங்கள்:-

    பாசால்ட் ஆறு வெவ்வேறு வண்ணங்களில் வழங்கப்படும் மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து அலாய் வீல்களுக்கு இரண்டு வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கும்.

    வழக்கமான கதவு கைப்பிடிகள், ஃபாஸ்ட்பேக் ரூஃப்லைன், வீல் ஆர்ச்களில் பிளாக் கிளாடிங் மற்றும் முழு LED லைட் பேக்கேஜ் ஆகியவை இதன் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.

    போட்டி மற்றும் துவக்கம்

    பசால்ட் இந்த ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிட்ரோயனின் புதிய பட்ஜெட் ரக ஃபிளாக்ஷிப் மாடல் ஆகும்.

    இது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

    இந்த காரில் உள்ள புது அம்சங்கள் இந்நிறுவனத்தின் மற்ற 3 சிட்ரோயன் பட்ஜெட் கார்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோட்டார் 168bhp மற்றும் 350Nm பீக் டார்க்கை உருவாக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
    • டாடா கர்வ் மாடலானது ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று ICE மற்றும் EV ஆகிய இரண்டிலும் அறிமுகமாக உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை MY2023 மாடல்களுக்கு குறிப்பிட்ட ஸ்டாக் உள்ள வரை மட்டுமே வழங்கப்படும்.

    சஃபாரியின் MY2023 மாடல்களைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1.60 லட்சம் வரையிலான சலுகைகளை அனைத்து மாடல்களிலும் பெறலாம்.

    ஹேரியர் மாடலைப் பொறுத்த வரை ரூ.1.45 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது, டாடா சஃபாரி மற்றும் ஹேரியர் ஆகியவை எக்ஸ் ஷோருமில் ஆரம்ப விலையாக முறையே ரூ. 16.19 லட்சம் மற்றும் ரூ. 14.99 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


    இந்த 2 மாடல்களும் 2.0-லிட்டர் க்ரையோடெக் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சினுடன் இணைந்து ஆறு-வேக மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. இந்த மோட்டார் 168bhp மற்றும் 350Nm பீக் டார்க்கை உருவாக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே, டாடா கர்வ் மாடலானது ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று ICE மற்றும் EV ஆகிய இரண்டிலும் அறிமுகமாக உள்ளது. டாடாவின் இந்த புதிய கூபே SUV ஆனது, பிராண்டின் புதிய 1.2-லிட்டர் Hyperon டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • பூட் பகுதியில் போதுமான இடம் கிடைக்கும்.

    ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் i10 நியோஸ் மாடலின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. புது வேரியண்ட் கிராண்ட் i10 நியோஸ் Hy CNG டுயோ என அழைக்கப்படுகிறது. இந்த மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 75 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    Hy CNG டுயோ ஏற்கனவே ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பில் CNG டேங்க் இரண்டாக பிரிக்கப்பட்டு கீழ்புறமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிகளவு இடத்தை அடைத்துக் கொள்ளாமல், பூட் பகுதியில் போதுமான இடம் கிடைக்கும்.

     


    இந்த காரில் 1.2 லிட்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 68 ஹெச்பி பவர், 95.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த காரில் CNG மோட் கார் சென்று கொண்டிருக்கும் போதுதான் இயக்க முடியும்.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த காரில் 6 ஏர்பேக், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, டே & நைட் ரியர்வியூ மிரர், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் HY CNG டுயோ மேகனா ரூ. 7 லட்சத்து 75 ஆயிரம்

    ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் HY CNG டுயோ ஸ்போர்ட்ஸ் ரூ. 8 லட்சத்து 30 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்துக்கு நல்ல பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
    • மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபல நிறுவனமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. இந்நிறுவனத்தின் எர்டிகா மாடல் குளோபல் என்கேப் (Global NCAP) நடத்திய கிராஷ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. விபத்துக்கான சோதனையில் மாருதி சுசுகி எர்டிகா 1 நட்சத்திரத்தைப் பெற்றுள்ளது.

    இந்த எம்பிவி மாடல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது ஆகும். இதில் பாதுகாப்பிற்கு முன்புறம் இரண்டு ஏர்பேக்குகள், ESC, சீட்பெல்ட் நினைவூட்டல் மற்றும் லோட் லிமிட்டருடன் கூடிய சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின் வரிசையில் ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்களையும் பெறுகிறது.


     

    பெரியவர்களுக்கான பாதுகாப்பில் எர்டிகா மாடல் 23.63 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பில் 19.40 புள்ளிகளையும் பெற்றுள்ளது. சோதனை முடிவுகளில், ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்துக்கு நல்ல பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஃபுட்வெல் மற்றும் பாடிஷெல் ஆகியவை நிலையற்றவை என்றும் மேலும் ஏற்றுதல்களைத் தாங்கும் திறன் இல்லை என்றும் மதிப்பிடப்பட்டது.

    எர்டிகாவின் உயர் வகைகளில் பக்கவாட்டு ஏர்பேக்குகள், உயரத்தை சரிசெய்யக்கூடிய முன் சீட்பெல்ட்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. எர்டிகா மாடலில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 102 ஹெச்பி பவர் மற்றும் 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5,21,868 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
    • உள்நாட்டு சந்தையில் மட்டும் 4,51,308 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் ஜூன் மாதம் வரையிலான 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் கடந்த ஆண்டைவிட நிகர லாபம் 47 சதவீதம் உயர்ந்து 3650 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளது.

    செலவு குறைப்பு முயற்சிகள், பொருட்களின் சாதகமான விலைகள் மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றின் முக்கியமான காரணங்கள் இந்த லாபத்தை ஈட்ட முக்கிய காரணம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2024 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 2,485 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 30,845 கோடி ரூபாய் நிகர விற்பனையாக இருந்த நிலையில் தற்போது 33,875 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    தற்போது ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5,21,868 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலாண்டை விட 5 சதவீதம் உயர்வாகும்.

    உள்நாட்டு சந்தையில் 4,51,308 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு விற்பனையில் இது கடந்த ஆண்டு இதே காலாண்டை விட 4 சதவீதம் உயர்வாகும்.

    2031 வரைக்கும் ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வரவிருக்கின்றன. வருடத்திற்கு ஒரு புது மாடல் என்ற வகையில் வரவிருக்கிறது. ஏற்றுமதி விற்பனை 12 சதவீதம் (70,560) அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் ஜிம்னி (Jimny) சொகுசு கார் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தும் பல கார்களில் கர்வ் ஐசி எஞ்சின் வேரியண்ட் இடம்பெற்றுள்ளது.
    • மெர்சிடிஸ் பென்ஸ் வருகிற 8-ந்தேதி இரண்டு புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நாளை தொடங்க உள்ள ஆகஸ்ட் மாதம்த்தில் பட்ஜெட் மற்றும் சொகுசு ரகங்களை சேர்ந்த பலவித கார்கள் வெளிவர உள்ளன. அவை குறித்து பார்ப்போம்...

    நிசான் எக்ஸ்-டிரெயில்

    2024 நிசான் எக்ஸ்-டிரெயில் 1.5-லிட்டர், மூன்று சிலிண்டர், டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கும். இந்த எஞ்சின் 161 ஹெச்பி பவர் மற்றும் 300 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் சிவிடி (CVT) கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார்ல் லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா கர்வ் ICE

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தும் பல கார்களில் கர்வ் ஐசி எஞ்சின் வேரியண்ட் இடம்பெற்றுள்ளது. வருகிற 7-ந்தேதி அறிமுகமாக உள்ள கர்வ் ICE பல்வேறு அம்சங்களைப் பெற்றுள்ளது. டிராஸ்மிஷன் ஆப்ஷன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் DCT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் 1.2லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களை கொண்டிருக்கலாம்.

    டாடா கர்வ் EV

    டாடா கர்வ் எலெக்ட்ரிக் சில மாற்றங்களுடன் ICE மாடலை தவிர்த்து தனித்து நிற்கும். இதில் ADAS சூட், பனோரமிக் சன்ரூஃப், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட், ஏசி கன்ட்ரோல்களுக்கான டச்-அடிப்படையிலான பட்டன்கள், இயங்கும் டெயில்கேட் மற்றும் பல அம்சங்கள் அடங்கும். இந்த கார் ஒருமுறை முழு சார்ஜில் 600 கிலோ மீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கேப்ரியோலெட் (Cabriolet)

    மெர்சிடிஸ் பென்ஸ் வருகிற 8-ந்தேதி இரண்டு புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. CBU முறையில் இந்தியா கொண்டுவரப்படும் இரண்டு கார்களில் ஒன்று முற்றிலும் புதிய கேப்ரியோலெட் ஆகும். இது நான்கு இருக்கைகள் கொண்ட முதல் கன்வெர்ட்டிபிள் காராக அமைக்கப்பட்டுள்ளது.

    இது மெர்சிடிஸ் பென்ஸ்-இன் டாப் எண்ட் வெஹிக்கிள் (TEV) பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த மாடலில் 3.0-லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட டர்போ-பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 375 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மெர்சிடெஸ் AMG GLC 43 4மேடிக் கூபே ஃபேஸ்லிஃப்ட்

    புது மாற்றங்கள் செய்யப்பட்ட GLC மாடல் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாக உள்ளது. 2023 செப்டம்பரில் வெளியிடப்பட்ட GLC ஃபேஸ்லிஃப்ட், உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில மாற்றங்களை பெறுகிறது.

    இந்த கார் 3.0-லிட்டர், 6-சிலிண்டர்கள் கொண்ட டர்போ-பெட்ரோல் எஞ்சின், 2.0-லிட்டர், 4-சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த யூனிட்கள் 362 ஹெச்பி பவர், 520 நியூட்டன் மீட்டரில் இருந்து 421 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    லம்போர்கினி உருஸ் SE

    லம்போர்கினி பிராண்டின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகஸ்ட் 9-ந்தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உருஸ் SE மாடலில் 4.0-லிட்டர் ட்வின்-டர்போ V8 எஞ்சின் மற்றும் 25.9kWh பேட்டரி பேக் ஒரு மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 800 ஹெச்பி பவர் மற்றும் 950 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.

    மஹிந்திரா தார் ரோக்ஸ்

    இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்களில் ஒன்று மஹிந்திரா தார் 5-டோர் மாடல். இப்போது இந்த கார் "தார் ரோக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்கப்படுகிறது. மாருதி ஜிம்னி போன்றவற்றுக்கு போட்டியாக அமைக்கப்பட்டுள்ள தார் ரோக்ஸ், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, எம்ஜி ஆஸ்டர், கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட் மற்றும் பல நடுத்தர அளவிலான எஸ்யூவிகளுக்கு போட்டியாக அமையும்.

    2024 தார் ரோக்ஸ்ஆனது பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பின்புற ஏசி வென்ட்கள், ADAS சூட் மற்றும் வென்டிலேட்டெட் முன்புற இருக்கைகள் என பல புதிய அம்சங்களைப் பெற்றுள்ளது. இந்த கார் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் பசால்ட்

    ஆகஸ்ட் 2-ந்தேதி சிட்ரோயன் தனது பாசால்ட் ப்ரோடக்ஷன் வெர்ஷன் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது. மேலும் இந்த காரின் விலையை மாத இறுதிக்குள் வெளியிடலாம். இந்த கார் CMP மாடுலர் பிளாட்ஃபார்ம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கூபே SUV ஆனது C3 ஏர்கிராசை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பாசால்ட்டின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக ஸ்பிலிட் ஹெட்லேம்ப்கள், ஸ்லோப்பிங் ரூஃப்லைன், டூயல்-டோன் அலாய் வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்கள், டூயல்-டோன் இன்டீரியர் ஆகியவை அடங்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2024 கர்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வரும்.
    • காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என டாடா நிறுவனம் கூறுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி தனது புது எலெக்ட்ரிக் கார் டாடா கர்வ் EV-யை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. டாடா கர்வ் EV பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

    புதிய கர்வ் EV ஆனது பனோரமிக் சன்ரூஃப் கொண்டிருக்கும். இந்த சன்ரூஃபின் டபுள் பேனல் உட்புறப் பிரிவின் இருபுறமும் சுற்றுப்புற விளக்குகளை கொண்டிருக்கிறது.

    இத்துடன் 4-ஸ்போக் டூயல்-டோன் ஸ்டீயரிங் வீல், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள், கருப்பு மற்றும் பழுப்பு நிற உட்புற தீம், ஏசி செயல்பாடுகளுக்கான தொடுதிரை கட்டுப்பாடுகள், குரோம் கதவு கைப்பிடிகள் மற்றும் ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் ஆகியவை கொண்டுள்ளது.

    இதுதவிர கர்வ் எலெ்க்ட்ரிக் மாடலில் LED விளக்குகள், டூயல்-டோன் அலாய் வீல்கள், சாய்வான கூரை, LED லைட் பார்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், லெவல் 2 ADAS, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புதிய 12.3-இன்ச் தொடுதிரை போன்ற அம்சங்களைப் பெறுகிறது. மேலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    2024 கர்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வரும். ஒன்று 40.5kWh யூனிட்டாகவும் மற்றொன்று 55kWh யூனிட்டாகவும் இருக்கும். இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என டாடா நிறுவனம் கூறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் 2023-24 ஆண்டு 8,475 சொகுசு கார்கள் விற்பனை.
    • கடந்தாண்டு வாங்கப்பட்ட சொகுசு கார்களின் எண்ணிக்கையை விட இது 46.2% அதிகம்.

    தமிழ்நாட்டில் ஆடி, லம்போர்கினி, பி.எம்.டபுள்யூ, ஃபெராரி, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற சொகுசு கார்களை முன்பதிவு செய்யும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு தமிழ்நாட்டில் அதிகளவிலான சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    2019-2020 ஆம் ஆண்டில் 4,187 சொகுசு கார்கள் வாங்கப்பட்ட நிலையில், 2020-21ல் 2,816 சொகுசு கார்கள் வாங்கப்பட்டன. கொரோனா நோய்த்தொற்றால் இந்த எண்ணிக்கை சற்று குறைந்தது. பின்னர் 2021-22 ஆம் ஆண்டில் 3,954 சொகுசு கார்கள் வாங்கப்பட்டன.

    பின்னர் 2022-23 ஆம் ஆண்டில் 5797 சொகுசு கார்கள் வாங்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 2023-24 ஆண்டு 8,475 ஆக அதிகரித்துள்ளது.

    இது கடந்தாண்டு வாங்கப்பட்ட சொகுசு கார்களின் எண்ணிக்கையை விட 46.2% அதிகமாகும்.

    2023-24 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1,192 பி.எம்.டபுள்யூ கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து 1,122 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் 217 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களும் 84 போர்ஷே கார்களும் 77 ஆடி கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் அதிகபட்சமாக சென்னையில் 1668 சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 4 ரோல்ஸ் ராய்ஸ் காட்களும் அடங்கும்.

    இதற்கு அடுத்ததாக கோவையில் 510 சொகுசு கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரையில் 110 கார்களும் திருநெல்வேலியில் 95 கார்களும் திருச்சியில் 65 கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கொரோனாவிற்கு பிறகு நிறைய இளம் தொழிலதிபர்கள் சொகுசு கார்களை வாங்க ஆர்வம் காட்டுவதாகவும், சொகுசு கார்களை வாங்கும் 70% பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • "சுஸுகி அக்சஸ் 125" 2,63,788 யூனிட்களை தீரும்பப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளது.
    • 52,578 சுஸுகி அவெனிஸ் யூனிட்களையும், 72,045 சுஸுகி பர்க்மேன் யூனிட்களையும் திரும்பப் பெறுகிறது.

    சுஸூகி மோட்டார் சைக்கிள் இந்தியா சுஸூகி அக்சஸ் 125 சிசி ஸ்கூட்டர்களை திருமப் பெறுவதாக அறிவித்துள்ளது.

    ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் ஜூப்பிட்டர் 124, ஹீரோ டெஸ்டினி 125 ஆகியவற்றிற்கு போட்டியாக மார்க்கெட்டில் திகழ்ந்து வருகிறது.

    "சுஸுகி அக்சஸ் 125" 2,63,788 யூனிட்களை தீரும்பப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் 2022 ஏப்ரல் 30 முதல் 2022 டிசம்பர் 3-ந்தேதி வரை தயாரிக்கப்பட்டவையாகும்.

    இக்னிஷன் காயிலில் (ignition coil) நிறுவப்பட்டு இருக்கும் உயர் டென்ஷன் கார்டு (high tension cord)-லேயே சிக்கல் இருப்பது தெரிய வந்த நிலையில் சுஸுகி அந்த முடிவை எடுத்துள்ளது.

    52,578 சுஸுகி அவெனிஸ் யூனிட்களையும், 72,045 சுஸுகி பர்க்மேன் யூனிட்களையும் திரும்பப் பெறுகிறது. மொத்தமாக 3,88,411 யூனிட்களை திரும்பப் பெற இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய இருக்கை கவர்கள், குஷன்கள், டோர் கிளாடிங் மற்றும் டோர் வைசர்கள் ஆகியவை அடங்கும்.
    • 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி.

    சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் எக்ஸ்- ஷோரூமில் ரூ.5.49 லட்சத்தில் இக்னிஸ் ரேடியன்ஸ் மாடல் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலின் உள்ளேயும், வெளியேயும் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது Sigma, Zeta மற்றும் Alpha வேரியன்ட்டுகளில் கிடைக்கிறது.

    எண்ட்ரி லெவல் வேரியன்ட்:

    Sigma வேரியன்ட்டை வாங்குபவர்கள் கூடுதலாக ரூ.3,650-ஐ செலுத்தினால் வீல் கவர்கள், டோர் விசர்கள் மற்றும் குரோம் டிரிம் ஆகியவை பெறலாம்.


    மிட் மற்றும் டாப்-எண்ட் வேரியன்ட்:

    Zeta மற்றும் Alpha வகைகளின் வாடிக்கையாளர்கள் ரூ. 9,500 மதிப்புள்ள பாகங்களை பெறலாம். இதில் புதிய இருக்கை கவர்கள், குஷன்கள், டோர் கிளாடிங் மற்றும் டோர் வைசர்கள் ஆகியவை அடங்கும்.

    மாருதி இக்னிஸ் ரேடியன்ஸ் எடிஷன் எஞ்சின் ஆப்ஷன்கள்

    இக்னிஸ் ரேடியன்ஸ் எடிஷன் நிலையான ஹேட்ச்பேக்கில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 82bhp மற்றும் 113Nm இழுவிசையை உற்பத்தி செய்கிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    ×