கார்

வாகனங்கள் விலையை 4% வரை உயர்த்தும் மாருதி சுசுகி
- கடந்த பிப்ரவரி 1-ந்தேதி முதல் பல்வேறு மாடல்களுக்கு 32500 ரூபாய் வலை உயர்த்தப்படும் எனத் தெரிவிந்தது.
- இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 4 சதவீதம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்ளில் ஒன்று மாருதி சுசுகி. இந்த நிறுவனம் பல்வேறு நோக்கத்திற்காக வாகனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது.
தற்போது உற்பத்தி செலவு மற்றும் செயல்பாட்டு செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான 4 சதவீதம் வரை வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த விலை ஏற்றம் அமலுக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும்.
கடந்த ஜனவரி மாதம், பிப்ரவரி 1-ஆம் தேதியில் இருந்து பல்வேறு மாடல்களுக்கு 32,500 ரூபாய் வரை விலை உயர்த்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் தற்போது அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் ஒரு பங்கு 11578.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று பங்கின் விலை 0.61 சதவீதம் உயர்ந்தது.
Next Story