சினிமா செய்திகள்

VIDEO: "மறைக்க எதுவுமில்லை.." சமந்தா முதுகில் குத்திய டாட்டூ மாயம் - பின்னணியில் முன்னாள் கணவர்!
- 'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல் மலர்ந்தது.
- நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலை மணந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.
பிரபல நடிகை சமந்தா தனது முதுகில் குத்தியிருந்த 'YMC' டாட்டூ காணாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த 'ஏ மாயா சேசாவே' (YMC) திரைப்படத்தின் நினைவாக இந்த டாட்டூவை அவர் குத்தியிருந்தார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில் இந்த டாட்டூ இல்லாததால், அதை அவர் நிரந்தரமாக நீக்கிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமந்தா தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் மெரூன் நிற முதுகு இல்லாத உடையணிந்து "மறைக்க எதுவுமில்லை" என்று ஸ்க்ரீனில் எழுதினார். ஆனால், ரசிகர்களின் கவனம் அவரது மேல் முதுகில் இருந்த 'YMC' டாட்டூவின் மீது விழுந்தது. டாட்டூ தெரியாதது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
நெட்டிசன்கள் இது குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். "சமந்தா தனது YMC டாட்டூவை அகற்றிவிட்டார்" என்று ஒருவர் கூற, மற்றொருவர் "விளம்பரப் படப்பிடிப்பிற்காக மேக்கப்பால் மறைத்திருக்கலாம்" என்று கருத்து தெரிவித்தார்.
விவாகரத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து சமந்தா இந்த டாட்டூவை அகற்ற முடிவு செய்திருக்கலாம் என பலர் நம்புகின்றனர்.
'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது தொடங்கிய சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல், 2017 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.
தென்னிந்திய திரையுலகின் பிரபல ஜோடியாக அறியப்பட்ட இவர்கள், கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர்.
தற்போது, நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலை மணந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். சமந்தா இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் டேட்டிங் செய்வதாக கிசு கிசுக்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.