சினிமா செய்திகள்

பத்மபூஷன் விருது பெற்ற அஜித் குமாருக்கு பவன் கல்யாண் வாழ்த்து
- அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
- அஜித் குமார் ஃபார்முலா- 2 பந்தய வீரராக சிறந்து விளங்குகிறார்.
டெல்லியில் நேற்று நடிகர் அஜித்குமாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருது வழங்கினார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.
அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழையாக பொழிந்தது.
இந்த நிலையில், அஜித் குமாருக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
பத்ம பூஷண் விருதைப் பெற்ற புகழ்பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார்.
திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் அவர் பதித்துள்ளார். ஃபார்முலா- 2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அஜித் குமார் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.