என் மலர்

    ஜம்மு காஷ்மீர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுகம் சவுத்ரி தனது பட்டாலியன் தலைமையகமான பந்த்சௌக்கில் இருந்து திடீரென காணாமல் போனார்.
    • பந்தசௌக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் முகாமில் இருந்து எல்லைப் பாதுகாப்பு படை (BSF) வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

    தகவலின்படி, நேற்று (ஜூலை 31) இரவு, BSF வீரர் சுகம் சவுத்ரி தனது பட்டாலியன் தலைமையகமான பந்த்சௌக்கில் இருந்து திடீரென காணாமல் போனார்.

    BSF உடனடியாக சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆனால் அந்த அவர் குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, பந்தசௌக் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.

    காவல்துறையினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து அவரை தேடி வருகின்றனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தால், சட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும் என அரசு மகிழ்ச்சியாகிவிடும்.
    • நீங்கள் அவையை நடத்த அனுமதிக்கவில்லை என்றால், பிறகு ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள்?.

    பாராளுமன்ற நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காதது, அரசுக்கு சட்டங்களை நிறைவேற்ற எளிதாக இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற விவகாரத்தை துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-

    அவை செயல்படுவதற்கு இடையூறு செய்வதை நான் எதிர்க்கிறேன். நீங்கள் அவையை நடத்த அனுமதிக்கவில்லை என்றால், பிறகு ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள்?.

    பாராளுமன்றத்தில் அரசுக்கு முன்பாக தேசிய, சர்வதேச, உள்நாட்டு பிரச்சினைகளை எழுப்புவீர்கள் என்பதுதான் அவைக்குள் நுழைவதற்கான அர்த்தம். அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தால், சட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும் என அரசு மகிழ்ச்சியாகிவிடும். ஆகவே, வெளிநடப்பு அரசுக்கு உதவுவதாகவே இருக்கும். அவர்களுக்கு எதிராக இருக்காது.

    இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த மெகா திட்டத்திற்கு தோராயமாக ரூ. 22,704 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
    • செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் அணை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளைக் காரணம் காட்டி, திட்ட கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்தியது.

    சிந்து நதி ஒப்பந்தத்தின்படி, பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் நதிகளின் நீரை இந்தியா கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் சிந்து, செனாப் மற்றும் ஜீலம் நதிகளின் நீரை பாகிஸ்தான் கட்டுப்படுத்துகிறது.

    பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் ஒரு பகுதியை இந்தியா தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்று ஒப்பந்தம் கூறுகிறது.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் மீது தனது மிகப்பெரிய நீர்மின் திட்டமான 1856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாவல்கோட் நீர்மின் திட்டத்தை கட்ட இந்தியா தயாராகி வருகிறது.

    இந்த மெகா திட்டத்திற்கு தோராயமாக ரூ. 22,704 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் 1980களிலேயே தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு தொழில்நுட்ப காரணங்கள், நடைமுறை சிக்கல்களால் இந்த திட்டம் 40 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.

    செனாப் நதியின் நீர் ஓட்டத்தில் அணை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலைகளைக் காரணம் காட்டி, திட்ட கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் உடன் மோதல் நிலவுவதால் இதை பயன்படுத்தி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

    தேசிய நீர்மின் கழகம் (NHPC) இந்த திட்டத்திற்கான டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 10 ஆகும். இந்த திட்டம் NHPC மற்றும் ஜம்மு காஷ்மீரின் மின் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியாகும்.

    இந்த திட்டம் 847 ஹெக்டேர் வன நிலத்தை அழிக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வன ஆலோசனை குழு, திட்ட கட்டுமானத்திற்காக சுமார் 3000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வன நிலத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை சுட்டு கொன்றனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 3 பயங்கரவாதிகளை நேற்று முன்தினம் இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. தொடர்ந்து அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு கோடு (எல்.ஓ.சி.) பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை சுட்டு கொன்றனர். இதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ராகுல் கந்து ஏற்றுள்ளார்.
    • குழந்தைகள் பட்டம் பெறும் வரை இந்த உதவித் தொகை தொடரும்

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம்சாட்டிய இந்தியா, இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்தது. அதன்படி முப்படைகளும் இணைந்து கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கோபம் அடைந்த பாகிஸ்தான், இந்தியா- பாகி்ஸ்தான் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

    இந்த தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் 27 பேர் உயிரிழந்தனர்.70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், ரஜோரி எல்லையில் வாழும் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சேதமடைந்தன.

    இதனையடுத்து பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, "இந்திய - பாகிஸ்தான் சண்டையில் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ராகுல் கந்து ஏற்றுள்ளார். இந்த உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும். குழந்தைகள் பட்டம் பெறும் வரை இந்த உதவித் தொகை தொடரும்" என்று தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோதலின்போது காஷ்மீர்தான் கஷ்டங்களை எதிர்கொண்டது.
    • எனவே ஒரு காஷ்மீரி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரவில்லை என்றால், வேறு யார் கோருவார்கள்?.

    பாகிஸ்தானுடன் போர் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி நல்லிணக்கத்திற்கான பாதையை மேற்கொள்வது பற்றி பேசுங்கள் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மக்கள் உங்களுடைய எதிரி இல்லை என்பதை மத்திய அரசுக்கு சொல்ல விரும்புகிறேன். நாங்கள் கண்ணியத்துடன் கூட அமைதியை விரும்புகிறோம். நட்பு மூலமாக அமைதியை விரும்புகிறோம். நாங்கள் போர் மூலம் அமைதியை விரும்பவில்லை. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது காஷ்மீரில் நடந்தது என்ன? என்பதை விளக்குவதற்காக நீங்கள் எம்.பி.க்கள் குழுவை உலக நாடுகளுக்கு அனுப்பினீர்கள்.

    மோதலின்போது காஷ்மீர்தான் கஷ்டங்களை எதிர்கொண்டது. எனவே ஒரு காஷ்மீரி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரவில்லை என்றால், வேறு யார் கோருவார்கள்?.

    நம்முடைய நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமென்றால், போரை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேச வேண்டும். உலகில் உங்கள் திறமையை நிரூபிக்கவும், சீனாவை வெல்லவும் விரும்பினால், ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நல்லிணக்கப் பாதையை மேற்கொள்ளுங்கள்.

    இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு பாராளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்கவுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

    ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் நடந்த தேடுதல் வேட்டையின்போது ஸ்ரீநகர் அருகே வனப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்றத்தில் இன்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ள நிலையில், பயங்கராவதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிலச்சரிவைத் தொடா்ந்து, வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    • காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய கோவில் வாரியத்துக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளாா்.

    ஜம்மு:

    ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் உள்ள திரிகூட மலையில், பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ளது. கத்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் 184.2 மி.மீ. பலத்த மழை கொட்டித் தீா்த்த நிலையில், வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் செல்லும் பழைய வழித்தடத்தின் தொடக்கப் பகுதியான பான்கங்கா என்ற இடத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் திடீா் நிலச்சரிவு ஏற்பட்டது.

    யாத்திரை தொடங்குமிடம் என்பதால், பக்தா்கள் மட்டுமன்றி கோவேறு கழுதைகள் மூலம் அவர்களை அழைத்துச் செல்லும் பணியாளா்களும் கூடியிருந்தனா். நிலச்சரிவில் இப்பணியாளர்களின் பதிவு அலுவலகமும், இரும்பு கட்டுமானங்களும் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 10 போ் காயமடைந்தனா்.

    சென்னையைச் சோ்ந்த பக்தா் உப்பன் ஸ்ரீவாஸ்தவா (70), அவரது மனைவி ராதா (66), அரியாணாவைச் சோ்ந்த ராஜீந்தா் பல்லா (70) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்களில் ஸ்ரீவாஸ்தவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நிலச்சரிவைத் தொடா்ந்து, வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனரக இயந்திரங்கள் உதவியுடன் மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று கோவில் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் குமாா் வைஷியா தெரிவித்தாா்.

    நிலச்சரிவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்-மந்திரி உமா் அப்துல்லா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சையை உறுதி செய்ய கோவில் வாரியத்துக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளாா்.

    இக்கோவிலுக்கு செல்லும் புதிய வழித்தடத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணியில் ராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டோடா-பர்த் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
    • ஓட்டுநர் வளைவில் கட்டுப்பாட்டை இழந்ததார்.

    ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில்  பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, டோடா நகரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள போண்டா அருகே டோடா-பர்த் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

    சுமார் காலை 9 மணியளவில்,  25 பேருடன் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் ஓட்டுநர் வளைவில் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் சாலையிலிருந்து விலகி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில், முகமது அஷ்ரப் (35), மங்க்தா வாணி (51), அட்டா முகமது (33), தாலிப் ஹுசைன் (35), மற்றும் ரஃபீகா பேகம் (60) ஆகியோர் உய்ரில்நந்தனர்.

    மேலும், காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களில் ஐந்து வயது குழந்தை ஒன்று சிறப்பு சிகிச்சைக்காக ஜம்முவுக்கு மாற்றப்பட்டுள்ளது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.
    • பாதுகாப்புப் படையினர் அங்கு தங்குவதற்கு இடமோ வசதிகளோ இல்லை.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா முக்கிய கருத்துக்களை பேசியுள்ளார் .

    ஐந்து ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு, தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், மனோஜ் சின்ஹா தனது தவறை ஒப்புக்கொண்டார்.

    "இது பாகிஸ்தானால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல். இந்தத் தாக்குதல் காஷ்மீரின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வகுப்புவாதப் பிரிவினைகளை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அங்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்.

    பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைப்பதில்லை என்பது காஷ்மீரில் பொதுவான நம்பிக்கை. இந்தத் தாக்குதல் திறந்தவெளி புல்வெளிகளில் நடந்தது. பாதுகாப்புப் படையினர் அங்கு தங்குவதற்கு இடமோ வசதிகளோ இல்லை.

    இந்தத் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் சூழல் முற்றிலும் மோசமடைந்துவிட்டதாகக் கருதுவது தவறு. இது நாட்டின் மீதான தாக்குதல். பாகிஸ்தான் காஷ்மீரில் அமைதியையும் செழிப்பையும் விரும்பவில்லை.

    இருப்பினும், தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தகுந்த பதிலடியாக இருந்தன. பயங்கரவாதம் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதற்கு அவை சான்றாக இருந்தன. ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் எந்தத் தாக்குதல்களும் நடக்கவில்லை.

    இருப்பினும், ஜம்மு-காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது" என்று மனோஜ் சின்ஹா கூறினார்.

    இதற்கிடையில், மத்தியில் ஒருவரைப் பாதுகாக்க துணை நிலை ஆளுநர் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததாக காங்கிரஸ் விமர்சித்தது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு சட்டம் ஒழுங்கு துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • எந்த சட்டத்தின் கீழ் தடுத்து நிறுத்தினர் என்பதை விளக்க வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உமர் அப்துல்லாவை விட துணைநிலை ஆளுநர் அதிகாரமிக்கவர். போலீஸ் துறை இவரது கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

    1931ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படையை எதிர்த்து சண்டையிட்ட காஷ்மீர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் உயிரிழந்தவர்களுக்கு வருடந்தோறும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.

    அந்த வகையில் ஜூலை 13ஆம் தேதியான நேற்று முதல்வரான உமர் அப்துல்லா நேற்று அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் உமர் அப்துல்லாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சண்டையிடுவது போன்று போலீசார் தள்ளிவிட்டனர்.

    இது தொடர்பான வீடியோவை உமர் அப்துல்லா வெளியிட்டுள்ளார். மேலும் "இது நாள் உடல் ரீதியான அனுபவித்த போராட்டம். நான் சட்டத்திற்கு புறம்பாக அல்லது சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை. எந்தச் சட்டத்தின் கீழ் அஞ்சலி செலுத்துவதை தடுக்க சட்ட பாதுகாவலர்கள் முயற்சி செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1992ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கால் ஏரி முற்றிலும் சிதைந்துபோனது.
    • பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் தற்போது தாமரை பூக்கள் மலர்ந்துள்ளன.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஹராமுக்த் மலை அடிவாரத்தில் இருந்து பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் நகர் வரை 24 கி.மீ. தூரத்திற்கு (200 ச.கி.மீ.) வுலார் என்ற ஏரி பரந்து விரிந்துள்ளது.

    இந்த ஏரி சுத்தமான நீரை கொண்ட 2ஆவது ஆசிய ஏரி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ஏரியில் தாமரை பூத்துக் குலுங்கும். போர்வை போர்த்தியது போல் ஏரி காட்சி அளிக்கும். இந்த ஏரிக்கு கடந்த 1992ஆம் ஆண்டு சோதனை ஏற்பட்டது.

    கடந்த 1992ஆம் ஆண்டு கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரி அதன் உருவத்தை இழந்தது. ஏரி முழுவதும் வண்டல் மண்ணால் சூழப்பட்டது. இதனால் தாமரை மலர்களும் அழிந்துபோனது. பல்வேறு அமைப்புகள் மீண்டும் தாமரை மலர்கள் வளர முயற்சி மேற்கொண்டன. ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

    ஏரியில் உள்ள வண்டல் மணல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது தாமரை விதைகள் தூவப்பட்டன. தற்போது தாமரை பூத்துக் குலுங்கி காட்சி அளிக்கின்றன. சுமார் 30 வருடங்கள் கழித்து தாமரைகள் ஏரியை போர்வையால் போர்த்தியபோல் காட்சி அளிக்கின்றன.

    ×