என் மலர்

    உத்தரப் பிரதேசம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பதிலுக்கு 'ஐ லவ் மகாதேவ்' பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பேரணி நடைபெற்றது.

    இந்த மாத தொடக்கத்தில் மீலாதுன் நபியை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் கான்பூரில் 'ஐ லவ் முஹமது' (I Love Mohammad) என்ற பேனர் வைக்கப்பட்டது சர்ச்சையானது.

    இதுதொடர்பாக உத்தரப் பிரதேச போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்ததே சர்ச்சைக்கு காரணம். இதைத்தொடர்ந்து உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் பல நகரங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு இந்து அமைப்பினர் 'ஐ லவ் மகாதேவ்' பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ''ஐ லவ் முஹமது' என்பது குற்றமா என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் உ.பி.போலீசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். 

    இதுதொடர்பாக பல்வேறு நகரங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    'ஐ லவ் முஹமது' பதாகைகள், சுவரொட்டிகள் தொடர்பாக கடந்த சில வரங்களாகவே வட மாநிலங்களில் இந்து குழுக்களுக்கும் இஸ்லாமிய குழுக்களுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

    இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியில் சிலர் போலீசார் மீது கற்களை வீசியதால் வன்முறை ஏற்பட்டது. போலீசார் பேரணியை கலைக்க தடியடி நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் 10 போலீசார் காயமடைந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.

    இதுவரை, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

    இந்த தொடர் போராட்டங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் காவல்துறையினரைத் தாக்குதல் மற்றும் கலவரத்தில் ஈடுபடுதல் போன்ற பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மொத்தம் 1700 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்றைய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த உள்ளூர் மதத்தலைவரும் இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான தௌகிர் ராசாவை போலீசார் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர்.

    ஐ லவ் முஹம்மது' பிரச்சாரத்தை ஆதரித்து அவர் செய்த வீடியோ அழைப்பிற்குப் பிறகே நிலைமை பதற்றமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போதை மறுவாழ் மையத்தில் குறைந்த அளவு உணவு வழங்கப்பட்டதால் கடுங்கோபம் அடைந்துள்ளார்.
    • கொஞ்சம் காய்கறி, சப்பாத்தி, பிஸ்கட் போன்றவைகளை மட்டுமே வழங்கியுள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் 35 வயதான சச்சின் என்பரை உறவினர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    இவருக்கு குறைந்த அளவு உணவே வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஒருநாள் முழுவதும் குறைந்த அளவு காய்கறிகள், சில சப்பாத்திகள் மட்டுமே வழங்கியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்து உறவினர்கள் உணவு கொண்டு வந்தால், கண்ணில் காட்டமாட்டார்களாம். சில நேரங்களில் ஒரேயோரு பிஸ்கட் மட்டுமே வழங்குவார்களாம்.

    இதனால் கோபம் அடைந்த சச்சின் ஸ்பூன், டூத் பிரஷ், பேனா போன்றவற்றை கழிவறைக்கு எடுத்துச் சென்று, அங்குவைத்து இரண்டு மூன்ற தூண்டுகளாக உடைத்து சாப்பிட்டுள்ளார். சில நேரம் உள்ளே செல்லவில்லை என்றால், தண்ணீர் குடித்து விழுங்குவாராம்.

    இதனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு வயிறு வலியால் துடித்துள்ளா். அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை நடத்தும்போது, வயிற்றுக்குள் ஸ்டீல் ஸ்பூன், டூத்பிரஷ் போன்றவை இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.
    • மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும்.

    இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தால் மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு ரெயில் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இது உலகின் மிக ஆடம்பரமான ரெயில்களில் ஒன்றாகும்.

    இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு சிறப்பு ரெயிலில் பயணம் செய்தார். அவர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல இந்த ரெயிலில் பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களுக்கான ஜனாதிபதி அறை, டீலக்ஸ் அறைகள், உணவகங்கள், ஓய்வறைகளைக் கொண்ட பெட்டிகள் சொகுசு ரெயிலில் உள்ளன.

    இன்று காலை 8 மணிக்கு திரவுபதி முர்மு பயணம் செய்த மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் உத்தரபிரதேசத்தின் பிருந்தாவன் சாலை ரெயில் நிலையத்தை காலை 10 மணிக்கு சென்றடைந்தது.

    பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீபாங்கே பிகாரி கோவில், நிதிவன்-குப்ஜ கிருஷ்ணா கோவில் ஆகியவற்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் மற்றும் பூஜை செய்தார். பின்னர் அவர் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் வழிபடுகிறார். அதன்பின் மாலையில் அந்த சிறப்பு ரெயிலில் டெல்லிக்கு புறப்படுகிறார்.

    இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும். மூத்த ரெயில்வே ஊழியர்களுக்காக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக 2 என்ஜின்கள் இருக்கும். ஒரு என்ஜின் இயங்கும் அதே வேளையில், மற்றொரு என்ஜின் தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்ய உடன் பயணிக்கும் என்றார். ஜனாதிபதியின் இந்த பயணத்தை தொடர்ந்து ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பிற ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டன.

    கடந்த 2023-ம் ஆண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு ரெயில் மூலம் ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து தனது சொந்த ஊரான ராய்ரங்பூருக்குப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா போன்ற ஒரு நாடு யாரையும் சார்ந்து இருப்பது இனி ஏற்றுக் கொள்ள முடியாதது.
    • இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும்.

    பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடந்த உத்தரபிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-யை தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மோடி பார்வையிட்டார். இக்கண்காட்சியில் ரஷியாவும் பங்கேற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    உலகளவில் பல்வேறு இடையூறுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருந்து வருகிறது. எந்த தடைகளும் நம்மை தடுக்கவில்லை.

    இந்தியா போன்ற ஒரு நாடு யாரையும் சார்ந்து இருப்பது இனி ஏற்றுக் கொள்ள முடியாதது.

    சுயசார்பு இந்தியா திட்டத்தில் அரசு கவனம் செலுத்துகிறது. சிப் முதல் கப்பல் வரை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாடு சுயசார்புடையதாக மாற வேண்டும், ஒவ்வொரு தயாரிப்பும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும்.

    நமது ஆயுத படைகள் மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்புகின்றன. இந்தியாவில் ஒரு துடிப்பான பாதுகாப்பு த் துறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ரஷியாவுடன் இணைந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏ.கே-203 துப்பாக்கிகளின் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும். ஒவ்வொன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற அடையாளத்தைக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறோம்.

    அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய சிறகுகளை வழங்க உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும்.

    2014-ம் ஆண்டுக்கு முந்தைய தோல்விகளை மறைக்க, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்கின்றன. இந்திய மக்களின் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரித்துள்ளோம். அத்துடன் நாங்கள் நிறுத்தப் போவதில்லை. நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்து, வரிகளை குறைப்பதைத் தொடர்வோம். ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களின் செயல்முறை வரும் நாட்களிலும் தொடரும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த அரசுத் துறைகள் ஏன் தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கவில்லை என புரியவில்லை.
    • மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோவில் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

    1992 இல் இந்து அமைப்பு கும்பல்களால் உத்தரப் பிரதேச அயோத்தியில் அமைந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

    அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் அதற்கு பதிலாக வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்காக அயோத்தி மாவட்டத்தின் சோஹாவல் தாலுகாவில் உள்ள தன்நிபூர் கிராமத்தில், மாநில சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, 2020 ஆகஸ்ட் 3 அன்று அப்போதைய மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா அந்த நிலத்தை சன்னி மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தார்.

    மசூதி அறக்கட்டளை, மசூதி மற்றும் பிற வசதிகள் கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு 2021 ஜூன் 23 அன்று அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்தது. அனால் அதன் பின் எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.

    இதுதொடர்பாக மத்திய பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவுக்கு கடந்த செப்டம்பர் 16 அன்று அயோத்தி மேம்பாட்டு ஆணையம் பதில் அளித்துள்ளது.

    அந்த பதிலில், மசூதி அறக்கட்டளையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

    பொதுப்பணித் துறை, மாசுக்கட்டுப்பாடு, சிவில் விமானப் போக்குவரத்து, நீர்ப்பாசனம், வருவாய், நகராட்சி, மாவட்ட ஆட்சியர் மற்றும் தீயணைப்புத் துறை போன்றவற்றிலிருந்து தடையில்லாச் சான்றிதழ்கள் பெறப்படாததைக் காரணம் காட்டி இந்த நிராகரிப்பு நடந்துள்ளது.

    மேலும், இந்த விண்ணப்பம் மற்றும் ஆய்வு கட்டணமாக மசூதி அறக்கட்டளை ரூ. 4,02,628 செலுத்தியுள்ளதாகவும் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூ

    இந்த நிராகரிப்பு குறித்து மசூதி அறக்கட்டளையின் செயலாளர் அதர் ஹுசைன் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் மசூதிக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.

    உத்தரபிரதேச அரசு நிலத்தை ஒதுக்கியது. இந்த அரசுத் துறைகள் ஏன் தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கவில்லை, மேம்பாட்டு ஆணையம் ஏன் மசூதியின் திட்டத்தை நிராகரித்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று தெரிவித்தார்.

    அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோவில் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில் அதற்கு மாற்றாக வழங்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதற்கு உ.பி. பாஜக அரசு சார்பில் மெத்தனம் காட்டப்படுவது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது.
    • சாதிய அடையாளங்களை நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சாதிய பெருமிதம் என்பது தேச விரோதம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது. ஆகவே சாதிய அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

    அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மாநில அரசு இதற்கான பல்வறு விதிமுறைகளை பிறப்பித்துள்ளது.

    அதாவது உத்தரபிரதேசத்தில் சாதி சார்ந்த ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதிப் பெயர், சாதிய கோஷங்களை வாகனத்தில் ஒட்டினால் அபராதம். விதிக்கப்படும் என்றும் சாதிய அடையாளங்களை பெருமைப்படுத்தும் பலகைகளை கிராமங்களின் பொதுவெளியில் இருந்து அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    காவல்துறையின் நோட்டிஸ் போர்டு மற்றும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சாதி பெயரை குறிப்பிடாமல் சம்பந்தப்பட்ட நபரின் அப்பா பெயரை அடையாளத்திற்கு குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் சாதிய வன்கொமை வழக்குகளில் மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரேஷ்மாவும் பதிலுக்கு சண்டையிடவே கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவரது மாமியார் ரேஷ்மாவை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்.
    • ரேஷ்மா உதவி கேட்டும் அவரது மாமியார் கதவை திறக்கவில்லை.

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஷாநவாஸ், ரேஷ்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதிலிருந்தே கணவன் ஷாநவாஸ் குடும்பத்தினருக்கும், மனைவி ரேஷ்மா குடும்பத்தினருக்கும் வரதட்சணை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    கணவன் வீட்டார் கேட்கும் போதெல்லாம் பெண் வீட்டார் அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில ரேஷ்மாவின் மாமியார் ரூ. 5 லட்சம் கூடுதல் வரதட்சணையாக கேட்டுள்ளார். ஆனால் பெண் வீட்டிலிருந்து ரூ.1.5 லட்சமே கொடுத்துள்ளனர். இதனால் ரேஷ்மாவின் மாமியார் ஆத்திரத்தில் இருந்து வந்தார். ரேஷ்மாவை அவர் தினமும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.

    ரேஷ்மாவும் பதிலுக்கு சண்டையிடவே கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அவரது மாமியார் ரேஷ்மாவை ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். அந்த அறையின் சிறு துளை வழியே ஒரு பாம்பையும் விட்டார். பாம்பை பார்த்து அலறிய ரேஷ்மா பாம்பிடம் இருந்து தப்பிக்க இரவு முழுவதும் போராடினார்.

    இந்த நிலையில் பாம்பு ரேஷ்மாவை கடித்தது. வலியால் அலறிதுடிப்பதை அவரது மாமியார் பார்த்து கைதட்டி சிரித்து மகிழ்ந்துள்ளார். ரேஷ்மா உதவி கேட்டும் அவரது மாமியார் கதவை திறக்கவில்லை. வலியால் துடித்தவர் எப்படியோ முயன்று செல்போனில் தனது தங்கை ரிஸ்வானாவை அழைத்து தனக்கு நடந்த கொடுமையை சொன்னார்.

    உடனே வீட்டுக்கு வந்து அக்காவின் நிலைமையை பார்த்த ரிஸ்வானா பதறிப்போனார். கணவன் வீட்டாரிடம் சண்டைப் போட்ட ரிஸ்வானா, தனது அக்காவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அக்காவின் கணவன் வீட்டாரை தண்டிக்க எண்ணிய ரிஸ்வானா போலீசில் புகார் அளித்தார். கணவன் ஷாநவாஸ், மாமியார், அவரது சகோதரர், சகோதரிகள் என அனைவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுமார் 10 மாதங்களுக்கு முன்பு, இருவரும் சேர்ந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
    • கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவரின் உதவியை நாடினார்.

    உத்தரப் பிரதேசத்தில் தனது காதலியைக் கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து ஆற்றில் வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.

    வாட்ஸ்அப்பில் வைத்த ஒரு செல்ஃபி ஸ்டேட்டஸ் மூலம் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

    கான்பூரில் 22 வயதான சூரஜ் குமார் உத்தம், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் 20 வயதுடைய உணவக ஊழியரான அகன்க்ஷாவை சந்தித்தார்.

    சுமார் 10 மாதங்களுக்கு முன்பு, இருவரும் சேர்ந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில், ஜூலை 21-ஆம் தேதி சூரஜிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அகன்க்ஷா கண்டுபிடித்தார்.

    இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சூரஜ், அகன்க்ஷாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

    கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவரின் உதவியை நாடினார்.

    இருவரும் சேர்ந்து அகன்க்ஷாவின் உடலை ஒரு கருப்பு சூட்கேஸில் வைத்து, மோட்டார் சைக்கிளில் சுமார் 95 கி.மீ. தொலைவில் உள்ள சிலாக்காட்டில் உள்ள யமுனை நதியில் வீசியுள்ளனர்.

    இந்த கொடூரமான செயலை செய்த பிறகு, ஆற்றுப் படுக்கையில் சூட்கேஸுடன் சூரஜ் ஒரு செல்ஃபி எடுத்து, அதை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

    அகன்க்ஷாவை ஜூலை 22 முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

    இதற்கிடையில், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சூரஜ் மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் ஆகியோர் குற்றவாளிகள் என தெரியவந்தது.

    இதையடுத்து, கடந்த சனிக்கிழமை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, ஆற்றில் வீசப்பட்ட அகன்க்ஷாவின் உடலைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அங்கிதாவின் சகோதரர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர்.
    • அவருக்கு அருகே பூச்சி மருந்து பாக்கெட் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

     உத்தரப் பிரதேசத்தில் காதலன் கொல்லப்பட்ட விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சஹாரன்பூர் மாவட்டத்தின் சில்ஹானா பகுதியைச் சேர்ந்த 18 வயது அங்கிதா, மகிழ் என்ற 22 வயது இளைஞரை காதலித்து வந்தார்.

    இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை மகிழ் கொலை செய்யப்பட்டார். அங்கிதாவின் குடும்பத்தினர் தான் தங்கள் மகனை கொன்றதாக மகிழின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அங்கிதாவின் சகோதரர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் காதலன் உயிரிழந்த விரக்தியில் இருந்த அங்கிதா, சனிக்கிழமை தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அருகே பூச்சி மருந்து பாக்கெட் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

    அவரது உடலை கைப்பற்றி போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
    • விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

    இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.

    இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.

    பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.

    இந்நிலையில், எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

    நாய்க்கடி தொடர்பாக புதிய விதிகளை உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ளது. அதில், முதல்முறை ஒரு நாய் மனிதரை கடிக்கும்போது, அது 10 நாட்களுக்கு விலங்குகள் மையத்தில் அடைக்கப்படும். பின் கருத்தடை செய்யப்பட்டு விடுவிக்கப்படும் என்றும் இரண்டாவது முறையாக அதே நாய் யாரையாவது கடித்தால், அது ஆயுட்காலம் முழுவதும் விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

    நாய் தூண்டுதலின் அடிப்படையில் மனிதர்களை கடித்ததா? அல்ல எந்தவித தூண்டுதலும் இல்லாமல் கடித்ததா? என்பதை கண்டறிய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அக்குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு விலங்கு நடத்தை நிபுணர் மற்றும் ஒரு நகராட்சி பிரதிநிதி ஆகியோர் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யாராவது நாயைத் தாக்கத் தூண்டுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், நாயை தத்தெடுப்பவர்கள், அதை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வதாக ஒரு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த மாதம் 23-ந்தேதி அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
    • இரு குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அக்காள்-தம்பி பாசம் குறித்து பல சினிமா படங்கள் வந்துவிட்டன. கள்ளக்காதல் வைத்திருக்கும் அக்காள் கணவரை திருத்துவதற்காக அவருடைய மைத்துனர் படம் முழுவதும் போராடுவார். முடிவில் அனைத்தும் சுபமாக முடியும்.

    இதுபோன்ற காட்சிகளை பல படங்களில் பார்த்து இருப்போம். ஆனால் உண்மையில் உத்தரபிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் செய்த செயல் அட எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா! என்று கேட்கும் வகையில் அமைந்துள்ளது.

    அதுபற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேசத்தில் பரேலி மாவட்டம் கமலுபீர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவ் குமார் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஒரே ஊரில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தபோது அவருக்கும், அவருடைய கொழுந்தியாள் கல்பனாவுக்கும் (19) இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இவர்களது விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், கடந்த மாதம் 23-ந்தேதி அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

    கேசவ் குமாரின் இந்த செயல், அவருடைய மைத்துனரான ரவீந்திரனுக்கு (22) ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அக்காள் கணவர் என்று நம்பி வீட்டுக்குள் விட்டதால், நம் தங்கையுடனே கள்ளத்தொடர்பு வைத்து, குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டாரே என்று கருதினார்.

    எனவே அக்காள் கணவரை பழிவாங்க, அவரது குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என ரவீந்திரன் திட்டமிட்டார். அவர் ஏற்கனவே கேசவ் குமாரின் 19 வயது தங்கையை காதலித்து வந்தார். அக்காள் கணவரை பழிவாங்க, அன்று மறுநாளே அவரது தங்கையை அழைத்துக்கொண்டு ரவீந்திரனும் வீட்டைவிட்டு ஓடினார்.

    இதுகுறித்து இரு குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு ஜோடிகளையும் தேடிவந்த நிலையில் அவர்கள் 4 பேரையும் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

    இதையடுத்து இரு குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்களை இரு குடும்பத்தினரும் மன்னித்து ஏற்றுக்கொண்டனர். இந்த சமரசத்தை அடுத்து இரு ஜோடிகளும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.

    பிரச்சனை சுமுகமாக முடிந்தாலும், பாதிக்கப்பட்டது என்னவோ கேசவ் குமாரின் மனைவிதான். இந்த விவகாரம் தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்காகும்.
    • ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென இரட்டிப்பாகியுள்ளது

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் மோசடி குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2026 பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டபோது, மெஹபூபா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் ஒரே முகவரியின் கீழ் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

    ஜெய்த்பூர் கிராம பஞ்சாயத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில், வீட்டு எண் 803 இல் 4,271 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்காகும். வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சோதனை செய்தபோது பிழை கண்டுபிடிக்கப்பட்டது.

    இதேபோல ஜெய்த்பூருக்கு அருகிலுள்ள பன்வாரி நகரில், 996 ஆம் எண் வீட்டில் 243 பேரும், 997 ஆம் எண் வீட்டில் 185 பேரும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென இரட்டிப்பாகியுள்ளது

    இருப்பினும், மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி ஆர்.பி. விஸ்வகர்மா, வாக்காளர்களின் பெயர்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முகவரிகள் மட்டுமே தவறாக உள்ளிடப்பட்டுள்ளன என்றும், அந்தத் தவறுகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

    தரவு உள்ளீட்டில் ஏற்பட்ட பிழை மற்றும் கிராம மக்களின் தெளிவற்ற பதிவுகள் இதற்குக் காரணம் என்று விஸ்வகர்மா தெரிவித்தார்.

    இருப்பினும், எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

    ×