என் மலர்

    காஞ்சிபுரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த குழுவினர் பருவமழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கி இருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம் பின்வருமாறு...

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 1-25) -நவிந்திரன் (ஆணையர்,காஞ்சிபுரம் மாநகராட்சி) 7397372823,

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 26-51)-ஆசிக்அலி(உதவி ஆட்சியர்) 9445000413,

    சிறுகாவேரிபாக்கம் மற்றும் திருப்புக்குழி குறுவட்டம்-வெற்றிவேல்(மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்) 9080682288,

    பரந்தூர், சிட்டியம்பாக்கம் மற்றும் கோவிந்தவாடி குறுவட்டம்-ஜோதிசங்கர்(மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்) 9443098567,

    வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-தங்கவேலு (உதவி திட்ட அலுவலர்) 7402606009,

    தென்னேரி குறுவட்டம்-பாலமுருகன்(மாவட்ட ஆய்வு குழு அலுவலர்) 9444227190, மாகரல் குறுவட்டம்-தனலட்சுமி(மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அலுவலர்) 7338801259,

    உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-கந்தன்(திட்ட அலுவலர்) 9840989921,

    திருப்புலிவனம், களியாம்பூண்டி குறு வட்டம்-சத்தியதேவி(மண்டல மேலாளர்) 9150057181,

    சாலவாக்கம் அரும்புலியூர் மற்றும் குண்ணவாக்கம் குறுவட்டம்-பாக்கியலட்சுமி (தனித்துணை ஆட்சியர்) 8220438216,

    ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-ஜெகதிசன்(மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்)-7402606004,

    மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம் குறுவட்டம்-லதா(உதவி இயக்குநர்)-8925809212,

    வல்லம் மற்றும் தண்டலம் குறுவட்டம்-பிச்சாண்டி(திட்ட அலுவலர், மகளிர் திட்டம்) 944094280

    படப்பை குறுவட்டம்-தண்டபாணி(உதவி இயக்குநர்,பஞ்சாயத்து)-7402606005,

    படப்பை குறுவட்டம்-வேதநாயகம் (மாவட்ட ஊராட்சி செயலர்) 7402606007,

    செரப்பணஞ்சேரி குறுவட்டம், மணிமங்கலம்-சுரேஷ்(நேர்முக உதவியாளர் (கணக்கு))9442745251,

    கொளப்பாக்கம் குறுவட்டம் (மௌலிவாக்கம், கொளுத்துவாஞ்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெள்ளியகரம், பரணிப்புத்தூர், சின்னப்பணிச்சேரி, பெரியப்பணிச்சேரி, சீனிவாசபுரம்) -.பாலாஜி (மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்) 9445000168,

    திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் பஞ்சாயத்து- சக்திகாவியா(மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலுவலர்) 6369131607,


    மாங்காடு குறுவட்டம் (கொல்லச்சேரி, மலையம்பாக்கம், கொழுமுனிவாக்கம், தரப்பா க்கம், இரண்டாம்கட்டளை, தண்டலம், கோவூர் சிக்கராயபுரம், மூன்றாம் கட்டளை பகுதிகள்)-உமாசங்கர்(உதவிதிட்ட அலுவலர்(வீடுகள்)7402606006,

    மாங்காடு நகராட்சி பகுதிகள் -சரவணகண்ணன் (வருவாய் கோட்டாட்சியர்) 9444964899,

    குன்றத்தூர்நகராட்சி- சீனிவாசன் (மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலஅலுவலர்)9445477826 மற்றும் பேரிடர் தொடர்பான விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 044-27237107, வாட்ஸ் அப்எண் 8056221077 தொடர்பு கொள்ளலாம்.

    இதற்கிடையே பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான காந்தி கலந்துகொண்டு அனைத்து துறை சார்ந்த ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது அமைச்சர் காந்தி கூறும்போது,வரதராஜபுரம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு அங்கு 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.

    மாவட்டத்தில் 276 ஜே.சி.பி.எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளும் செயல்படும் என்றார்.

    அப்போது செல்வம் எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்,எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
    • சாங்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றனர்.

    சாம்சாங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் உள்ள தொழிலாளர்களை திமுக கூட்டணி தலைவர்வர் சந்தித்து பேசினர்.

    இந்நிலையில், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்தித்தனர்.

    அப்போது விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், "

    சாம்சங் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராடிய நிலையில் வழக்கு போடப்பட்டுள்ளது.

    சாங்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும்" என்றார்.

    இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்" என்றார்.

    மேலும் அவர்கள், "அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தைக்கு பின்னரும், பிரச்சினை தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தாமல், பிற சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    தொழிலாளர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆரோக்கியமானது அல்ல.

    காஞ்சிபுரம் காவல்துறை, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. காஞ்சி காவல்துறையின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

    அடக்குமுறைகள் மூலம் போராட்டத்தை ஒடுக்க முடியாது. தெழிாலளர்களின் கோரிக்கைகளளை ஏற்க மறுப்பது ஏன் ? தொழிலாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.

    சாம்சங் தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததாக சி.ஐ.டி.யு. குற்றச்சாட்டு
    • போராட்டம் நடத்த போடப்பட்டிருந்து பந்தலை அகற்றிய போலீசார், தொழிலாளர்களை கைது செய்தனர்.

    சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்கர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    * பேச்சுவார்த்தை காரணமாக சாம்சங் நிறுவனம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க முன்வந்துள்ளது.

    * சம்பளத்துடன் சிறப்பு ஊக்கத்தொகை மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பணிக்காலத்தில் தொழிலாளர்கள் உயிரிட நேர்ந்தால் சிறப்பு நிவாரணத் தொகை ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும்.

    * அனைத்து தொழிலாளர்கள் சென்று ஏ.சி. பேருந்து வசதி செய்த தரப்படும். உணவு உள்ளிட்ட பல்வேறு வசிதிகள் மேம்படுத்த சாம்சங் நிறுவனம் சம்மதம்.

    * தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு.யின் பதிவு குறித்து கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    * படித்த இளைஞர்களின் எதிர்கால நலன் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சி.ஐ.டி.யு. இந்த பேராட்டத்தை கைவிடுமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    * வீடு புகுந்து கை செய்யப்படவில்லை. விபத்து நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் பிணையில் வந்துள்ளார்கள். அரசாங்கம் யாரையும் ரிமான்ட் செய்யவில்லை. அரசுக்கு அந்த நோக்கம் இல்லை.

    * சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு செல்லவில்லை. தமிழகத்தில் நிறுவனங்கள் தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை நிலவுகிறது.

    * சிஐடியு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக பார்க்கவில்லை. நாங்கள் அதை விரோமாக பார்க்கவில்லை.

    * தொழிலாளர்களுக்கு எதிராக அடக்கு முறை கையாளவில்லை. அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தப்படும்போது எந்த அரசும் எடுக்கும் நடைமுறைதான் எடுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் அந்த நடைமுறையை எடுத்துள்ளது. இந்த இடங்களில் உள்ள பல நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை தொழிலாளர் துறை பதிவு செய்துள்ளது.

    * பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்ப்பதில் தெளிவாக இருக்கிறோம்.

    இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பந்தலை போலீசார் அகற்றிய நிலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம்.
    • போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு கைது செய்ய முயற்சி செய்யவதாக குற்றச்சாட்டு.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.

    இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி சம்பள உயர்வு, சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் சாம்சங் நிறுவனத்திற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் ஒரு பிரிவினருடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில்தான் நேற்றிரவு போலீசார் போராட்ட பந்தலை அகற்றினர். இன்று காலை போராட்டத்திற்கு கலந்து கொண்ட தொழிலாளர்களை கலைந்த செல்ல வற்புறுத்தினர். அத்துடன் அவர்கள் இழுத்து கைது செய்ய முயற்சித்தனர். ஏற்கனவே முக்கிய நிர்வாகிகளை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

    இந்த நிலையில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசார் முயற்சி செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி அவசர ஆட்கொணர்வு வழக்காக விசாரிக்க வலியுறுதியுள்ளார். பிற்பகலில் விசாரிப்பதாக நீதிபதிகள் பாலாஜி மற்றும் வேல்முருகன் அமர்வு தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்றிரவு போலீசார் போராட்ட பந்தலை அகற்றினர்.
    • இத்தனை நாள் இல்லாமல், தற்போது கலைந்து போகச் சொல்வது ஏன் என போராட்டக்காரர்கள் கேள்வி.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுகளில் சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களில் இன்னொரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.

    தொடர்நது ஊழியர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்றிரவு திடீரென போலீசார் போராட்டம் நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அகற்றினர். அத்துடன் வீடு வீடாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான நபர்களை கைது செய்ததாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலையும் தொழிலாளர்கள் பந்தல் அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர். பந்தல் அகற்றப்பட்ட நிலையிலும் அதே இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். அந்த இடத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இத்தனை நாள் இல்லாமல், தற்போது கலைந்து போகச் சொல்வது ஏன் என தொழிலாளர்கள் கேள்ளி எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆபாச படங்களை காட்டி ஓரினச்சேர்க்கை.
    • உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், கருக்குப் பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது34). இவர் காஞ்சிபுரம் நில அளவை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். மேலும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திலும் நில அளவையில் பணியாற்றினார்.

    இவரது மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் ராஜேஷ் தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார்.

    அதே பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஒருவர் தனது தாயுடன் தள்ளுவண்டியில் டிபன் படை வைத்து உள்ளார்.

    கடைக்கு அடிக்கடி சென்று வரும்போது இளம் பெண்ணுடன் ராஜேசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது 4-ம் வகுப்பு படித்து வரும் இளம்பெண்ணின் 9 வயது மகள், மற்றும் 1-ம் வகுப்பு படித்து வந்த 5 வயது மகன் குகன் ஆகியோருடனும் ராஜேஷ் நெருக்கமானார்.

    இளம்பெண்ணின் ஏழ்மையை தெரிந்து கொண்ட ராஜேஷ் தனக்கு தெரிந்து அறக்கட்டளை மூலம் சிறுவனையும், சிறுமியையும் படிக்க வைப்பதாக தெரிவித்தார்.

    இதனால் இளம் பெண்ணும் ராஜேசுடன் மிகவும் நெருக்கமானார். அவரது மகன், மகளுடன் ராஜேஷ் பழுகுவதையும் தவறாக நினைக்கவில்லை.

    இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ராஜேஷ் சிறுவன் குகனை தனது வீட்டுக்கு அழைத்து சென்று செல்போனில் ஆபாச படங்களை காட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்.

    மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டினார். இதனால் சிறுவன் குகன் இதுபற்றி யாரிடமும் கூறாமல் இருந்தார்.

    இந்த நிலையில் குகனுக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தார். அவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுவன் குகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவன் தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதுபற்றி விசாரித்த போதுதான் ராஜேஷ் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட போது மறுத்து சத்தமிட்டதால் சிறுவன் குகனை தாக்கியதும் பின்னர் அவனை வீட்டில் வந்து விட்டு சென்று இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலஅளவையர் ராஜேசை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் இளம் பெண்ணின் மகளுக்கும் ஆபாச படங்களை காட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதுபற்றியும் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வான்மழை வாழ்த்திட உருவான திமுக இன்று வையகம் வாழ்த்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
    • மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.

    தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.

    அங்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, " மாநில உரிமைகளை பெற அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம்" என அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

    பிறகு, பவள விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரதிதாசன் வரிகளோடு உரையைத் தொடங்கினார்

    அப்போது அவர் கூபேசியதாவது:-

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தலைவர்களை காஞ்சியில் கண்டு..

    அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் பவள விழா கொண்டாட்டத்தை நடத்தி வருகிறோம். 1949ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் திமுக தொடங்கப்பட்டது.

    வான்மழை வாழ்த்திட உருவான திமுக இன்று வையகம் வாழ்த்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

    கருணாநிதியின் பாதையில் திமுகவை தொடர்ந்து வளர்த்து வருகிறோம். நாங்கள் செய்த சாதனைகளுக்கு கூட்டணி தலைவர்களான நீங்களும் துணை நின்றீர்கள்.

    தமிழகத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளோம். அகில இந்திய அளவில் பாஜகவை வீழ்த்திட இந்திய கூட்டணி உருவாக்கப்பட்டது.

    சில கட்சிகளிள் கூட்டணி, தேர்தல் நேரத்தில் உருவாகி, தேர்தலுக்குப் பின் கலைந்துவிடும். ஆனால் நம் கூட்டணி அப்படியில்லை. நமது ஒற்றுமையைப் பார்த்து நமது கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக உள்ளது. நமக்குள் மோதல் வராதா, பகையை வளர்க்க முடியாதா என்ற வேதனையில் பொய்களை பரப்பி அற்பத்தனமான காரியங்களை செய்து தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து வருகின்றனர். அவர்களின் கனவு எப்போதும் பலிக்காது. பாசிசமும், மதவாதமும் தமிழகத்தில் நுழைய கூடாது என்பதற்காகவே நாம் சேர்ந்துள்ளோம்.

    மாநில சுயாட்சி கொள்கையை அடைய பல்வேறு நடவடிக்கைகளை திமுக எடுத்துள்ளது. மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.

    தமிழகத்தில் ஒலித்த மாநில சுயாட்சி முழக்கம், பல்வேறு மாநிலங்களில் தற்போது எதிரொலிக்கிறது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமற்ற ஒன்று.

    ஒரே மதம், ஒரே மொழி, ஒரே இனம், ஒரே வரி என முழங்குவது நடைமுறை சாத்தியமற்றது. ஒரே நேரத்தில் 4000க்கு மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வது சாத்தியமா ?

    பாராளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்ததா ? 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தலை நடத்தியவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள்.

    பாராளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவேன் எனச் சொல்வது, 'கூரை ஏறி கோழியை பிடிக்க முடியாதவர், வானத்தை கிழித்து வைகுண்டத்தை காட்டுவேன்' என்று சொல்வது போல் உள்ளது.

    தற்போது மத்தியில் உள்ள பாஜக 240 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது பெரும்பான்மை பலமில்லை. அதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொஞ்சம் Gap விட்டா நாங்க புகுந்துவிடுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.
    • பொதுக்கூட்டத்தில் கருணாஸ் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

    தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.

    அங்கு, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு, " மாநில உரிமைகளை பெற அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம்" என அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

    தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் திமுக பவள விழாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார். இதற்கிடையே, பொதுக்கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

    மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, "தேசியக் கட்சிகளுக்கு நிகராக இந்தியாவின் அரசியலை தன்வயப்படுத்தியுள்ள கட்சி என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்" என்றார்.

    காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் - விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பங்கேற்று உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியளவில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழி காட்டக் கூடிய அரசியல் கட்சி திமுக. தேர்தல் அரசியலை முன்நிறுத்தி அதிகாரத்தை நோக்கி இயங்கும் சராசரி அரசியல் கட்சி அல்ல. அதனால்தான் 75 ஆண்டுகளாக வீரியத்தோடு வெற்றிநடை போடுகிறது.

    திராவிட அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3வது குழல். இது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட அணி அல்ல. இருமொழி கொள்கையில் இன்றும் திமுக திடமாக உள்ளது.

    புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்து முதல்வர் உறுதியுடன் உள்ளார்.

    சமூக நீதிக்கு இந்தியா முழுவதும் வழிகாட்டும் இயக்கம் திமுக. திமுகவில் அடுத்தடுத்து வருவது கருத்தியல் வாரிசு.

    பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம்.. இந்தியாவில் யாரும் சிந்திக்காதது.. நான் அடிக்கடி சிலாகித்துப் பேசுகிற திட்டம் சமத்துவபுரம் திட்டம்..

    எந்தவொரு கூட்டணியும் தேர்தலுக்குப் பின் சிதறிப் போகும்.. ஆனால், இன்றும் திமுக கூட்டணி சிதறாமல் இருப்பதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் இந்த வலுவான கூட்டணி தொடர வேண்டும் என்பதற்கான கால்கோள் விழாவாகவும் பார்க்கப்படுகிறது.
    • 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி உள்ள செந்தில் பாலாஜி பொது கூட்ட மேடையில் கவுரவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    தி.மு.க.வின் 75-ம் ஆண்டு பவள விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 17-ந்தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அத்துடன் தி.மு.க. ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் முப்பெரும் விழாவும் நடைபெற்றது. இது தி.மு.க.வினர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தது.

    கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ளும் வகையில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டார்.

    அதன்படி தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

    காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாவட்ட செயலாளரான அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,

    மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன் குமார், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவரான நடிகர் கருணாஸ், ஆதி தமிழர் பேரவை கட்சி தலைவர் அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், வல்லரசு பார்வர்ட் பிளாக் நிறுவனர் தலைவர் பி.என். அம்மாவாசி ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துரை வழங்கி பேசுகிறார்கள்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற தி.மு.க.வினர் விருப்பத்தை நிறைவேற்றும் முக்கிய அறிவிப்பை, இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பொதுக்கூட்டம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் இந்த வலுவான கூட்டணி தொடர வேண்டும் என்பதற்கான கால்கோள் விழாவாகவும் பார்க்கப்படுகிறது.

    அத்துடன், 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி உள்ள செந்தில்பாலாஜி பொது கூட்ட மேடையில் கவுரவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் தி.மு.க.வினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பவள விழா பொதுகூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
    • திடீரென நடத்தப்பட்ட கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    காஞ்சிபுரம்:

    தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) , காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி திடலில் நடைபெறுகிறது.

    தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்த முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, க.பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதில் பவள விழா பொதுகூட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக தெரிகிறது.

    திடீரென நடத்தப்பட்ட இந்த கூட்டம் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தொடர்ந்து வெளியாகி வரும் தகவலால் தான்.

    சமீபத்தில் சென்னையில் நடந்த தி.மு.க. பவள விழாவில் பேசிய முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், 'அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தி.மு.க.வில் மீண்டும் இந்த பேச்சு எழ தொடங்கியது.

    இதையடுத்து சென்னை கோட்டூபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி, எனக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவு எடுப்பார்' என்று கூறினார்.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார். நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம். இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்.

    10 நாட்களில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 175 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் கோர்ட்டில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளுர் தண்டு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி அதிக விலைக்கு விற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் கீவளூர் பகுதியில் உள்ள பூசனம் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு அவர் தொடர்ந்து விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூசனத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம 175 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைதான பூசனத்தை போலீசார் கோர்ட்டில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபாட்டி ல்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி மதுக்கடைகள் அடைப்பு.
    • மதுக்கடைகள் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாளை (17-ந் தேதி) நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மதுபான சில்லறை விற்பனை கடைகள், ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×