என் மலர்

    சேலம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மதுரை அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.

    சேலம்:

    டிஎன்பிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிக் உர் ரகுமார் அரை சதம் அடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். பாலசந்தர் அனிருத் 31 ரன்கள் எடுத்தார்.

    திண்டுக்கல் அணி சார்பில் பெரியசாமி, சந்திரசேகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி பொறுப்புடன் ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் 49 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    ஷிவம் சிங் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 12.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாக இருந்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் 5 ஆயிரம் கன அடியாகவும், இரவு 8 மணியளவில் அது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    அதே போல் அணைக்கு வரும் தண்ணீரும் அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7507 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவரில் 177 ரன்கள் அடித்தது.

    சேலம்:

    டி என் பி எல் தொடரின் 9-வது லீக் ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. அதிரடியாக ஆடிய துஷார் ரஹேஜா 16 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 28 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அமித் சாத்விக், பிரதோஷ் ரஞ்சன் பால் தலா 25 ரன்கள் எடுத்தனர்.

    சேலம் அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், முகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. நிதிஷ் ராஜகோபால் அரை சதம் கடந்தார். அவர் 44 பந்தில் 69 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ஆர்.கவின் 34 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் பூபதி குமார் 19 ரன்னும், ஹரிஷ் குமார் 23 ரன்னும் எடுத்து பொறுப்புடன் ஆடினர்.

    இறுதியில், சேலம் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி பெற்றது. சேலம் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் வழியாக இயங்கும் சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு ,கரூர் ,சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    ஈரோடு - காவிரி பாலம் இடையே தற்போதுள்ள இரும்பு பாலத்துக்கு பதிலாக கான்கிரீட் பாலம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதால் சில ரெயில்கள் இயக்க வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு காவிரி பாலம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே உள்ள இரும்பு பாலத்தை அகற்றி உயர்தர காங்கிரீட் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நடைபெறுவதால் ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் லோக் மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையில் இருந்து 8.50 மணிக்கு புறப்பட்டு வழக்கமாக ஈரோடு சேலம் வழியாக செல்லும். தற்போது காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (14-ந் தேதி ) முதல் ஈரோடு, கரூர், சேலம் வழித்தடத்தில் செல்லும் எனவும் கூடுதலாக இந்த ரெயில் கரூரில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல எர்ணாகுளம்-தாத்தாங்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு, கரூர் , சேலம் வழியாக செல்லும் எனவும் கரூரில் இந்த ரெயில் நின்று செல்லும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது . அதேபோல ஆலப்புழா தன் பாத் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் கே. எஸ் .ஆர் .பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு கரூர், சேலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.89 அடியாக இருந்தது.
    • மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள இந்த தண்ணீர் நாளை மறுநாள் கல்லணையை சென்றடையும்.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் அணையின் மேல்மட்ட மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. பின்னர் 12 மணியளவில் தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் இரவு 8 மணி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் தற்போது நீர்மின் நிலையங்கள் மூலம் மின்உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள இந்த தண்ணீர் நாளை மறுநாள் கல்லணையை சென்றடையும்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.89 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6896 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முழு நிதி மாநில அரசுக்கு வந்து சேர்வதில்லை.
    • டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    சேலம்:

    அமித்ஷா மதுரைக்கு வந்தபோது தி.மு.க. ஆட்சியில் குறை சொல்லி ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * அறிவிப்பு மட்டுமே வெளியிட்டு செயல்படுத்தாமல் உள்ளதாக தி.மு.க. அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

    * 10 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன?

    * 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்திருக்கலாம்.

    * எய்ம்ஸ் மருத்துவமனையை பத்தாண்டுகளாக கட்டுவதற்கு அது மருத்துவமனையா அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையமா?

    * மதுரை வந்த அமித்ஷா எய்ம்ஸ் நிலை குறித்து நேரில் போய் பார்த்தாரா?

    * பிரதமர் பெயரில் உள்ள திட்டங்களுக்கே மாநில அரசு தான் கூடுதல் நிதி கொடுக்கிறது.

    * 11 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்த சிறப்பு திட்டம் என்ன?

    * மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முழு நிதி மாநில அரசுக்கு வந்து சேர்வதில்லை.

    * சட்டையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்... எனவே எந்த சாதனையையும் மத்திய அரசால் சொல்ல முடியவில்லை.

    * அன்றைய பொருளாதாரம், விலைவாசி நிலை என்ன? தற்போதைய நிலை என்ன?

    * மதுரையின் தொன்மையை நிராகரிக்கும் வகையில் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர்.

    * ஏராளமான தரவுகளுடன் கொடுக்கப்பட்ட கீழடி ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது.

    * கீழடி அறிவியல் ஆய்வில் எழுதப்பட்ட அறிக்கையை போதவில்லை என கூறுகிறார் மத்திய அமைச்சர் செகாவத்.

    * தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது.

    * தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோன போது எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து கேள்வி கேட்டாரா?

    * டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பவர் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி.
    • சேலம் செவ்வாப்பேட்டை தினசரி சந்தை ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

    சேலத்தில் நடைபெற்ற விழாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:

    * சேலத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பவர் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி.

    * தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ஆட்சியர்களில் ஒருவர்.

    * சேலத்திற்கு தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    * சேலத்தில் 9 உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    * சேலத்தில் ரூ.548 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * கடந்த 4 ஆண்டுகளில் சேலத்திற்கு ரூ.7600 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    * சேலம் மாவட்டத்தில் மட்டும 56 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள்

    * சேலத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கப்படும்.

    * சேலம் செவ்வாப்பேட்டை தினசரி சந்தை ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

    * சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் கட்டப்படும். மேட்டூர் நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி கட்டடங்கள் கட்டப்படும்.

    * ஆத்தூரில் ரூ.5 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். தாரமங்கலம், எடப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் புதிய குடிநீர்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

    * தலைவாசல் இழுப்பநத்தம் வேளாண் விற்பனை மையம் ரூ.10 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான் காரணம்.
    • நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    சேலத்தில் நடைபெற்ற விழாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான்.

    * 4 ஆண்டுகளாக குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம்.

    * தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் நெற்களஞ்சியமாக இருப்பதற்கு உயிர்நாடி காவிரிதான் காரணம்.

    * அணையிலிருந்து பொங்கிவரும் காவிரி போல் உங்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி பொங்குகிறது.

    * விவசாயிகள் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 பெறுவார்கள்.

    * சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,547-க்கு கொள்முதல் செய்யப்படும்.

    * சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.131 உயர்வு, சன்னரகம் ரூ.156 உயர்த்தப்படும்.

    * நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியையும் தொடங்கி உள்ளனர்.
    • மேட்டூர் அணை வரலாற்றில் 92-வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    காவிரி டெல்டா மாவட்ட மக்ககளின் விவசாயத்திற்கு உயிர் நாடியாகவும், குடிநீருக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் 92 ஆண்டு காலமாக மேட்டூர் அணை விளங்கி வருகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். நீர் இருப்பை பொறுத்து சில ஆண்டுகள் மட்டும் தண்ணீர் முன்னதாகவும், தாமதமாகவும் திறக்கப்பட்டது.

    நடப்பாண்டில் அணையின் நீர்மட்டம் 110 அடிக்கும் மேல் இருந்த நிலையில் அணைக்கு நீர்வரத்தும் கணிசமாக இருந்ததால் குறிப்பிட்ட நாளான இன்று (ஜூன் 12-ந் தேதி) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். தொடர்ந்து அணையில் இருந்து சீறிப்பாய்ந்த தண்ணீரை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூ தூவினார்.

    அப்போது அங்கிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரை பூக்கள் தூவி உற்சாகத்துடன் வரவேற்றனர். முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.91 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து 6 ஆயிரத்து 339 கன அடியாகவும் இருந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ராஜேந்திரன், மதிவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். டி.எம். எம்.பி.க்கள் செல்வகணபதி, மணி, மாதேஸ்வரன், மலையரசன், கலெக்டர் பிருந்தாதேவி, சதாசிவம் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேட்டூர் அணை திறப்பு மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 3 நாட்களில் கல்லணையை சென்றடையும். குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடியையும் தொடங்கி உள்ளனர்.

    அணையின் மேல்மட்ட மதகு வழியாக திறக்கப்பட்ட தண்ணீர், சிறிது நேரத்திற்கு பிறகு அணையையொட்டி உள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும். நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் கட்டப்பட்டுள்ள கதவணைகளில் அமைக்கப்பட்டு உள்ள மின் நிலையங்கள் மூலம் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    மேட்டூர் அணை வரலாற்றில் 92-வது முறையாக காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. முதலில் குறுவை சாகுபடி, பின்னர் சம்பா, தாளடி சாகுபடி என முப்போக விவசாயத்திற்கு இந்த தண்ணீர் பயன்படும். 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.9 லட்சம் ஏக்கரில் சம்பாவும், 4.41 லட்சம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் நடக்கிறது.

    காவிரி டெல்டா பாசனத்திற்கு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி 19 முறையும், காலதாமதமாக 61 முறையும், ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாக 11 முறை என ஏற்கனவே 91 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்ததாண்டு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஈரோடு மாவட்டம் பவானி வழியாக நேற்று மாலை சேலம் மாவட்டம் மேட்டூருக்கு வந்தார். அவருக்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி, மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி., கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்டாலின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மழையின்மை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு சில ஆண்டுகளில் மட்டும் குறித்தபடி ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
    • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி பாசனப்பகுதிகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணை கடந்த 1924 ம் ஆண்டு கட்டதொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அணை கட்டப்பட்டதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மழையின்மை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு சில ஆண்டுகளில் மட்டும் குறித்தபடி ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    குறிப்பாக அணையில் அதிக தண்ணீர் வந்த காரணத்தால் ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாக இதுவரை 11 முறை தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மற்றபடி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி காவிரி பாசனப்பகுதிகளுக்காக தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து இதுவரை 90 ஆண்டுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு 91-வது ஆண்டாக குறித்தபடி நாளை மறுநாள் (12-ந் தேதி) பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணைக்கு நேற்று வினாடிக்கு 5980 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 5482 கனஅடியாக குறைந்தது.
    • மேட்டூர் அணையில் தற்போது 84.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.40 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 5980 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 5482 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 84.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 64.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
    • கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது.

    சேலம்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் இந்த அணைகளில் இருந்து தமிழக காவிரியிலும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மழையின் தீவிரத்தை பொறுத்து ஆற்றில் தண்ணீர் அதிகரித்தும், குறைந்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அதே போல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இதன் காரணமாக இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.16 அடியை எட்டியது. வழக்கமாக ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் தான் அணையில் இந்த அளவுக்கு தண்ணீர் இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் ஜூன் மாத தொடக்கத்திலேயே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் அணைக்கு இன்று காலை முதல் வினாடிக்கு 5 ஆயிரத்து 980 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 64.4 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

    மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 12-ந் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×