என் மலர்

    சேலம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 20 பெட்டிகளுடன் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது-

    கோடை விடுமுறையையொட்டி சேலம், நாமக்கல் கரூர் வழியாக பெங்களூரு-மதுரை இடையே நாளை (30-ந் தேதி) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து நாளை இரவு 7 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம் பங்காரு பேட்டை வழியாக இரவு 10.30 மணிக்கு சேலத்திற்கு வந்தடையும். கரூருக்கு அதிகாலை 1.43 மணிக்கும், மதுரைக்கு காலை 6.15 மணிக்கும் வந்தடையும். மறு மார்க்கத்தில் மே மாதம் 1-ந் தேதி காலை 9,10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு சேலத்திற்கு மதியம் 2.20 மணிக்கு வந்தடையும் இந்த இரவு 7. 30 மணிக்கு பெங்களூருக்கு சென்றடையும். 2 அடுக்கு ஏ.சி. பெட்டி 2, 3 அடுக்கு ஏ.சி. பெட்டி 16, லக்கேஜ் பெட்டி உள்பட மொத்தம் 20 பெட்டிகளுடன் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஹரி, இவர் தனது உறவினருக்கு மாத்திரை வாங்க சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள மருந்தகத்திற்கு நேற்று மாலை வந்தார்.

    தொடர்ந்து டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை சீட்டை அங்கு பணியில் இருந்த மருந்தாளுனர் மாதேஸ் என்பவரிடம் கொடுத்தார். அப்போது ஹரி கொடுத்த மருந்து சீட்டை மருந்தாளுனர் கீழே போட்டு விட்டு வேறொரு நோயாளிக்கான மருந்து சீட்டை பார்த்து மாத்திரை கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது ஹரி மருந்தாளுனர் குடிபோதையில் இருப்பதாகவும், மாத்திரையை மாற்றி கொடுத்தது குறித்தும் கேட்ட போது பதில் சொல்லாமல் இருந்ததாகவும், அலட்சியமாக செயல்பட்ட மருந்தாளுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய படி கூச்சலிட்டார்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மருந்தாளுனர் மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    இது குறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், மருந்தாளுனர் குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து டாக்டர்கள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவருக்கு உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று கருதுவதால் இன்று அவருக்கு டாக்டர்கள் குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். அதன் அடிப்படையில் இது தொடர்பாக மருத்துவ குழு மூலம் விரிவான விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் குச்சி ஐஸ் விற்பனை செய்துள்ளார்.
    • போலீசார் குச்சி ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை தேடி வருகின்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் கிழக்கு ஊராட்சி புள்ளிபாளையத்தில் பிரசித்திபெற்ற ஏணிபாலி பச்சியம்மன் கோவில் உள்ளது. அங்கு அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதேபோல் வெள்ளிக்கிழமையான நேற்று ஏணிபாலி பச்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் சங்ககிரி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள், பொங்கல் வைத்து சாமி வழிபட்டனர். அப்போது கோவில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் குச்சி ஐஸ் விற்பனை செய்துள்ளார்.

    அவரிடம் குழந்தைகள் சிலர் ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதனையடுத்து சிறிது நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சங்ககிரி பறையங்காட்டானூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், தேவி ஆகியோரின் மகன் அகி (14), நங்கவள்ளியை சேர்ந்த குணசேகரன், கோகிலா ஆகியோரின் மகள் ஸ்ரீ திக்சா (7), ஆகிய 2 குழந்தைகள் சங்ககிரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

    அதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் ஆதவ ராஜ் (5), அ.புதூரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் யோகேஸ்வரன் (18), தர்மபுரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகள் ஸ்ரீநிதி (10) ஆகியோர் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து மருத்துவர்கள் கூறியபோது, வாந்தி வயிற்றுப்போக்குடன் வந்த குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தைகள் நலமுடன் உள்ளதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் குச்சி ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை தேடி வருகின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின் தடை செய்யப்படுவது வழக்கம்.
    • மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் நாளை ஏப்ரல் 24-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

     அந்த வகையில் நாளை ஏப்ரல் 24-ந் தேதி வியாழக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகள் தொடர்பான அறிவிப்பை மின்சார வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 24-04-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    சின்னக்கடை வீதி முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம், பட்டை கோயில், மேட்டு தெரு, ஈஸ்வரன் கோயில் பகுதி, ப்ரெட்ஸ் ரோடு, அருணாச்சலம் ஆசாரி தெரு, கடைவீதி, கல்லாங்குத்து ஒரு பகுதி, ஏடிசி டிப்போ, கோவிந்தன் தெரு, பெரியார் தெரு, வ உசி மார்க்கெட், மடம் தெரு, பழைய பேருந்து நிலையம், வணக வளாகம், சிங்க மெத்தை, அசோக்நகர், பாலாஜி நகர், பச்சப்பட்டி, வித்யா நகர், அம்மாபேட்டை மெயின் ரோடு, சேர்மன் ராமலிங்க தெரு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குப்பை கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான பூபதியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் பக்கத்து வீட்டு அருகே குப்பை கொட்டியதால் அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் மோதல் ஏற்பட்டது.

    குப்பை கொட்டியதில் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்த தகராறு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் குப்பை கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாலமுருகன், அவரது மனைவி செல்வி, உறவினர் அன்பரசி கைது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லாரியை ஏற்றி கொல்ல முயன்ற பாலமுருகன், அவரை தூண்டிவிட்ட அன்பரசி, பூபதி, கதிரவன் ஆகியோர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்து சேதம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான பூபதியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
    • போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.

    தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

    இதற்கிடையில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    பின்னர், தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க. மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. மகளிரணி கண்டன போராட்டத்தில் நடிகை கவுதமி பங்கேற்றார்.

    போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 2034 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
    • தொடர்ந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 107.59 அடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 2034 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கோடையிலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவல்துறை தி.மு.க. கட்டுப்பாட்டில் உள்ளது.
    • தி.மு.க. ஆட்சி பல்வேறு ஊழல்களை செய்துள்ளது.

    சேலம்:

    பா.ஜ.க. கட்சியின் சேலம் பெருங்கோட்டம் சார்பில் ஓமலூரில் பா.ஜ.க. புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    பா.ஜ.க. தொண்டர்கள் பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். தற்போது காவல்துறை தி.மு.க. கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் வழக்குப்பதிவு செய்வார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    முன்னாள் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் 'பாத யாத்திரை' நடத்தி கட்சியை வளர்த்தார். அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற முறையில் பாத யாத்திரை நடத்தி கட்சியை வலுப்படுத்தினார்.

    தமிழகத்தில் தாமரை மலர்ந்து தீரும். இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். நாம் அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி. மிகப்பெரிய கூட்டணி. ஒரு சிலர் சந்தர்ப்பவாத கூட்டணி என கூறுகிறார்கள். ஆனால் இதுதான் நியாயமான கூட்டணி. எனவே தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்கு பக்கபலமாக இருக்க வேண்டும். பலர் இந்த கட்சிக்காக உயிரை தியாகம் செய்துள்ளனர்.

    ஆடிட்டர் ரமேஷ் போன்றவர்கள் தியாகம் செய்ததால் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம். இன்றிலிருந்து சபதம் ஏற்க வேண்டும். கூட்டணி வெற்றி பெற எத்தனை சீட் என்பதை நான் முடிவு செய்ய முடியாது. ஏன் என்றால் தேசிய தலைமை முடிவு செய்யும். தேசிய தலைமை ஜெ.பி.நட்டாவும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவு செய்வார்கள்.

    தி.மு.க. ஆட்சி பல்வேறு ஊழல்களை செய்துள்ளது. இதை மறைப்பதற்காக நீட் தேர்வு, மாநில சுயாட்சி எனவும், கடந்த 50 ஆண்டுகளாக மேகதாது பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை என வெறும் தீர்மானங்கள் மட்டுமே போட்டு விட்டு சென்று விட்டனர். 18 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அதிகாரத்திலிருந்த தி.மு.க. அப்போது இதற்கு தீர்வு கண்டு இருக்க வேண்டும். நிச்சயமாக ஆட்சி மாற்றம் இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணையின் நீர்மட்டம் 107.48 அடியாக உள்ளது.
    • அணையில் தற்போது 74.87 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கோடைகாலத்திலும் வினாடிக்கு 500 அடிக்கு மேல் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு 748 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 1385 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 107.48 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 74.87 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டையும், நிலத்தையும் கேட்டு தகராறு.
    • கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 39). லாரி டிரைவர். இவரது முதல் மனைவி ரேவதி (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கார்த்தி 2-வதாக சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவுடன் கார்த்தி வசித்து வருகிறார். இதனால் ரேவதி கடந்த 4 ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் ரேவதியின் திருமணத்தின்போது அவரது பெயரில் கார்த்தி நிலம் வாங்கி வீடு கட்டி கொடுத்திருந்தார். இதனால் வீடு, சொத்து ரேவதியின் பெயரில் உள்ளது. தற்போது இந்த வீட்டையும், நிலத்தையும் ரேவதியிடம் திருப்பி கேட்டு கார்த்தி தகராறு செய்து வந்தார்.

    கார்த்தியிடம் ரேவதி தனது 2 குழந்தைகளுக்கும் இந்த வீடு, நிலம் பயன்படும். சொத்து, வீடு அவர்களுக்கு இல்லை என்றால் அவர்களின் எதிர்காலம் என்ன ஆவது?, அவற்றை எழுதி கொடுத்தால் 2-வது மனைவி சங்கீதாவுக்கு கொடுத்து விடுவாய்.

    மேலும் என்னையும், குழந்தையையும் வீட்டை விட்டு துரத்தி விடுவாய் என கூறி சொத்து மற்றும் பட்டா உள்ளிட்டவை மாற்றம் செய்து தர முடியாது என மறுத்து விட்டார். ஆனால் நான் வாங்கி கொடுத்த நிலத்தையும், வீட்டையும் எனது பெயரில் மாற்றி எழுதி கொடு என்று கார்த்தி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் ரேவதியின் வீட்டிற்கு கார்த்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சொத்து தொடர்பாக கணவன்-மனைவி இடையே மோதல் வெடித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அரிவாளால் ரேவதியின் தலையில் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.

    இதில் மூளை சிதறிய நிலையில் ரேவதி ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குள் பிணமாக கிடந்தார். அவரது 2 குழந்தைகளும் பயத்தில் அழுதனர்.

    ரேவதியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் கார்த்தி தலைமறைவாக உள்ளார். ஆகவே ரேவதியை அவர் தான் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகிறோம். அவர் பிடிபட்ட பிறகு தான் இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என முழு விபரங்களும் தெரியவரும் என்றனர்.

    முதல் மனைவியை சொத்துக்காக கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் மேட்டூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரி உயர்வை திரும்ப பெற கோரி கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.
    • கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகள மூலம் கட்டிடங்கள் கட்ட தேவையான கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவை வாகனங்களில் அனுப்பப்படுகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு கனிம வள வரி என்ற பெயரில் வரியை தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்குவாரி உரிமையாளர்கள் இந்த பல மடங்கு வரி உயர்வால் கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகிய வற்றிற்கு 1 யூனிட்டிற்கு 1000 முதல் 1500 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய சூழல் உள்ளதாகவும், இதனால் குவாரி தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளதால் வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறி வந்தனர். ஆனால் அரசு வரியை குறைக்கவில்லை.

    இந்த நிலையில் வரி உயர்வை திரும்ப பெற கோரி குவாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குவாரி தொடர்பாக ரூ. 100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். கட்டுமான பணிகளுக்கான கருங்கல், கிரஷர், ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் கிடைக்க ாமல் கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கும் வரி வருவாய் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக அரசு பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று குவாரி உரிைமயாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.
    • உற்பத்தியாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    சேலம்:

    டீசல் விற்பனை வரி உயர்வை திரும்ப பெற வேண்டும், 19 சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் கர்நாடக லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதனால் கர்நாடகாவில் உள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் ஓடாததால் தண்ணீர் வினியோகம், கியாஸ் வினியோகம் உள்பட அத்தியாவசிய பணிகளும் முடங்கி உள்ள நிலையில் அங்குள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    மேலும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா வழியாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் கர்நாடகா வழியாக தமிழகத்திற்கு வரும் லாரிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட வில்லை.

    கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் அத்திப்பள்ளி மற்றும் பெங்களூரு அருகே உள்ள பொம்ம சந்திரா பகுதிகளில் லாரிகளை மொத்தமாக நிறுத்தி வைத்து போராட்டடத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் தமிழக எல்லையான ஓசூர், ஜுஜுவாடி, மூக்கண்டப்பள்ளி உள்பட பல பகுதிகளில் சாலையோரம் நீண்ட தூரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து பொருட்கள் ஏற்றிய லாரிகள் கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.

    மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு இயக்கப்படும் லாரிகள் வேலை நிறுத்தத்தால் அந்தந்த மாவட்டத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

    இதனால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், முட்டைகள், கறிக்கோழிகள், மஞ்சள், ஜவ்வரிசி, ஜவுளி, கல்மாவு, தீப்பெட்டிகள், காய்கறிகள் உள்பட ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் ஒரே நாளில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் அதன் உற்பத்தியாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயம், பருப்பு வகைகள், மக்காச்சோளம், பூண்டு, வெங்காயம், எண்ணை வகைககள், தக்காளி, பீட்ரூட், கேரட், முட்டை கோஸ், காலிபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட பழ வகைகள், தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு வரப்படுவதும் தடை பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால் விரைவில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் 10 ஆயிரம் லாரிகளிலும் வேலை பார்க்கும் டிரைவர், கிளீனர், லோடு ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். 10 ஆயிரம் லாரிகளுக்கும் ஒரே நாளில் ஒரு லாரிக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் லாரி உரிமைாளர்களுக்கு மொத்தத்தில் ரூ. 20 கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிைடயே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களுடன் கர்நாடக மாநில முதல்-அமைச்சர் சித்தாராமையா மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    ×