என் மலர்

    சிவகங்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.
    • மானாமதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் கைதான கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரின் மகன் ஆகாஷ் டெலிசன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக அவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலத்தில் இருந்து விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி திடீரென ஆகாஷ் டெலிசன் இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகாஷ் டெலிசன் சாவில் போலீசார் மீது சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையில் ஆகாஷ் டெலிசன் சாவுக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண நிதி, அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி மானாமதுரை பஸ் நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    3-வது நாளான இன்று காலையும் சாலைமறியல் தொடர்ந்தது. தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் மானாமதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மதுரை, ராமேசுவரத்தில் இருந்து வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனத்தில் அரசு, தனியார் மதுபான கடைகள், பார்களை 3 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    ஆகாஷ் டெலிசன் உயிரிழந்ததை தொடர்ந்து 3-வது நாளாக சாலைமறியல் போராட்டம் நடைபெறுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி மதுபான கடைகள், பார்கள் 3 நாட்களுக்கு மூடுமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
    • தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரிவாள் வெட்டு சம்பவத்தில் கைதான கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவரின் மகன் ஆகாஷ் டெலிசன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக அவர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது பாலத்தில் இருந்து விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி திடீ ரென ஆகாஷ் டெலிசன் இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகாஷ் டெலிசன் சாவில் போலீசார் மீது சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையில் ஆகாஷ் டெலிசன் சாவுக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண நிதி, அரசு வேலை ஆகியவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 8-ந் தேதி மானாமதுரை பஸ் நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அமைச்சர் பெரியகருப்பன், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் கைவிடப்படவில்லை. 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் நேற்று விசாரணை கைதி ஆகாஷ் டெலிசன் இறப்பு வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. வெங்கட் ராமன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைதி சாவு குறித்து வழக்குப்பதிவு செய்திருந்த மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசாரிடம் இருந்து வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கினர்.

    மேலும் ஐகோர்ட்டில் விசாரணை கைதி இறப்பு குறித்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு நேற்று விசாரித்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு, அரசு ஆஸ்பத்திரி டீன் ஆகியோர் முன்னிலையில் ஆகாஷ் டெலிசன் உடலை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதை தடுக்க மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு மனுதாரர் அறிவுறுத்துமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.

    இருப்பினும் மானா மதுரையில் 2-வது நாளான நேற்றும் சாலையில் பந்தல் அமைத்து போராட்டம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். 3-வது நாளான இன்று காலையும் சாலைமறியல் தொடருகிறது. அவர்களிடம் போலீசார் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றும் வரை போராட்டம் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் மானாமதுரை 4 வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மதுரை, ராமேசுவரத்தில் இருந்து வந்த வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆகாஷ் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.
    • கொலை முயற்சி வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு இருந்தார்.

    சிவங்கை மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.

    இவரை போலீசார் அடித்தேக் கொன்றதாகக்கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கஸ்டடி மரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், இந்த மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    மானாமதுரையில் இருவரை வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் காவல் துறை விசாரணையின் போது ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் பேசு பொருளாகி இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 67 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு அரங்குகளாக காட்சிப்படுத்தும் பணிகள் தொடங்கின.
    • பண்டைய மக்களின் வாழ்வியல் முறைகள், பணிகள், அணிகலன்கள் உள்ளிட்டவைகளை நேரில் காணலாம்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடந்த இடங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து, கடந்தாண்டு ஜனவரியில் ரூ.17 கோடியே 80 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

    சுமார் 67 ஆயிரத்து 343 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு அரங்குகளாக காட்சிப்படுத்தும் பணிகள் தொடங்கின. ஏழாம்கட்ட அகழாய்வு நடந்த இடம் ஒரு அரங்கமாகவும், இரண்டு, நான்கு, ஆறாம் கட்ட அகழாய்வு நடந்த இடம் இரண்டாம் அரங்கமாகவும் மாற்றும் பணி நடந்து வந்தது. இதில் முதலாம் அரங்கம் மட்டும் திறப்பு விழாவிற்கு தயாரான நிலையில், நாளை (13-ந்தேதி) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்த வெளி அருங்காட்சியகத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

    இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ. 22 கோடி ரூபாய் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைகிறது. பண்டைய கால மக்களின் வாழ்வியல் முறைகள், பணிகள், அணிகலன்கள் உள்ளிட்டவைகளை பொது மக்கள் நேரில் காண உள்ளனர்.

    திறந்த வெளி அருங்காட்சியக பணியின் போது ரூ. 17 கோடியே 80 லட்சம் என திட்டமிடப்பட்டது. செலவீனம் அதிகரித்ததால் தற்போது ரூ. 22 கோடியாக திட்டமதிப்பீடு அதிகரித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவம் நடந்த போது எனது மகனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர்.
    • இரவு நீண்ட நேரமாகியும் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 28) என்பவரை கடந்த ஜூன் மாதம் நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர்.

    இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அஜித் குமாரை அழைத்துச் சென்று தாக்கி கொன்றதாக மானாமதுரை தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்கள் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐ. தரப்பில் போலீஸ் காவலில் தான் அஜித்குமார் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. விசாரிக்க சொன்னதால் கடுமையாக தாக்கி போலீசார் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் 10 போலீஸ்காரர்களுக்கு தொடர்பு உள்ளது. நகை திருட்டு எதுவும் நடக்கவில்லை. பொய் புகாரில் அஜித் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத காரணத்திற்காக ஒரு அப்பாவியை தாக்கி கொலை செய்துள்ளனர். மனம் பதைபதைக்கிறது என்று தெரிவித்ததோடு பொய் புகார் அளித்த நிகிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் திருப்புவனத்தில் அஜித்குமாரின் தாயார் மாலதி இன்று பேட்டி அளித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது மகனை போலீசார் அடித்து கொன்று உள்ளனர். இந்த வழக்கில் எனது மகன் திருடன் இல்லை என்று நீதிபதி கூறியிருப்பது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. இருப்பினும் எனது மகன் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    சம்பவம் நடந்த போது எனது மகனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். ஆனால் அது குறித்து எனக்கு எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை. வீட்டுக்கு வந்த போலீசார் பீரோவை திறந்து அதில் இருந்தவைகளை சோதனை செய்தனர்.

    அப்போது மற்றொரு மகனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். இரவு நீண்ட நேரமாகியும் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் எனக்கும் பயம் ஏற்பட்டது. போலீஸ் நிலையத்திற்கு சென்ற போதும் அங்கு என்னை போலீசார் விரட்டி விட்டனர். உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் கேட்ட போதும் மகன்களை போலீசார் விசாரித்து விட்டுவிடுவார்கள் என்று கூறினார்கள். அதை நம்பி இருந்த நிலையில் எனது மகனை போலீசார் அடித்து கொன்று உள்ளனர். எனது மகன் நகையை எடுத்தது யார் பார்த்தார்கள்? பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்.

    அஜித் குமாரை விசாரிக்க சொல்லி 5 போலீஸ்காரர்களிடம் கூறிய உயர் அதிகாரி யார்? என்பது எங்களுக்கு தெரியவேண்டும்.

    கஞ்சிக்கு இல்லாவிட்டாலும் வைராக்கியத்துடன் மகன்களை வளர்த்துள்ளேன். ஆனால் நகை திருட்டு பொய் புகாரை கூறி எனது மகனை சாகடித்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் எதற்காக எனது மகனை அடித்தார்கள்? யார் அடிக்க சொன்னது? எனது மகனை கொலை செய்து சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்கள் உட்பட யாரும் வெளியே வரக்கூடாது.

    சி.பி.ஐ. விசாரணை மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு தாய் என்ற உணர்வுடன் நீதிபதி நேற்று இந்த வழக்கில் சில கருத்துக்களை முன் வைத்துள்ளதை உணர்ந்துள்ளேன் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2011, 2016-ல் அ.தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியதா?
    • அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து காரைக்குடி கழனிவாசலில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.2.559.50 கோடி மதிப்புள்ள 49 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.13.36 கோடி மதிப்புள்ள 28 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது:

    * தி.மு.க. அரசின் திட்டங்களை காப்பியடித்து வாக்குறுதிகள் என அள்ளி வீசுகிறார் இ.பி.எஸ்.

    * 2011, 2016-ல் அ.தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றியதா?

    * சென்னை- கன்னியாகுமரி இடையே கடலோர சாலை என அ.தி.மு.க. அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதா?

    * அ.தி.மு.க. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற போவதில்லை என்பது மக்களுக்கு தெரியும்.

    * தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்க முடியாதவர் பத்து தோல்வி பழனிசாமி.

    * வாக்குறுதி அளித்தபடியே மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கி வருகிறோம்.

    * அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.

    * 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 58 விழுக்காடாக உயர்த்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆளுநரும் பிரதமரும் பொருளாதார ஆய்வு அறிக்கையை படிக்க வேண்டும்.
    • கிராமப்புறங்களில் முதுகெலும்பாக அமைந்திருந்தது 100 நாள் வேலை திட்டம்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து காரைக்குடி கழனிவாசலில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.2.559.50 கோடி மதிப்புள்ள 49 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.13.36 கோடி மதிப்புள்ள 28 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது:

    * திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.

    * தமிழகத்தை விமர்சிக்கக்கூடிய ஆளுநர் கேள்விகளை மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டும்.

    * மத்திய அரசின் பொருளாதார அறிக்கையில் தமிழக அரசை பாராட்டி உள்ளனர்.

    * உற்பத்தி துறை, வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் என பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    * ஆளுநரும் பிரதமரும் பொருளாதார ஆய்வு அறிக்கையை படிக்க வேண்டும்.

    * ஜனாதிபதி உரை என்றால் அது பா.ஜ.க. அரசின் உரை தான்.

    * கிராமப்புறங்களில் முதுகெலும்பாக அமைந்திருந்தது 100 நாள் வேலை திட்டம்.

    * பா.ஜ.க.வினருக்கு மகாத்மா காந்தியையும் பிடிக்காது, மக்கள் நன்றாக இருந்தாலும் பிடிக்காது.

    * 100 நாள் வேலை திட்டத்தில் 50 நாட்கள் கூட மத்திய அரசு வேலை கொடுக்கவில்லை.

    * 100 நாள் வேலை திட்டத்தில் 150 நாட்கள் வேலை அளிப்போம் என மத்திய அரசு கூறுவது மாயை.

    * மத்திய அரசு தனது கடமையில் இருந்து நழுவி ஓடுகிறது.

    * மக்களின் குரலுக்கு மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயம் செவி சாய்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய அரசால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிறது.
    • அரசியலில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த ப.சிதம்பரத்தின் பாராட்டை முக்கியமானதாக கருதுகிறேன்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து காரைக்குடி கழனிவாசலில் ரூ.100.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம், ரூ.2.559.50 கோடி மதிப்புள்ள 49 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.13.36 கோடி மதிப்புள்ள 28 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் கூறியதாவது:

    * பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரிகம் ஓங்கியிருந்ததற்கான கீழடித் தடயங்கள் கிடைத்த மண் இது.

    * வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்டோரின் வீரத்தால் தியாகத்தில் சிவந்த மண் சிவகங்கை.

    * மத்திய அரசால் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கி 11 ஆண்டுகள் ஆகிறது.

    * அரசியலில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த ப.சிதம்பரத்தின் பாராட்டை முக்கியமானதாக கருதுகிறேன்.

    * சிவகங்கை மாவட்டத்தில் 2.38 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெறுகின்றனர்.

    * சிவகங்கையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.855 கோடி கடனுதவி தரப்பட்டுள்ளது.

    * சிவகங்கையில் 8,450 மாணவிகளுக்கு புதுமை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    * சிவகங்கையில் 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு சிவகங்கையில் மட்டும் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * சிவகங்கையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 12 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.

    * சிவகங்கையில் 33,000 குழந்தைகள் காலை உணவு திட்டத்தால் பயன் அடைகின்றனர்.

    * சிவகங்கையில் 65 கோவில்களில் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளது.

    * 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தான் அமையும்.

    * தற்போது அடிக்கல் நாட்டியுள்ள பணிகளை மீண்டும் வந்து திறந்து வைப்பேன்.

    * பெண்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களை செய்லபடுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செட்டிநாடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கல்லூரியை திறந்து வைக்கிறார்.
    • காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

    இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை வருகிறார். தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல்புதூரில் சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தியடிகள், ஜீவா ஆகியோர் சந்தித்த இடத்தில் கட்டப்பட்ட நினைவு மண்டபத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு காரைக்குடி அருகே குன்றக்குடியில் உள்ள குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு காரைக்குடியில், திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட வீறுகவியரசர் முடியரசனார் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு காரைக்குடி அழகப்பா அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை காலை 9.30 மணிக்கு காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் கல்லூரியை திறந்து வைக்கிறார். தொடர்ந்து காலை 10.10 மணிக்கு காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் நிறைவு பெற்ற பணிகளை தொடங்கி வைத்து அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசுகிறார். பின்னர் 11.15 மணிக்கு சட்டக்கல்லூரி அருகே புதிதாக கட்டப்பட்ட மினி டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார். பகல் 11.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு காரில் புறப்படுகிறார். முதலமைச்சர் வருகையையொட்டி அவர் பங்கேற்கும் இடங்களில் தமிழக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஸ்வர தயால், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. சேகர் தேஷ்முக்த், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், காரைக்குடி ஏ.எஸ்.பி. ஆஷிஷ்புனியா மற்றும் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

    முதலமைச்சருக்கு, சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் இன்று சிவகங்கை மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. முதலமைச்சர் வருகையையொட்டி இன்றும், நாளையும் சிவகங்கை மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும்போது உபரியாக கிடைக்கும் மொலாசஸ் திரவம் இங்கு பிரமாண்ட தொட்டியில் சேமித்து மதுபான ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
    • நேற்று இரவு பணியில் இருந்தபோது 2 பேரும் எதிர்பாராத விதமாக தவறி சேமிப்பு தொட்டியில் விழுந்து மூழ்கினர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் பகுதியில் தனியார் கரும்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 21-ந் தேதி கரும்பு அரைக்கும் பணி தொடங்கிய நிலையில், கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும்போது உபரியாக கிடைக்கும் மொலாசஸ் திரவம் இங்கு பிரமாண்ட தொட்டியில் சேமித்து மதுபான ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    மொலாசஸ் திரவம் சேமிப்பு தொட்டியின் பராமரிப்பு பணியில் சிவகங்கை அருகே உள்ள கரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரம் (வயது 35) மற்றும் சிவகங்கை, மதுரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பொன்னழகு (59) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

    நேற்று இரவு பணியில் இருந்தபோது 2 பேரும் எதிர்பாராத விதமாக தவறி சேமிப்பு தொட்டியில் விழுந்து மூழ்கினர். சிறிது நேரத்தில் அவர்கள் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தொட்டியில் சிக்கியிருந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக ஆலையில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? பராமரிப்பு பணியின்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே, தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மருத்துவர் அறையில் வெளிநாட்டு மதுபாட்டில்கள், அருகில் அசைவ உணவுகள், நொறுக்கு தீனியுடன் மது விருந்து நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே செம்பனூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கல்லல் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு என இரண்டு கட்டிடத்தில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. வட்டார மருத்துவ அலுவலர் உட்பட நான்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் புத்தாண்டு நள்ளிரவு நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்த நபர் அவசர சிகிச்சை பகுதிக்கு சென்று பார்த்தபோது மருத்துவர் இல்லை என்றதும் உள்ளே மருத்துவர் அறையில் மருத்துவர் உள்ளாரா? என பார்க்கச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் அறையில் வெளிநாட்டு மதுபாட்டில்கள், அருகில் அசைவ உணவுகள், நொறுக்கு தீனியுடன் மது விருந்து நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அந்த நபர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணை முடிந்த நிலையில் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 31-ந் தேதி பணியில் இருந்த மருத்துவர்கள் சசிகாந்த், கவுசிக், நவின்குமார், மணிரத்னம் ஆகிய நான்கு மருத்துவர்களும் மற்றும் மருந்தாளுநர் கமலக்கண்ணன் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அது மட்டும் அல்லாமல் அன்று பணியில் இருந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு வரும் பெண்கள், குழந்தை பிறந்த பின்பு இந்த வளாகத்தில் தான் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்கவில்லை என்றால் பிறக்கும் குழந்தைகளை யாராவது திருடி சென்றால் கூட கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு பெயர் நீக்கம்
    • முன்னதாக 2002-2005 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

    சிவகங்கை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்துஜா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக, இருவரும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    உயிருடன் இருக்கையில் இறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு தங்கள் பெயர் நீக்கப்பட்டதாக இந்துஜா, மாவட்ட ஆட்சியர் பொற்கொடியிடம் முறையிட்டார். அதற்கு பதிலளித்த அவர், "ஏதேனும் தவறுகள் இருந்தால் அதைச் சரி செய்வதற்காகத்தான் இந்த பட்டியலை உங்களுக்கு கொடுத்திருக்கிறோம். தவறு நடந்தால் ஊழியர்கள் மீதுத் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்," என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் இந்துஜா, அவரது கணவர் ஆட்சியரிடம் வாக்குவாதத்தை தொடர்ந்ததால், மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) கடந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் இந்த எஸ்.ஐ.ஆர். பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக, 2002-2005 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

    ×