என் மலர்

    உள்ளூர் செய்திகள் (District)

    அனுமதியின்றி சவுடு மண் எடுத்த ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 3 பேர் கைது
    X

    அனுமதியின்றி சவுடு மண் எடுத்த ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 3 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனுமதியின்றி சவுடு மண் எடுத்து கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் அருகே நத்தம் பகுதியில் அனுமதியின்றி சவுடு மண் எடுப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மற்றும் போலீசார் நத்தம் பகுதிக்கு நள்ளிரவில் ஆய்வுக்கு சென்றனர்.

    அப்போது அங்கு அனுமதியின்றி சவுடு மண் எடுத்து கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்ததில், அந்த இடம் நத்தம் பகுதியை சேர்ந்த ஊராட்சி தலைவரின் கணவர் செந்தில்குமார் என்பவருக்குரியது என்பதும், அதில் செந்தில்குமார் அரசு அனுமதி இன்றி மண் எடுத்துள்ளதும் தெரிய வந்தது.



    இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, செந்தில் குமார் மற்றும் ஆலவெளி பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் கார்த்திக், கதிராமங்கலம் பகுதியை சேர்ந்த நாகராஜன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 3 டிராக்டர்கள், ஒரு ஹிட்டாச்சி எந்திரம் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×