என் மலர்

    தென்காசி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்து வரும் ஆனந்தன் அய்யாசாமிக்கும் இன்று காலை மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்த கலெக்டர் அலுவலகம் தரப்பிலும், ஆனந்தன் அய்யாசாமி தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசாரின் முழு பாதுகாப்பின் கீழ் தென்காசி கலெக்டர் அலுவலகம் கொண்டு வரப்பட்ட நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து அரசு ஊழியர்களும், பொதுமக்களும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மூலமாக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவது வழக்கம்.
    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 9-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கர நாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்று.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று பெருங்கோட்டூரில் அமைந்துள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் கோவில் யானை கோமதி பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் இரவு 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், 7-ந்தேதி (புதன்கிழமை) இரவு சுவாமி, அம்பாள், நடராஜர், முதல் மூவர்கள் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், நள்ளிரவில் நடராஜர் வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், 8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை நடராஜர் பச்சை சாத்தி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

    சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகர செயலாளர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் முப்பிடாதி, வக்கீல் காளிராஜ், ஜெய குமார், ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விசாரணை நடத்திய போலீசார் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்துள்ளனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் ஆபிரகாம் (வயது 42), விவசாயி.

    இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று ஆபிரகாமை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே ஆபிரகாமை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதைப்பார்த்த ஆபிரகாம் குடும்பத்தினர் அலறி துடித்தனர். கொலை குறித்த தகவல் அறிந்து சின்னகோவிலான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆபிரகாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது பெண் விவகாரம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் விசாரணை நடத்திய போலீசார் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகின்றனர்.

    இதற்கிடையே ஆபிரகாமின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடியது.
    • டிஜிட்டல் பேனர் வைப்பதில் நடைபெற்ற மோதலில் கொலை.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் குத்தாலிங்கம் (வயது 36). இவரது மனைவி தனலட்சுமி (வயது 30),

    இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இவர் தனது மனைவியின் ஊரான கீழப்புலியூர் பகுதியில் கார்மெண்ட்ஸ் மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் குத்தாலிங்கம் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடையில் தனது மனைவியுடன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். இருவரும் ரேஷன் கடை அருகில் நின்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் கையில் அரிவாளுடன் மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து குத்தாலிங்கத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

    இதை கண்முன்னே பார்த்துக் கொண்டிருந்த அவரது மனைவி தனம் துடிதுடித்த நிலையில் கணவரை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் அவரை வெட்டி, தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

    பட்டப்பகலில் ரேஷன் கடை வாசலில் மனைவி மற்றும் பல பேர் முன்னிலையில் ஒரு நபரை வெட்டிக்கொலை செய்து விட்டு தலையை துண்டித்து கையில் எடுத்துக் கொண்டு ஒரு கும்பல் தப்பிச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    அதனைத் தொடர்ந்து அந்த கும்பல் துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு காசிமேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குத்தாலிங்கத்தின் உடலையும், காசி மேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் இருந்த தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காசிமேஜர்புரம் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் டிஜிட்டல் பேனர் வைப்பதில் நடைபெற்ற மோதலில் பட்டுராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவரது தம்பி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடைபெற்று இருப்பதாகவும், பட்டுராஜனை கொலை செய்த பகுதியான காசிமேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியான அதே இடத்தில் குத்தாலிங்கத்தின் தலையை வைத்துவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராமசுப்பிரமணியன் என்ற ரமேஷ் (25), ஹரிகர சுதன் (24) ஆகிய 2 பேர் குற்றாலம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்திய போது கொலையில் தொடர்புடைய செண்பகம் (40), மணி என்ற புறா மணி (25) ஆகிய 2 பேர் திருச்செந்தூரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று செண்பகம், மணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    கைதான ராமசுப்பிரமணியன் என்ற ரமேஷ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்ட பட்டுராஜாவின் மனைவியின் தம்பி ஆவார். இவர் காசிமேஜர்புரம் பகுதியில் ஆட்டு மந்தை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு ஆட்டு மந்தையில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்த போது மர்ம நபர் ஓடுவது போல தென்பட்டதாகவும், இதனால் தன்னை கொலை செய்ய தான் யாரோ வந்திருக்கிறார்கள் எனவும் ரமேஷ் கருதி உள்ளார்.

    இந்நிலையில், குத்தாலிங்கம் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஆடு வெட்டுவது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்த ரமேஷ், குத்தாலிங்கத்தால் தனது உயிருக்கு ஆபத்து வரும் எனக் கருதி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சித்தப்பாவான செண்பகம் மற்றும் சித்தப்பா மகனான ஹரிகர சுதன் ஆகியோரிடம் கூறியதாகவும், அதைத் தொடர்ந்து குத்தாலிங்கத்தை கொலை செய்ய அவரது நண்பரான புறா மணியையும் அழைத்துக்கொண்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குத்தாலிங்கத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
    • கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் குத்தாலிங்கம் (வயது 36). இவரது மனைவி தனலட்சுமி (வயது 30), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இவர் தனது மனைவியின் ஊரான கீழப்புலியூர் பகுதியில் கார்மெண்ட்ஸ் மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் குத்தாலிங்கம் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடையில் தனது மனைவியுடன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். இருவரும் ரேஷன் கடை அருகில் நின்று கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் கையில் அரிவாளுடன் மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து குத்தாலிங்கத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

    இதை கண்முன்னே பார்த்துக் கொண்டிருந்த அவரது மனைவி தனம் துடிதுடித்த நிலையில் கணவரை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் அவரை வெட்டி, தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

    பட்டப்பகலில் ரேஷன் கடை வாசலில் மனைவி மற்றும் பல பேர் முன்னிலையில் ஒரு நபரை வெட்டிக்கொலை செய்து விட்டு தலையை துண்டித்து கையில் எடுத்துக் கொண்டு ஒரு கும்பல் தப்பிச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    அதனைத் தொடர்ந்து அந்த கும்பல் துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு காசிமேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குத்தாலிங்கத்தின் உடலையும், காசி மேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் இருந்த தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காசிமேஜர்புரம் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் டிஜிட்டல் பேனர் வைப்பதில் நடைபெற்ற மோதலில் பட்டுராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவரது தம்பி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடைபெற்று இருப்பதாகவும், பட்டுராஜனை கொலை செய்த பகுதியான காசிமேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியான அதே இடத்தில் குத்தாலிங்கத்தின் தலையை வைத்துவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக தென்காசி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பெயரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த 6 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றவாளிகள் யார் என்பது இன்று மாலைக்குள் தெரியவரும் எனவும் கூறியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.
    • வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான காசி விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மாலையில் சிறப்பு சொற்பொழிவுடன் காசி விஸ்வநாதர் உலகம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலின் உள்பகுதி பிரகாரத்தில் நடைபெற்றது.

    அலங்கரிக்கப்பட்ட நந்தி வாகனத்தில் உலக அம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் எழுந்தருளி பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்ற போது கோவில் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதனைத் தொடர்ந்து உலகம்மன் காசி விஸ்வநாதர் சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து காட்சி அளித்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

    முன்னதாக திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு கோபுர வாயிலின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட அத்த பூக்கோலம் போடப் பட்டிருந்ததை பக்தர்கள் தங்களின் செல்போன்களில் படம் பிடித்து உற்சாக மடைந்தனர்.


    கும்பாபிஷேக நிகழ்ச்சி முடிந்த பின்பும் இன்று காலை வரையில் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் சிறப்பாக பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த னர்.

    அவர்களுக்கு கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் பக்தர்கள் பொதுமக்கள் சார்பில் தங்களின் நன்றியை தெரிவித்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
    • தினமும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலும் ஒன்றாகும். காசிக்கு நிகரானதாக கருதப்படும் இந்த கோவிலில் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இக்கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனவே மீண்டும் தென்காசி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனையேற்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழமை வாய்ந்த தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா விரைவில் நடத்தப்படும் என அறிவித்தார்.

    அதன்படி 18 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேக விழா நடத்த தீர்மானிக்கப்பட்டு ஏப்ரல் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்றது. அதன்படி கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ராஜ கோபுரத்திற்கு வர்ணம் தீட்டும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.


    மேலும் பல்வேறு சிறப்பு பூஜைகள், தினமும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது. நேற்று காலை முதல் இரவு வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, திரவியாகுதி நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காசி விசுவநாதசுவாமி ராஜ கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர லோக சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் நடத்தினார்.

    பூஜைகளை காசி விசுவநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சென்னை, கன்னியாகுமரி, கோவை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் தென்காசியில் குவிந்தனர். இதனால் தென்காசி நகரமே விழாக்கோலம் பூண்டது.

    கோவில் பகுதியில் எங்கு பார்த்தாலும் மனிதர்களாகவே காணப்பட்டனர். கும்பாபிஷேகம் நடைபெற்றபோது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ.. சிவ.. அரோகரா.. என விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர்.


    கும்பாபிஷேக விழாவயொட்டி இன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    விழாவில் கலெக்டர் கமல் கிஷோர், ராணிஸ்ரீ குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி, தென்காசி நாடார் சங்க தலைவர் ஏ.கே.எஸ். ராஜசேகரன் நாடார், செயலாளர் ராஜகோபால் நாடார், பொருளாளர் எஸ். ராஜன் நாடார் மற்றும் தருமை ஆதீனம், சிவனடியார்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் கதிமணி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 4 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 டி.எஸ்.பி.க்கள் உள்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி தென்காசியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் 11 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.

    தென்காசி:

    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலும் ஒன்றாகும்.

    இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பின்பு நாளை (திங்கட்கிழமை) காலை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.

    கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதையொட்டி தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற யாகசாலை சிறப்பு பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி மற்றும் தருமை ஆதீனம் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவில் முழு வதும் இரவில் ஒளிரும் வகையில் வண்ண விளக்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மங்கள இசையுடன் யாகங்கள் நடைபெற்று வருவதால் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தென்காசியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    நாளை அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 5 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    7 மணிக்கு மகா பூர்ணாகுதி, திரவ்யாகுதி நடக்கிறது. 9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர லேகசிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் நடத்துகிறார்.

    காசிவிஸ்வநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் உள்ளிட்டோர் பூஜைகள் செய்கின்றனர். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களான ராஜகோபுரம், சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி ஆகிய இடங்களில் உபயதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நின்று பார்வையிட ஏதுவாகவும், பாதுகாப்பு கருதியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கோவிலை சுற்றியுள்ள ரத வீதிகளிலும், கோவில் வளாகத்திற்குள்ளும் நின்று கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு டிரோன் மூலம் தீர்த்தம் தெளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டு களிக்க வசதியாக கோவில் மற்றும் ரத வீதிகளில் எல்.இ.டி. திரை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    நெல்லையில் இருந்து தென்காசிக்கு வரும் பக்தர்கள் ஆசாத் நகர் பகுதியிலும், சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இறங்கியும் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தென்காசி கோவில் மற்றும் வளாக பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் காலை முதலே குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தொட்ட படியும் ஐந்தருவில் 5 கிளைகளில் ஆர்ப்பரித்து கொட்டியும், பழைய குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய காட்டாற்று வெள்ளம் நடைபாதை வரையில் கரைபுரண்டு ஓடியது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.

    இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதியால் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் மிகவும் சொற்ப அளவியிலேயே விழுந்து வந்ததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
    • சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி காசி விஸ்வநாதர்-உலகம்மன் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றது. கோவில் ராஜகோபுரம் வர்ணம் தீட்டப்பட்டு, மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

    7-ந் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று தொடங்கியது. அதிகாலை 5 மணி அளவில் உலகம்மன் சன்னதி மண்டபத்தில் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியம் முழங்க நடை பெற்றது.

    நிகழ்ச்சியில சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆதினங்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பால கிருஷ்ணன் பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இன்று அதிகாலையில் தொடங்கிய யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.
    • 2 சனிக்கிழமைகள் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசியில் காசிவிசுவ நாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) அன்றும், பங்குனி உத்திர திருவிழா 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு 7 மற்றும் 11-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது.

    இந்த நாட்களில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

    மேலும், இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பான அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும். உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 26-ந் தேதி மற்றும் மே 3-ந்தேதி ஆகிய 2 சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. ஆட்சியில் வீட்டிற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்ட பா.ஜ.க. கட்சி சார்பில் புளியங்குடியில், தீய சக்தியை வேரறுப்போம் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    பொதுக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார். பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

    தென்காசி மாவட்டம் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணிகாலாடி, வாஞ்சிநாதன், பாரதியார் போன்றவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும்.

    தேசியவாதிகள் நிறைந்த மண் தென்காசி மண். தற்போது இந்த மாவட்டத்தில் கனிம கொள்ளை நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் வீட்டிற்கும், தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கல்வித்தரம் அதல பாதாளத்தில் உள்ளது. கண்ணியமான ஆசிரியர்கள் வாழ்ந்த பூமி இது. ஆனால் இந்த ஆட்சியில் தமிழகத்தில் 238 ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.

    மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக பொய் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்க மறுக்கின்றனர்.

    கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அருமையான திட்டங்களை ஏற்க மறுக்கின்றனர். தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளி கூட இயங்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது நவோதயா பள்ளிகள் மீண்டும் அமைக்கப்படும். அந்த பள்ளிகளுக்கு கர்மவீரர் காமராஜர் பெயர் சூட்டப்படும். மாவட்டம் தோறும் 2 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.

    புளியங்குடியில் முக்கியமான விவசாயப் பயிரான எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி பெருகி விவசாயம் மேம்படும்.

    தென்காசி மாவட்டத்தில் கனிம வளம் தொடர்ந்து களவாடப்பட்டு வருகிறது. பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் சூழலில் நீர் மேலாண்மைக்கும், விவசாயத்திற்கும், கல்விக்கும், தொழில் முனைவுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுடன், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகமும் நடைபெறும்.

    பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வருகிற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது தமிழக பெண்களுக்கு உரிமை தொகையாக ரூ.2,500 வழங்கப்படும்.

    2026 தேர்தல் அல்ல. அது ஒரு புரட்சி. தலை குனிந்த தமிழகத்தை மீண்டும் தலை நிமிர செய்யப்போகும் கட்சி பா.ஜ.க. 2026 தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கட்சி புரட்சியை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×