என் மலர்

    இந்தியா

    உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனை: விடிய விடிய காத்திருந்து ரத்த மாதிரிகளை தந்த 200 குடும்பத்தினர்
    X

    உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனை: விடிய விடிய காத்திருந்து ரத்த மாதிரிகளை தந்த 200 குடும்பத்தினர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை அறை அருகே திரண்டனர்.
    • விபத்தில் இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளனர்.

    அகமதாபாத்:

    அகமதாபாத் விபத்து நடந்த இடத்தில் பயணிகளின் உடல்கள் தீயில் கருகிய நிலையில் கிடந்தன. அந்த உடல்களை மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அகமதாபாத்தில் உள்ள பி.ஜே. மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியானவர்களின் உடல்கள் கருகிய நிலையில் இருந்ததால் பயணிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே பலியான பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இறந்தவர்களின் உடலில் இருந்து மரபணு சேகரிக்கப்படும். அதேபோல விமான பயணிகளின் குடும்பத்தினரிடமும் மரபணு சேகரிக்கப்பட்டு, அவற்றை ஒப்பிட்டு உடல்கள் அடையாளம் காணப்படும். அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை அறை அருகே திரண்டனர். விமான விபத்தில் மணிப்பூர், ராஜஸ்தான், மகாராஷ்டிரத்தை சேர்ந்த பலர் இறந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினர் நேற்று இரவு முதலே ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளை வழங்கினர்.

    இதற்காக நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய ஆஸ்பத்திரியில் காத்திருந்து ரத்த மாதிரிகளை வழங்கினர். இன்று அதிகாலை 5 மணி வரை 200 பேர் தங்களது ரத்த மாதிரிகளை வழங்கியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் டி.என்.ஏ. பரிசோதனைக்காக நாளை வருவார்கள் என மருத்துவ கல்லூரியின் தடயவியல் துறையை சேர்ந்த குல்தீப்சிங் பரோட் கூறினார்.

    Next Story
    ×