என் மலர்

    இந்தியா

    சவப்பெட்டிகளுக்கு பாஸ்போர்ட் தேவை இல்லை.. அகமதாபாத்தில் 100 சவப்பெட்டிக்கு ஆர்டர் பெற்ற தொழிலாளி
    X

    "சவப்பெட்டிகளுக்கு பாஸ்போர்ட் தேவை இல்லை.." அகமதாபாத்தில் 100 சவப்பெட்டிக்கு ஆர்டர் பெற்ற தொழிலாளி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எல்லைகளையும் விசாக்களையும் பற்றி மக்கள் பேசுகிறார்கள்.
    • AI-171 விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்தனர்.

    நாட்டையே உலகிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளின் கதைகள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

    உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண உறவினர்கள் அகமதாபாத் சிவில் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்காக 20 மர சவப்பெட்டிகளுடன் ஒருவர் நேற்று மருத்துவமனை வந்தார். அவரை ஊடங்கங்கள் பேட்டி கண்டன.

    47 வயதான நிமேஷ் வகேலா அவ்வூரை சேர்ந்த சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளி ஆவார். 15 ஆண்டுகளாக இத்தொழிலில் நிமேஷ் ஈடுபட்டு வருகிறார்.

    சராசரியாக ஒரு நாளைக்கு 7 சவப்பெட்டிகள் தயாரிக்கும் நிமேஷ், AI-171 விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில், 100 சவப்பெட்டிகளுக்கான அவசர ஆர்டரைப் பெற்றார்.

    "எல்லைகளையும் விசாக்களையும் பற்றி மக்கள் பேசுகிறார்கள். ஆனால் சவப்பெட்டிகளுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. மரணத்தில் எல்லாம் ஒரே மாதிரியாகத் தெரிகிறது" என்கிறார் நிமேஷ்.

    உயிரிழந்தவர்களின் உடல்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வழக்கமாக உதவுவதாகவும் கூறிய அவர், "ஆனால் இது வித்தியாசமாக உணர்வு" என்றும் கூறினார்.

    அதிக தேவை இருந்தபோதிலும், விலையை உயர்த்தவோ அல்லது முன்கூட்டிய பணம் வாங்கவோ அவர் மறுத்துவிட்டார்.

    "இது லாபத்திற்கான நேரம் அல்ல" என்று கூறிவிட்டு மேலும் சவப்பெட்டிகளைத் தயாரிக்க தனது பட்டறையை நோக்கி அவர் புறப்பட்டார்.

    Next Story
    ×