என் மலர்

    இந்தியா (National)

    எய்ம்சின் தரத்தை குறைக்க அனுமதிக்க மாட்டோம்- சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா உறுதி
    X

    எய்ம்சின் தரத்தை குறைக்க அனுமதிக்க மாட்டோம்- சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா உறுதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 1960-களில் கட்டப்பட்டது.
    • உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 220 கோடிக்கு அதிகமான டோஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் பணியாற்றி வரும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில டாக்டர்களின் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இரு மாநிலங்களின் புதிய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடர்பாக பேசினார். அப்போது, இந்த மருத்துவக்கல்லூரிகளின் தரத்தை குறைக்கமாட்டோம் என உறுதிபட தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 1960-களில் கட்டப்பட்டது. ஆனால் 1980-களில்தான் அரு ஒரு பிராண்டாக உருவெடுத்தது. அந்தவகையில் எந்தொரு நிறுவனமும் முழு அளவில் வளர்ச்சியடையவும், இயங்கவும் 20 ஆண்டுகள் எடுக்கும்.

    அதேநேரம் எய்ம்ஸ் தரத்தை குறைக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அந்த பிராண்ட் பெயரை பாதுகாப்போம். மேலும் ஆசிரியர் தேர்வில் எந்தவித சமரசமும் செய்யமாட்டோம்.

    பீகாரின் தர்பங்காவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான பூமி பூஜை விரைவில் நடைபெறும். ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி ஊழியர் தேர்வுடன் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    மருத்துவக்கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான கொள்கை மாற்றங்கள் நடந்துள்ளது.

    ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை மையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திராக மாற்றப்பட்டு உள்ளன. தற்போது 1.73 லட்சம் மந்திர்கள் உள்ளன. டிஜிட்டல் முறையில் அவற்றின் தர மதிப்பீடு நடைபெறுகிறது.

    பிரதம மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது.

    உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 220 கோடிக்கு அதிகமான டோஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    387 ஆக இருந்த நாட்டின் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 786 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 156 மாவட்ட மருத்துவமனைகள் மருத்துவக்கல்லூரிகளாக மாற்றப்பட்டு உள்ளன.

    இதைப்போல எம்.பி.பி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 75 ஆயிரத்துக்கு மேல் உயர்த்தவும் திட்டம் உள்ளது.

    இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

    Next Story
    ×