என் மலர்

    இந்தியா

    Karnataka: சக மாணவனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற  9ஆம் வகுப்பு மாணவன்.. மேலும் 7 பேர் படுகாயம்
    X

    Karnataka: சக மாணவனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற 9ஆம் வகுப்பு மாணவன்.. மேலும் 7 பேர் படுகாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விடுதியில் சக மாணவர்களுடன் சிறுவனுக்கு சிறிய விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • விடுதி வார்டனையும் தாக்கிவிட்டு சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் குருகல் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியின் விடுதியில் தங்கி சிறுவன் ஒருவன் 9 வகுப்பு படித்து வந்தான். விடுதியில் சக மாணவர்களுடன் சிறுவனுக்கு சிறிய விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், இரவில் சக மாணவர்கள் தங்கள் அறைகளில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது இரும்புக் கம்பியுடன் சென்று அவர்களை சரமாரியாக தங்கியுள்ளான்.

    இதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர். விடுதி வார்டனையும் தாக்கிவிட்டு சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

    பள்ளி நிர்வாகம் அந்த மாணவர் இரும்புத் கம்பியை பயன்படுத்தியதாகக் கூறுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர், அவர்கள் கத்தியால் குத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற ஏழு மாணவர்கள் பெல்லாரியில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

    தப்பியோடிய மாணவனை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

    Next Story
    ×