என் மலர்

    கர்நாடகா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மாரிஹால் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு.

    கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சாம்ப்ரா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சாம்ப்ரா விமான நிலைய இயக்குனர் தியாகராஜின் மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.

    இந்த வெடிகுண்டு மிரட்டல் மாரிஹால் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஷ்ரவ்யா என்ற இளம்பெண் (19) தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • அவரது அக்காவுடன் ஷ்ரவ்யா பெட்ஷீட்டுக்காக சண்டை போட்டுள்ளார்.

    பெங்களூரு நகரின் சாமராஜ் பேட்டை பகுதியில் அக்காவுடன் பெட்ஷீட்டுக்காக சண்டைபோட்ட தங்கை தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஷ்ரவ்யா என்ற இளம்பெண் (19) தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18 ஆம் தேதி அவரது அக்காவுடன் ஷ்ரவ்யா பெட்ஷீட்டுக்காக சண்டை போட்டுள்ளார்.

    நேற்று காலை ஷ்ரவ்யா தனது அறையின் கதவை பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது ஷ்ரவ்யா தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ, அகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஸ்டார் ஏர், அலையன்ஸ் ஏ உள்ளிட்ட விமானங்களுக்கு மிரட்டல்
    • நேற்று ஒரே நாளில் 30-க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

    இந்தியாவில் கடந்த ஓரே வாரத்தில் மட்டும் 70 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் (BCAS) டெல்லியில் வைத்து விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    கடந்த வாரம் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ, அகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஸ்டார் ஏர், அலையன்ஸ் ஏ உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. ஆனால் இதில் பெரும்பாலானவை வதந்தி ஆகும்.

    குறிப்பாக நேற்று ஒரே நாளில் 30-க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த மிரட்டல்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இயக்குநர் ஜூலிப்கர் ஹாசன், இந்திய வான்பரப்பு பாதுகாப்பனவை, பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. பயணிகள் எந்த பயமும் இன்றி விமான பயணங்களை மேற்கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர் கிச்சா சுதீப்.
    • கிச்சா சுதீப் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழில் நான் ஈ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் (வயது 86) வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
    • ரசாயனம், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதாவது முதல் நாள் தமிழர்களும், 2-வது நாள் வடமாநிலத்தினரும், 3-வது, 4-வது, 5-வது நாள் ஆகிய 3 நாட்களும் கன்னடர்களும் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

    அதுபோல் இந்த ஆண்டு கர்நாடகத்தில் வருகிற 31-ந்தேதி தொடங்கி 4-ந்தேதி வரை 5 நாட்கள் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் நவம்பர் 2-ந்தேதி அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் பட்டாசுகளை வெடிப்பதால் ஒலி, காற்று மாசு ஏற்படுவதாகவும் எனவே தீபாவளி பண்டிகையின் போது பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் பட்டாசு வெடிக்க விதித்த கட்டுப்பாடுகள் சரியான முடிவே என உத்தரவிட்டது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக அரசு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இரவு 2 மணி நேரம் மட்டுமே பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக கர்நாடகத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரியான ஈஸ்வர் கன்ட்ரே தான் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தீபாவளிக்கு தீப ஒளியான தீபம் ஏற்றி மக்கள் கொண்டாட வேண்டும். பட்டாசுக்கள் வெடிப்பதால் காற்று மாசு, ஒலி மாசு ஏற்படும். அதனை தடுக்க வேண்டும். பட்டாசுகள் வெடிப்பதால் முதியோர்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எனவே தீபாவளி பண்டிகைக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே மக்கள் வெடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ரசாயனம், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். சில சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்து தங்களது கண்களில் காயங்கள் ஏற்பட்டு பார்வை குறைபாடு ஏற்படும் நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம். இன்னும் பலர் உடலில் பெரிய அளவில் காயங்கள் ஏற்படுகிறது. எனவே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    125 டெசிபல் குறைவான ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடியுங்கள். தீபாவளி பண்டிகைக்கு பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூட உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நமது மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இந்த உத்தரவுகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தியின் போது பட்டாசுகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி வழங்கும் போது, வியாபாரிகளிடம் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்க வேண்டும், அவற்றையே குடோன்களில் சேமித்து வைக்க வேண்டும் என்று எழுதி வாங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.

    மேலும் அந்த விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு, அடுத்த முறை பட்டாசுகள் விற்கும் அனுமதி வழங்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதே வழிமுறைகளை தற்போது தீபாவளி பண்டிகைக்கும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் பின்பற்ற வேண்டும்.

    தீபாவளி பண்டிகைக்கு பசுமை பட்டாசுகள் வெடிக்கும்படியும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தீபாவளி பண்டிகையை தீபம் ஏற்றி அனைவரும் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    மந்திரி கூறியபடியே கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அணி 2வது இன்னிங்சில் 462 ரன்கள் குவித்தது.
    • 2வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் 99 ரன்னில் அவுட் ஆனார்.

    பெங்களூரு:

    இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து, 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சர்பராஸ் கானுடன், ரிஷப் பண்ட் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்னிலும், ரிஷப் பண்ட் 99 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

    இறுதியில், இந்திய அணி 2வது இன்னிங்சில் 462 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    நியூசிலாந்து சார்பில் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்க் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மையால் 4-ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் எம்.எஸ்.டோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

    இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பண்ட் 62 இன்னிங்சில் 2,500 ரன்களைக் கடந்துள்ளார்.

    இதற்குமுன் எம்.எஸ்.டோனி 69 இன்னிங்சில் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். அந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்து தற்போது புதிய சாதனை படைத்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது.
    • ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர்.

    பெங்களூரு:

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

    இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சில் சிக்கி, 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.

    தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர்.

    366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோகித் சர்மா அரை சதம் அடித்து 52 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி 53 ரன்கள் எடுத்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

    சச்சின் டெண்டுல்கர் (15,921 ரன்) முதலிடத்திலும், ராகுல் டிராவிட் (13,265 ரன்) 2வது இடத்திலும், சுனில் கவாஸ்கர் (10,122 ரன்) 3வது இடத்திலும் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓலா எலெக்ட்ரிக், பண்டிகைக் காலத்திற்கான மிகப்பெரிய ஓலா சீசன் விற்பனை அறிவிப்பு.
    • இது, எலெக்ட்ரிக் வாகனத்திற்கு மாறுவதற்கான சிறந்த நேரமாகும்.

    இந்தியாவின் மிகப்பெரிய பியூர்-பிளே EV நிறுவனமான Ola Electric, பண்டிகைக் காலத்திற்கான அதன் மிகப்பெரிய Ola சீசன் விற்பனை விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புதிய 'BOSS' சலுகைகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் S1 போர்ட்ஃபோலியோவில் ₹ 20,000 வரையிலான தள்ளுபடியைப் பெறலாம் மற்றும் ஸ்கூட்டர்களில் ₹ 25,000 வரை மதிப்புள்ள கூடுதல் நன்மைகளைப் பெறலாம். இது, EVக்கு மாறுவதற்கான சிறந்த நேரமாகும்.

    'BOSS' விளம்பரப் பிரச்சாரத்தின் கீழ், நிறுவனம் பின்வரும் நன்மைகளை வழங்கும்:

    ● BOSS விலைகள் : Ola S1 போர்ட்ஃபோலியோ வெறும் ரூ. 74,999ல் தொடங்குகிறது.

    ● BOSS தள்ளுபடிகள் : முழு S1 போர்ட் ஃபோலியோவில் ரூ. 20,000 வரை கிடைக்கும்.

    ரூ. 25,000 வரையிலான கூடுதல் BOSS நன்மைகள் :

    'BOSS' உத்தரவாதம் : ரூ.7,000 மதிப்புள்ள இலவச 8 ஆண்டுகள்/80,000 கி.மீ பேட்டரி உத்தரவாதம்.

    'BOSS' ஃபைனான்ஸ் சலுகைகள் : தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு EMIகளில் ரூ.5,000 வரையிலான நிதிச் சலுகைகள்.

    BOSS நன்மைகள் : ரூ.6,000 மதிப்புள்ள இலவச MoveOS+ மேம்படுத்தல்; ரூ.7,000 வரையிலான மதிப்புள்ள இலவச சார்ஜிங் கிரெடிட்கள். 

    Ola Electric ஆனது வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு வரம்புத் தேவைகளைக் கொண்ட கவர்ச்சிகரமான விலைப் புள்ளிகளில் ஆறு சலுகைகளுடன் விரிவான S1 போர்ட்ஃபோலியோவை வழங்குகிறது. பிரீமியம் சலுகைகளான S1 Pro மற்றும் S1 Air ஆகியவை முறையே ரூ.1,34,999 மற்றும் ரூ.1,07,499 விலையில் கிடைக்கின்றன. மாஸ் மார்க்கெட் சலுகைகளில் S1 X போர்ட்ஃபோலியோ (2 kWh, 3 kWh மற்றும் 4 kWh) முறையே ரூ.74,999, ரூ.87,999 மற்றும் ரூ.101,999 விலைகளில் கிடைக்கின்றன.

    Ola Electric சமீபத்தில் #HyperService விளம்பரப் பிரச்சாரத்தை அறிவித்தது. இதன் கீழ், நிறுவனம் தனது சேவை வலையமைப்பை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 1,000 மையங்களாக இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, இந்தியா முழுவதும் அதன் விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க்கை விரிவுபடுத்த நெட்வொர்க் பார்ட்னர் திட்டத்தையும் அறிவித்தது. திட்டத்தின் ஒரு பகுதியாக, ஓலா எலெக்ட்ரிக் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் நெட்வொர்க்கை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், ஓலா எலெக்ட்ரிக் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மெக்கானிக்கையும் EV-க்கு தயார்படுத்த ஒரு லட்சம் மூன்றாம் தரப்பு மெக்கானிக்களுக்கு பயிற்சி அளிக்கும்.

    ஆகஸ்ட் 2024 இல் தனது வருடாந்திர 'சங்கல்ப்' நிகழ்வில், Roadster X (2.5 kWh, 3.5 kWh, 4.5 kWh), Roadster (3.5 kWh, 4.5 kWh, 6 kWh) மற்றும் Roadster ஆகியவற்றை உள்ளடக்கிய Roadster புரோ (8 kWh, 16 kWh). மோட்டார் சைக்கிள் தொடரை அறிமுகப்படுத்துவதாக நிறுவனம் அறிவித்தது. மோட்டார்சைக்கிள்கள் பல பிரிவு-முதல் தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் அம்சங்களை வழங்குகின்றன, அவற்றின் விலைகள் முறையே INR 74,999, INR 1,04,999 மற்றும் INR 1,99,999 முதல் தொடங்குகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட் கைப்பற்றினார்.

    பெங்களூரு:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னும், ரிஷப் பந்த் 20 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

    நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 22 ரன்னும், டேரில் மிட்செல் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், நியூசிலாந்து அணி விளையாடியபோது பீல்டிங் செய்த சக வீரர் சர்பராஸ் கான் பொசிஷனில் இல்லாததைப் பார்த்த கேப்டன் ரோகித் சர்மா சத்தம் போட்டுக் கத்தினார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாகேந்திரா மீது 18 கிரிமினல் வழக்குள் உள்ளதாக ஜனார்த்தன ரெட்டி விமர்சனம்.
    • 100 வழக்குகள் உள்ளவர்கள் முதல்வரான சம்பவம் நடந்துள்ளதாக நாகேந்திரா பதிலடி.

    கர்நாடக மாநில மந்திரியாக இருந்தவர் நாகேந்திரா. வால்மீகி கார்ப்பரேசன் மோசடி வழக்கில், மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் சிறைக்குச் சென்ற அவர் நேற்று ஜாமினில் விடுதலையானார். ஜாமினில வெளியே வந்த நாகேந்திரா, தனக்கு கர்நாடக மாநில முதல்வராகும் தகுதி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    நாகேந்திரா மீது 18 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஜனார்த்தன ரெட்டி எம்.எல்.ஏ. கூறியிருந்த நிலையில் "100 கிரிமினல் வழக்குகள் உள்ளவர் முதலமைச்சராகிய சம்பவம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    89.63 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டு காரணமாக நாகேந்திரா தனது பழங்குடியினர் நலத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறை அவரை கைது செய்த நிலையில் சுமார் மூன்றரை மாதங்கள் கழித்து நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.

    தன்மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாகேந்திரா கூறுகையில் "வெறும் 18 வழக்குகள் அல்ல. 100 வழக்குகள் உள்ளவர்கள் முதல்வராகி இருக்கிறாரக்ள். வரும் நாட்களில் எனக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. நான் காங்கிரசுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தால், நான் ஏன் முதலமைச்சராக ஆகக்கூடாது?. என்னைப் போன்ற சாதாரண உழைப்பாளியை காங்கிரஸ் அமைச்சராக்கவில்லையா? சாதாரணவர்களையும் கவுரவிக்கும் பாரம்பரியம் காங்கிரசுக்கு உண்டு" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆந்திரா, கர்நாடகாவில் இரவில் மழை வெளுத்து வாங்கியது. பகலிலும் மழை நீடித்தது.
    • பணிகளுக்கு புறப்பட்டவர்கள் பரிதவித்தபடி சென்றனர்.

    வடகிழக்கு பருவமழை வந்தாலே சென்னை மிதக்கும், இது வாடிக்கைதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது சென்னை நிலவரம் அல்ல. ஐ.டி. நகரமான பெங்களூருவில்தான் நிலைமை மோசமாகி இருக்கிறது.

    தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக பெய்த கனமழை, இரவில் ஓய்ந்தது. ஆனால் ஆந்திரா, கர்நாடகாவில் இரவில் மழை வெளுத்து வாங்கியது. பகலிலும் மழை நீடித்தது. மன்யாதா டெக் பார்க் பகுதியில்தான் சாலை, கால்வாய்போல வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதில் கார்கள் நீந்தி செல்வதுபோல மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இதனால் பணிகளுக்கு புறப்பட்டவர்கள் பரிதவித்தபடி சென்றனர். இதுகுறித்த வீடியோ காட்சி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது. சுமார் 2½ லட்சம் பேர் வீடியோவை பார்த்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சித்தராமையா மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு எனக் குற்றச்சாட்டு.
    • லோக்ஆயுக்தாவின் மைசூரு கிளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

    லோக்ஆயுக்தா அமைப்பின் மைசூரி கிளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சாட்சிகளை அழித்ததாக அமலாக்கத்துறையும் குற்றம்சாட்டியுள்ளது.

    இந்த நிலையில் மூடா தலைவராக இருந்த மாரி கவுடா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். உடல்நலத்தை சுட்டிக்காட்டி தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    1983-ல் இருந்து மாரி கவுடா சித்தராமையாவுடன் நெருக்கமாக இருந்து பல்வேறு பதவிகள் வகித்தவர். மைசூரு தாலுகா பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றார். 2000-த்தில் டவுண் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தார். அதன்பின் 8 வருடம் கழித்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    மாரி கவுடா ராஜினாமா குறித்து சித்தராமையா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    மைசூரு நகர்ப்புற திட்டத்திற்கான ஒரு இடத்தை கொடுத்ததற்கான மதிப்புமிக்க இடத்தில் 14 மனைகள் சித்தராமையா மனைவி பி.என். பார்வதி பெயருக்கு ஒதுக்கபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன்மூலம் மாநில அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பீடு என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    ஆனால், இந்த மனைகள் தனது மனைவியின் சகோதரர் பரிசாக கொடுத்தது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சித்தராமையா மனைவி 14 மனைகளையும் திருப்பி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பும் அதை திரும்பி வாங்க ஒப்புக் கொண்டது.

    ×