என் மலர்

    கர்நாடகா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எண்ணெய் நிறுவனங்கள் வணிகரீதியான சிலிண்டர் விநியோகத்தை திடீரென நிறுத்தியுள்ளன.
    • ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான்-இஸ்ரேல்) நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, எண்ணெய் நிறுவனங்கள் வணிகரீதியான சிலிண்டர் விநியோகத்தை திடீரென நிறுத்தியுள்ளன.

    கடந்த சனிக்கிழமை (மார்ச் 7), வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60-ம், வணிக சிலிண்டர் விலை ₹115-ம் உயர்த்தப்பட்டது.

    சிலிண்டர் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த ₹150 தள்ளுபடி நிறுத்தப்பட்டதால், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு மொத்தம் ₹265 கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

    இதனால், பெங்களூருவில் நிலவி வரும் வணிகரீதியான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, நாளை முதல் (மார்ச் 10, 2026) ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வளைகுடா நாடுகளில் போர்ச் சூழல் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு எரிபொருள் வருகை முற்றிலும் தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விடுதியில் சக மாணவர்களுடன் சிறுவனுக்கு சிறிய விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • விடுதி வார்டனையும் தாக்கிவிட்டு சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் குருகல் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியின் விடுதியில் தங்கி சிறுவன் ஒருவன் 9 வகுப்பு படித்து வந்தான். விடுதியில் சக மாணவர்களுடன் சிறுவனுக்கு சிறிய விஷயத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், இரவில் சக மாணவர்கள் தங்கள் அறைகளில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது இரும்புக் கம்பியுடன் சென்று அவர்களை சரமாரியாக தங்கியுள்ளான்.

    இதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்தனர். விடுதி வார்டனையும் தாக்கிவிட்டு சிறுவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். 

    பள்ளி நிர்வாகம் அந்த மாணவர் இரும்புத் கம்பியை பயன்படுத்தியதாகக் கூறுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர், அவர்கள் கத்தியால் குத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இத்தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற ஏழு மாணவர்கள் பெல்லாரியில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

    தப்பியோடிய மாணவனை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக அவர் அறிவித்தார்.
    • புத்தகத்தை ஏந்து, மொபைலை கைவிடு.

    கர்நாடகாவின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெடை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    இதன்போது, கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக அவர் அறிவித்தார்.

    மொபைல் போன் மற்றும் சமூக ஊடகங்களுக்கு சிறுவர்கள் அடிமையாவதைத் தடுக்கவும், அவர்களின் மனநலத்தை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா அவையில் தெரிவித்தார்.

    முன்னதாக பெங்களூருவில் நடந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்தத் தடையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

    "புத்தகத்தை ஏந்து, மொபைலை கைவிடு" என்ற பெயரில் மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பிரசாரத்தை கர்நாடக அரசு முன்னெடுத்துள்ளது.

    முன்னதாக சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளா
    • தலைமறைவான மாமியார் கல்பனாவை தேடி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சமையல் செய்வது தொடர்பாக மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உயிரிழந்த சுஷ்மா (35) Dell நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக முன்பு பணியாற்றி வந்தவர்.

    இவருக்கும் புனீத் குமார் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    கடந்த சில காலமாகவே குடும்பத்தில் சிறு சிறு விஷயங்களுக்காக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    குறிப்பாக, சமையல் செய்வது தொடர்பாக சுஷ்மாவிற்கும் அவரது மாமியார் கல்பனாவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    தன்னைசமையல் செய்ய விடாமல் மாமியார் தடுத்து வந்ததாகவும், தன்னை தொடர்ந்து மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் சுஷ்மா தனது குடும்பத்தினரிடம் முன்பே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

    நேற்று மாமியாருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவத்தால் மனமுடைந்த சுஷ்மா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    சுஷ்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சுஷ்மாவின் கணவர் புனீத் குமாரைப் கைது செய்த போலீசார், தலைமறைவான மாமியார் கல்பனாவை தேடி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜம்மு காஷ்மீர் முதல் இன்னிங்சில் 584 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    ஹூப்ளி:

    ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ரஞ்சி டிராபிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 584 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். யாவர் ஹசன் 88 ரன்னும், கேப்டன் பரஸ் டோக்ரா அரை சதம் கடந்து 70 ரன்னும், அப்துல் சமது 61 ரன்னும், கண்ணையா வாத்வான் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷகில் லோத்ரா 72 ரன் எடுத்தார்.

    கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 130 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜம்மு காஷ்மீரின் ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • அந்த அணியின் மேலும் 5 வீரர்கள் அரை சதம் கடந்து அசத்தினர்.

    ஹூப்ளி:

    ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ரஞ்சி டிராபிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூப்ளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. ஷுபம் பண்டிர் சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் யாவர் ஹசன் 88 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்துல் சமது அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் பரஸ் டோக்ரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்துல் சமது 61 ரன்னில் வெளியேறினார். கண்ணையா வாத்வான் 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் ஜம்மு காஷ்மீர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 527 ரன்கள் குவித்துள்ளது. ஷகில் லோத்ரா 57 ரன்னும், அபித் முஷ்டாக் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுவாக மாமியார், மருமகள், எலியும் பூனையுமாக சண்டையிட்டுகொள்வதை தான் பார்த்திருப்போம்.
    • தற்போது 2 பேரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா மாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தாபாய். இவருக்கு திருமணமாகி பிரகாஷ் என்ற மகன் உள்ளார். பிரகாசுக்கும்- பாசம்மா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் பிரகாசின் மனைவி பாசம்மா கடந்த 9 மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதியடைந்து வந்தார். அவருக்கு சிறுநீரக தானம் செய்ய யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அவரது மாமியார் சாந்தாபாய் அவரது சிறுநீரகத்தை தனது மருமகளுக்கு தானமாக வழங்க முன்வந்தார். அதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் சாந்தாபாயிடம் இருந்து சிறுநீரகத்தை எடுத்து. மருமகள் பாசம்மாவுக்கு டாக்டர்கள் பொருத்தினர். தற்போது 2 பேரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பொதுவாக மாமியார், மருமகள், எலியும் பூனையுமாக சண்டையிட்டுகொள்வதை தான் பார்த்திருப்போம். ஆனால் சாந்தாபாய் தனது மருமகளின் உயிரை காப்பாற்ற தனது ஒரு சிறுநீரகத்தை வழங்கியிருப்பது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இறுதிப்போட்டியில் ஜம்மு காஷ்மீரும், கர்நாடக அணிகளும் மோதின.
    • டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஹூப்ளி:

    ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நேற்று தொடங்கியது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் யாவர் ஹசன் 88 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய ஷுபம் பண்டி சதமடித்து 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அப்துல் சமது அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிகாலை வெட்டப்பட்ட கரும்புகளை டிராக்டரில் அடுக்கி அதன் மேல் அமர்ந்து பயணம் செய்தனர்.
    • திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜகமண்டி தாலுகா பகுதிக்கு கரும்பு வெட்டுவதற்காக மகாராஷ்டிரா மாநிலம் யுவத்மால் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் வெட்டப்பட்ட கரும்புகளை டிராக்டரில் அடுக்கி அதன் மேல் அமர்ந்து பயணம் செய்தனர்.

    அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் பயணம் செய்த மகாராஷ்டிராவை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மணீஷ் பாண்டே (23), லட்சுமிசிராமதி (27), ரேகா பூகே மற்றும் 2 வயது குழந்தை ஹலகி பாண்டே ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள்.

    இந்த விபத்து பற்றி தெரியவந்ததும் ஜகமண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வங்கியின் எதிரே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு வாங்கிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றார்.
    • அந்த வழியாக அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் அவர் மீது மோதியது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கெம்பேகவுடா லேஅவுட் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரி (27 டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.

    கடந்த திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில், யோகேஸ்வரி வங்கியின் எதிரே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு வாங்கிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ராயல் என்பீல்டு புல்லட் பைக் அவர் மீது மோதியது.

    இந்த விபத்தில் யோகேஸ்வரி மற்றும் பைக்கை ஓட்டி வந்த தீபக் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, யோகேஸ்வரி அன்று இரவு 9 மணி அளவில் உயிரிழந்தார்.

    பைக்கை ஓட்டி வந்தவர் உல்சூர் பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 160 கி.மீ வேகத்தில் சொகுசு கார் சென்றது.
    • உங்கள் மகன்களின் உடல்களை அடையாளம் காட்ட வாருங்கள்.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஹோஸ்கோட் பகுதியின் கம்பளிபுரா கேட் சேட்டிலைட் ரிங் ரோட்டில் நடந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

    நேற்று அதிகாலை 5:15 மணியளவில் 160 கி.மீ வேகத்தில் வந்த வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ககன் (26) என்பவர் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் ககன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பைக் மீது மோதிய வேகத்தில், கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. சாலையோர தடுப்புச் சுவரில் மோதிய கார், சுமார் 150 மீட்டர் தூரத்திற்குத் தேய்த்துக் கொண்டே சென்று நின்றது. இதில் கார் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்தது.

    காரில் பயணம் செய்த 16 வயதுடைய அஹ்ரம் ஷெரீப் , 17 வயது அயன் அலி, பாரத், அஸ்வின் நாயர், ஈதன் ஜார்ஜ் , முகமது ஷேக் ஆகிய 6 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் உயிரிழந்த சிறுவர்களின் வீட்டுக்கு தகவல் தர போலீசார் போன் செய்தபோது பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    தேர்வு நெருங்குவதால் தங்கள் மகன்கள் வீட்டின் அறையில் படித்துவிட்டு, உறங்குகிறார்கள் என்று நினைத்திருந்த பெற்றோர், "உங்கள் மகன்களின் உடல்களை அடையாளம் காட்ட வாருங்கள்" என்று போலீசார் கூறியபோது அதிர்ச்சி அடைந்தனர்.

    பெற்றோர் மகன்களின் அறைக்கு சென்று பார்த்தபோது படுக்கைகள் காலியாக இருந்துள்ளன. அப்போதுதான் தங்கள் மகன்கள் தங்களுக்கு தெரியாமல் வெளியே சென்றதை அவர்கள் உணர்த்தனர்.

    உயிரிழந்த சிறுவர்களில் ஒருவனான அயன் அலி தனது தந்தையின் காரில் ஐவரையும் அழைத்துச் சென்றுள்ளது தெரியவந்தது. 6 மாதத்திற்கு பின்புதான் அந்த காரை தந்தை வாங்கியிருந்த நிலையில் அயன் அதை வெளியே எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறான். 

    மருத்துவமனையில் உடல்களை அடையாளம் காண வந்த பெற்றோரில் ஒருவர் கூறுகையில், வெளியே செல்லக் கூடாது என்று கண்டிப்புடன் கூறி நள்ளிரவிலும் அறைக்குச் சென்று கண்காணித்துக் கொண்டேதான் இருந்தோம்.

    ஆனால், அதிகாலையில் எழுந்து பார்த்தால் மகனைக் காணவில்லை. வந்துவிடுவான் என்றுதான் எண்ணியிருந்தோம். ஆனால் போலீசிடம் இருந்து தகவல் தான்வந்தது என்றார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடைசியாக 2016-ல் பெங்களூருவில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது.
    • கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

    பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் மீண்டும் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நேற்று (பிப்.12) ஒப்புதல் வழங்கியுள்ளது.

    கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்சிபி அணி வென்றதையடுத்து, ஜுன் மாதம் சின்னசாமி மைதானத்தில் வெற்றிவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது நீதிபதி டி'குன்ஹா அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று, பாதுகாப்பு விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைதானத்தின் முழு கொள்ளளவையும் பயன்படுத்தாமல், அதிகபட்சமாக 30,000 முதல் 35,000 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.

    மைதானத்தின் நுழைவு வாயில்களை அகலப்படுத்துதல், கூட்டத்தை ஒழுங்குபடுத்த AI கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்துதல் போன்ற மேம்பாடுகளைச் செய்ய கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது மைதானத்தில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், வழக்கமான நடைமுறைப்படி நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான இதில், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியும், குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும்.

    கடைசியாக 2016-ல் பெங்களூருவில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது.

    ×