என் மலர்

    கர்நாடகா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க.வினர் சிலர் முதல்-மந்திரி சித்தராமையா பேசிக்கொண்டிருந்தபோது கருப்பு கொடி காட்டினர்.
    • வீடியோ வைரலாகி விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    கர்நாடக காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக விலைவாசி உயர்ந்து வருகிறது. சமுதாயத்தை உடைக்கும் வேலையை இந்த பா.ஜ.க. செய்கிறது. மக்களுக்கு துரோகம் இழைக்கும் பணியை தவிர மத்திய பா.ஜனதா அரசு வேறு என்ன செய்கிறது?. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சங்பரிவார் அமைப்பினர் என்ன செய்தனர்?.

    காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் கர்நாடகத்தை சேர்ந்த 3 பேர் பலியாயினர். இது மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு இல்லையா? சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஒரு ராணுவ வீரர் இல்லை, ஒரு போலீஸ்காரர் இல்லை. இந்தியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வி அடைந்துள்ள மத்திய அரசு குறித்து கேள்வி எழுப்பக்கூடாதா?. நாடு சுதந்திரம் அடைந்து 51 ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது தேசிய கொடி ஏற்றப்படவில்லை.

    இதனால் பா.ஜ.க.வினருக்கு வெட்கம் ஏற்படவில்லையா?. சுதந்திர போராட்டம் முதல் நவீன இந்தியா வரை இதன் வளர்ச்சியில் பா.ஜ.க.வின் பங்கு என்ன?. வெட்கம் இல்லாமல் தேசபக்தி குறித்து அவர்கள் பேசுகிறார்கள். இந்தியர்களிடையே பிரிவினை ஏற்படுத்தியதை தவிர பா.ஜ.க. வேறு என்ன செய்தது?. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பணக்காரர்களுக்கு 32 சதவீத வரி விதிக்கப்பட்டது.

    ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. ஏழை, நடுத்தர மக்களுக்கு எதிரான மத்திய ஆட்சி நிர்வாகத்தை நாங்கள் எதிர்க்கக்கூடாதா?. இந்தியர்களை நிரந்தர பொய்களில் இன்னும் எத்தனை ஆண்டுகள் மூழ்கடிப்பீர்கள். மக்களுக்கு உண்மையை சொல்ல பா.ஜனதாவினர் முன்வர வேண்டும். நாட்டிற்காக காங்கிரஸ் தலைவர்கள் உயிா்த்தியாகம் செய்தனர். அதனால் போராட்டம் என்பது காங்கிரசுக்கு புதிது அல்ல.

    ஆங்கிலேயர்களை விரட்டி யடித்த எங்களுக்கு உங்களை (பா.ஜ.க.வை) எதிர்க்கும் சக்தி உள்ளது. நாங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி அதை அப்படியே விவசாயிகளுக்கு வழங்குகிறோம். பஸ் கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் உள்ளிட்டவை மற்ற மாநிலங்களை விட கர்நாடகத்தில் குறைவாகத்தான் உள்ளது. பா.ஜ.க.வின் பொய் பிரசாரத்தை கண்டு நான் பயப்பட மாட்டேன்.

    மத்திய அரசு அரிசி, சமையல் எண்ணெய், தங்கம், வெள்ளி, உரம், பருப்புகள், டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்துள்ளது. இந்த மத்திய அரசு எதை விட்டுவைத்து இருக்கிறது?. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்துவது என்பது நாட்டு மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனிடையே, பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்குள் நுழைந்த பா.ஜ.க.வினர் சிலர் முதல்-மந்திரி சித்தராமையா பேசிக்கொண்டிருந்தபோது கருப்பு கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த முதல்-மந்திரி சித்தராமையா ஏ.எஸ்.பி.யை அழைத்து, நீங்க என்ன பண்றீங்க? என கேள்வி கேட்டு கை ஓங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    காவல்துறை அதிகாரியை அடிக்க கையை உயர்த்துவது உங்கள் பதவிக்கோ கண்ணியத்திற்கோ எந்தப் பெருமையையும் தராது. உங்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் ஒரு அரசு அதிகாரி 60 வயது வரை பணியாற்றுகிறார். அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உங்கள் தவறான நடத்தையைத் திருத்திக் கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • "போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்கள்" என வெளியிட்டு வருகின்றன.
    • சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது உளவுத்துறையின் தோல்வி.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய கர்நாடக முதல்வர சித்தராமையா, "நாங்கள் போரை ஆதரிக்கவில்லை. அமைதி நிலவ வேண்டும், மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இந்த கருத்தை "போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்கள்" என ஜியோ நியூஸ் உள்ளிட்ட பிரபல பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

    இது குறித்து கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தான் ஊடகங்கள் சித்தராமையாவை புகழ்கின்றன.

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக நேருவை பாராட்டி ராவல்பிண்டியில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதே போல் தற்போது சித்தராமையாவை பாராட்டி பாகிஸ்தானில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்வார்களா?" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த நிலையில், தனது கருத்து குறித்து விளக்கமளித்த சித்தராமையா, "பாகிஸ்தானுடன் போருக்கு செல்லக்கூடாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.

    போர் எதற்கும் தீர்வாகாது என்றுதான் சொன்னேன். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது உளவுத்துறையின் தோல்வி. இந்திய அரசு போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை. போரை தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், நாம் நிச்சயமாக போருக்கு செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • காஷ்மீரில் அமைதியை உறுதி செய்ய மத்திய அரசு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.

    குறிப்பாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து மாநில முதல்வர்களுடன் பேசியுள்ளார்.

    இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தானியர்களை வெளியேற்றுதல் தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:-

    மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடக மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் பெறப்படும்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் போருக்கு ஆதரவாக இல்லை. காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீரில் அமைதியை உறுதி செய்ய மத்திய அரசு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • "ராகுல் காந்தி நாட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும், நாட்டிற்குள் ஏதோ ஒரு மோசமான விஷயம் நடக்கிறது"
    • அரசியல் விவாதங்களில் தேசிய நலனை இழுப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

    காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுடன் ஒத்துப்போகின்றன என்று உணர்த்தும் சமூக ஊடகப் பதிவிற்காக கர்நாடக காவல்துறை அம்மாநில பாஜக ஐடி பிரிவு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

    கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வையும், ராகுல் காந்தி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தையும் குறிப்பிட்டு அந்த பதிவு இருந்தது.

    சர்ச்சைக்குரிய அந்தப் பதிவில், "ராகுல் காந்தி நாட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும், நாட்டிற்குள் ஏதோ ஒரு மோசமான விஷயம் நடக்கிறது" என்று அவரின் புகைப்படத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவர் சி.எம். தனஞ்சயா அளித்த புகாரின் பேரில், பெங்களூருவில் உள்ள ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் பாஜக ஐடி பிரிவு மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்,"அரசியல் விவாதங்களில் தேசிய நலனை இழுப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

    எங்களுக்கு, நாட்டின் ஒற்றுமை முதலில் முக்கியம் எக்காரணம் கொண்டும் நாட்டின் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற முக்கியமான விஷயங்களை யாரும் அரசியலாக்கக்கூடாது. ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பும் மிக முக்கியமானது" என்று கூறினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. விராட் கோலி 42 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் விளாசினார். தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். பில் சால்ட் 26 ரன்னும், டிம் டேவிட் 23 ரன்னும், ஜிதேஷ் சர்மா 20 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார். அரை சதம் கடப்பார் என எதிர்பார்த்த நிலையில் 19 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 49 ரன்னில் அவுட்டானார்.

    நிதிஷ் ரானா 28 ரன்னும், ரியான் பராக் 22 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் துருவ் ஜூரல் அதிரடி காட்டினார். அவர் 34 பந்தில் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி திரில் வெற்றி பெற்றது. இது ஆர்சிபி அணியின் 6வது வெற்றி ஆகும். ராஜஸ்தான் அணியின் 7வது தோல்வி இதுவாகும்.

    ஆர்சிபி அணி சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், குருணால் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டில் மிகவும் வலுவான ராணுவ உளவுத்துறையை நாம் கொண்டுள்ளோம்.
    • பல்வேறு நிலைகளில் அவை சிறப்பாக செயல்பட்டுள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே உள்ளது பைசாரன் பள்ளத்தாக்கு. அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. பஹல்காம் மற்றும் பைசாரன் ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத்தலமாகும்.

    இந்த பகுதியில் நேற்று திடீரென சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் ஒவ்வொருவரின் பெயரை கேட்டு, தாக்குதல் நடத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனக் கூறப்படுகிறது.

    2019ஆம் ஆண்டு புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் உளவுத்துறை தோல்வியாகும் என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா கூறியதாவது:-

    நாட்டில் மிகவும் வலுவான ராணுவ உளவுத்துறையை நாம் கொண்டுள்ளோம். பல்வேறு நிலைகளில் அவை சிறப்பாக செயல்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் எப்படி, எங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு வந்தார்கள் என்பதில் ஏன் உளவுத்துறை தோல்வி நடைபெற்றது என்பதுதான் முக்கிய கேள்வி.

    மத்திய அரசு இந்த விசயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்துக்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளது இன்னும் கவலை அளிக்கிறது.

    இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்தார்.

    மேலும், இது தேசிய பாதுகாப்பு மற்றும் நமது சமூகத்தின் பாதுகாப்பு பற்றிய கேள்வி. இதில் நாம் ஏன் அரசியலை கொண்டு வர வேண்டும். நாம் எந்த அரசியல் கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது. நான் எந்த அரசியல் கட்சியின் பெயரையும் பயன்படுத்தவில்லை எனக் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொடர்ந்து 2 வாலிபர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கினார்.
    • இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

    பெங்களூரு:

    மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா விமானப்படை தளத்தில் விங் கமாண்டர் ஆக பணியாற்றி வருபவர் ஷிலாத்தியா போஸ். இவரது மனைவி மதுமிதா தத்தா. இவர் பெங்களூரு ராமன் நகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டி.ஆர்.டி.ஓ) சொந்தமான குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஷிலாத்தியா போஸ் பெங்களூருவில் உள்ள தனது மனைவியை பார்க்க வந்திருந்தார். நேற்று காலை 6 மணியளவில் போஸ் உடல் நிலை சரியில்லாத தனது தந்தையை பார்ப்பதற்காக கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டி பெங்களூரு விமான நிலையத்திற்கு மனைவியுடன் காரில் புறப்பட்டார். காரை மதுமிதா ஓட்டினார்.

    விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது பழைய மெட்ராஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகம் முன்பு மோட்டார்சைக்கிள் ஒன்று காரை முந்தி சென்றது.

    அப்போது கார், மோட்டார்சைக்கிள் மீது உரசியது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் திரும்ப வந்து காரை வழிமறித்தனர். பின்னர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி காரில் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த போஸை கையால் தாக்கினர்.


    மேலும் அருகில் கிடந்த கல்லால் தலையில் பலமாக தாக்கப்பட்டார். வாலிபர்கள் தாக்கியதில் சிலாத்தியா போசின் தலை, மூக்கில் காயம் ஏற்பட்டது.

    இந்த விவகாரம் குறித்து போஸ் கர்நாடகம் ஏன் இப்படி ஆனது. என்னால் நம்பவே முடியவில்லை. கடவுள் நமக்கு உதவுவார். தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய வேண்டும்.

    போலீசார் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

    இதுகுறித்து போஸின் மனைவி மதுமிதா தத்தா பையப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரில் வாலிபர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளின் பதிவு எண்ணை குறிப்பிட்டு இருந்தார்.

    விசாரணையில் போஸ் மீது தாக்குதல் நடத்தியவர் தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்ப வல்லுநராக பணியாற்றும் என்ஜினீயர் விகாஸ்குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.


    இந்த நிலையில் விமானப்படை அதிகாரி ஷிலாத்தியா போஸ் தொழில்நுட்ப வல்லுநர் விகாஸ்குமாரை கொடூரமாக தாக்கிய புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவில் போஸ் விகாஸ்குமாரின் சட்டை காலரை பிடித்து கையை கொண்டு பல முறை குத்தியதும், விகாஸ்குமார் கீழே விழுந்த பிறகும் நிற்காமல் கால்களை கொண்டு உதைத்த காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    அதோடு இல்லாமல் விகாஸ்சின் மோட்டார்சைக்கிளின் சாவியையும் பறித்து எறிந்தார். தொடர்ந்து 2 வாலிபர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கினார். உள்ளூர் மக்கள் சண்டையை விலக்கி விட போராடும் காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தன.

    இதையடுத்து விமானப்படை அதிகாரி போஸ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பையப்பனஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து பெங்களூரு கிழக்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் கூறுகையில், விமானப்படை விங் கமாண்டர் ஷிலாத்தியா போஸ் மீது மொழி பிரச்சினை தொடர்பாக தாக்குதல் நடைபெறவில்லை.

    காரும், மோட்டார்சைக்கிளும் உரசியதால் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது என தெரிவித்தார்.

    ஷிலாத்தியா போஸ், தொழில்நுட்ப வல்லுநர் விகாஸ்குமாரை கொடூரமாக தாக்கி விரட்டியடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எந்த நரம்பை வெட்டினால் மரணம் ஏற்படும் என்று கூகுளில் முன்னாள் டி.ஜி.பி மனைவி தேடியுள்ளார்.
    • கடந்த 15 ஆண்டுகளாக பல்லவி மனநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வந்தவர் ஓம்பிரகாஷ் (வயது 68). முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. இவரது மனைவி பல்லவி. இவர்களுக்கு கார்த்திகேஷ் என்ற மகனும், கிருதி என்ற மகளும் உள்ளனர். கார்த்திகேசுக்கு திருமணமாகி விட்டது. கிருதிக்கு இன்னும் திருமணமாகவில்லை. குடும்பத்தகராறு மற்றும் சொத்து பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் ஓம்பிரகாஷ் தனது மனைவி பல்லவியால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்தில் மகன் கார்த்திகேஷ் தனது தாய், தங்கை மீது பரபரப்பு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓம்பிரகாஷின் மனைவி பல்லவியை கைது செய்தனர். அவரது மகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    போலீசாரின் விசாரணையில் கடந்த 15 ஆண்டுகளாக பல்லவி மனநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. மேலும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி ஓம்பிரகாஷ் துப்பாக்கியை காட்டி மனைவி, மகளை மிரட்டியதும் பதிலுக்கு அவர்கள் ஓம் பிரகாசுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததும் தெரியவந்தது.

    இதன் தொடர்ச்சியாகவே சம்பவத்தன்றும் இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஓம்பிரகாஷை அவரது மனைவி பல்லவி கழுத்தில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    மேலும் போலீசார் பல்லவியின் செல்போனை கைப்பற்றி சோதனை நடத்திய போது அவர் தனது தோழி ஒருவருக்கு வீடியோ கால் செய்து கொலை செய்யப்பட்ட தனது கணவரின் உடலை காட்டியதும் தெரியவந்தது.

    அதோடு இல்லாமல் ஓம் பிரகாஷ் கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பல்லவி கூகுளில் கழுத்து பகுதியில் எந்த நரம்பு மற்றும் ரத்த நாளங்களை வெட்டினால் ஒருவர் மரணம் அடைவார் என்று தேடியுள்ளார். அதன் அடிப்படையிலேயே அவர் ஓம்பிரகாைஷ கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த பகீர் தகவலும் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
    • ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஓம் பிரகாஷின் மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 10 முறை கத்தியால் அவரது மனைவி பல்லவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஓம் பிரகாஷின் மனைவியையும் கொலை செய்ததற்கு உதவியாக இருந்ததாக அவரது மகளையும் கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த 500 ரூபையை டீ செலவுக்கு வச்சிக்கோங்க சார், பாஸ் பண்ணிவிடுங்க.
    • நீங்க பாஸ் பண்ணலனா, என் பெற்றோர்கள் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டாங்க.

    கர்நாடக மாநிலத்தின் பெல்காவி மாவட்டத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு SSLC தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் விடைத்தாளில் பணதை இணைத்து வைத்த கோரிக்கைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தகவலின்படி, சில மாணவர்கள் "பாஸ் பண்ணுங்க, என் காதல் உங்கள் கையில் தான். நான் பாஸ் ஆனால்தான் என் காதல் தொடரும்" என்ற கோரிக்கைகளை எழுதி வைத்துள்ளனர்.

    அதில் ஒரு மாணவர் ரூ.500 பணத்தை விடைத் தாளில் இணைத்து, "இந்த 500 ரூபையை டீ செலவுக்கு வச்சிக்கோங்க சார், பாஸ் பண்ணிவிடுங்க" என கேட்டுள்ளார்.

    மேலும், "நீங்க பாஸ் பண்ணினா பணம் தர்றேன்" என்று சில சில மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களில் எழுதி வைத்துள்ளனர்.

    ஒரு மாணவர், "நீங்க பாஸ் பண்ணலனா, என் பெற்றோர்கள் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டாங்க" என எழுதியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர்களின் பூணூலை வெட்டிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    • இச்சம்பவம் தொடர்பாக சிவமொக்கா மாவட்ட கலெக்டர் குருதத்த ஹெக்டே விசாரணை நடத்தினார்.

    சிவமொக்கா:

    கர்நாடக அரசு தேர்வாணையம் சார்பில் என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான சி.இ.டி. நுழைவுத் தேர்வு கடந்த 15-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடந்து முடிந்தது. இதில் மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், காப்பி அடிப்பதை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஜீன்ஸ் பேண்ட், முழுக்கை சட்டை அணிந்து வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் மாணவிகள் கம்மல், சங்கிலி அணிந்து வரவும், ஷூ அணிந்து வரவும், மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த கெடுபிடிகளால் மாணவ- மாணவிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் 17-ந்தேதி நடந்த இறுதித் தேர்வின் போது பீதர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவரிடம், அதிகாரிகள் பூணூலை கழற்ற கூறியுள்ளனர். ஆனால் அவர் பூணூலை கழற்ற மறுத்துவிட்டார்.

    இதனால் அவரை அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர் தேர்வு எழுதாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுபற்றி கர்நாடக தேர்வாணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த மாணவருக்கு நியாயம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

    இதேபோல் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி சராவதி நகர் ஆதிசுஞ்சனகிரி பி.யூ. கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் 2 மாணவர்களின் பூணூலை ஊழியர்கள் வலுக்கட்டாயமாக வெட்டி அகற்றினர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிராமணர் சமுதாய சங்கம் சார்பில் அதன் தலைவர் ரகுநாத், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக மந்திரி எம்.சி.சுதாகர் தெரிவித்து இருந்தார்.

    மேலும் இச்சம்பவம் குறித்து கர்நாடக தேர்வாணைய இயக்குனரும் வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தீர்த்தஹள்ளியில் மாணவர்களின் பூணூலை கத்தரிக்கோல் வைத்து வெட்டி வீசியதாக கூறியும், இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்த்தஹள்ளி போலீசில் பிராமண மகாசபா தலைவர் நடராஜ் பாகவத் புகார் அளித்திருந்தார்.

    அதன்பேரில் தீர்த்தஹள்ளி போலீசார், அந்த மாணவர்களின் பூணூலை வெட்டிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் இந்த சம்பவத்தை கண்டித்தும், மாணவர்களின் பூணூலை வெட்டி அகற்றி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று மாநிலம் முழுவதும் பிராமணர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பா.ஜ.க.வினர் மற்றும் இந்து அமைப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

    இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக சிவமொக்கா மாவட்ட கலெக்டர் குருதத்த ஹெக்டே விசாரணை நடத்தினார். மேலும் தேர்வு மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தார். அதில் 2 மாணவர்கள் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுவதற்காக வருவதும், அவர்களை ஊர்க்காவல் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிடுவதும் தெரியவந்தது.

    அப்போது ஊர்க்காவல் படையினர் 2 பேர், அந்த 2 மாணவர்களிடமும் பூணூலை கழற்ற சொல்லி நெருக்கடி கொடுப்பதும், இல்லையேல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவிப்பதும் பதிவாகி இருந்தது.

    ஆனால் பூணூலை கழற்ற மாணவர்கள் மறுத்ததும், அதனை ஊர்க்காவல் படையினர் 2 பேரும் தங்கள் கைகளில் இருந்த கத்தரிக்கோலால் வெட்டி அகற்றுவதும், இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்படுவதும் தெரியவந்தது. உடனே தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்த பி.யூ. கல்லூரி நிர்வாகிகள் தலையிட்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் மாணவர்களை சமரசம் செய்து தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கிறார்கள்.

    இந்த சந்தர்ப்பத்தில் மாணவர்கள் அணிந்திருக்கும் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் அணிகலன்களை வைத்து அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஊர்க்காவல் படையினரிடம் கல்லூரி நிர்வாகிகள் அறிவுறுத்துவதும் தெரியவந்தது.

    இந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்விவகாரத்தில் ஊர்க்காவல் படையினர் 2 பேர் தவறு செய்திருப்பது உறுதியானதால், அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் குருதத்த ஹெக்டே உத்தரவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாங்கள் அனைத்து மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறோம்.
    • நாங்கள் இத்தகைய செயலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

    கர்நாடக மாநிலம், சிவமோகா மாவட்டத்தில் கர்நாடக பொது நுழைவுத் தேர்வில் (CET) பங்கேற்கும் மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை அகற்றகோரிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பூணூலை அகற்றகோரிய தேர்வு நடத்தும் அதிகாரி மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து பேசிய கர்நாடக உயர்கல்வி அமைச்சர் சுதாகர், "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 2 தேர்வு மையத்திலிருந்தும் இதுபோன்ற புகார்கள் வந்தது. இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான மையங்களில் தேர்வு சுமூகமாக நடைபெற்றது. நாங்கள் அனைத்து மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறோம். நாங்கள் இத்தகைய செயலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதற்கு தக்க நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.

    ×