என் மலர்

    இந்தியா

    என் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது- நிதிஷ் குமார்
    X

    என் நீண்ட நாள் ஆசை நிறைவேறப் போகிறது- நிதிஷ் குமார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீகாரின் புதிய அரசிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
    • பீகாரில் அமையப்போகும் புதிய அரசுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்.

    பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற 4 மாதங்களே ஆன நிலையில் பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

    ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் பீகாரின் புதிய அரசிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் முழு மனதுடன் பீகார் மக்களுக்கு பணியாற்றியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணியில் வென்ற நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பொறுப்பேற்றார்.

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின் நிதிஷ் குமார் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    20 ஆண்டுகளுக்கும் மேலாக என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வந்துள்ளீர்கள், அந்த நம்பிக்கையின் காரணமாகவே பீகார் வளர்ச்சியை கண்டுள்ளது அதற்கு என் நன்றிகள்.

    தொடக்கத்தில் இருந்தே சட்டமன்ற, நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. எனவே இம்முறை மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன். பீகாரில் அமையப்போகும் புதிய அரசுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×