என் மலர்

    பீகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஞ்சலி, அன்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.
    • தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    பீகார் மாநிலம் பாட்டனாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் ஷோபா தேவி.

    ஜானிபூரில் தனது கணவன் லாலன் குமார் குப்தா, அஞ்சலி, அன்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று மாலை ஷோபா தேவியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அந்நேரம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அஞ்சலி, அன்ஷ் ஆகிய இருவரையும் தீவைத்து எரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கொடூரமான சம்பவத்தில் இரண்டு குழந்தைகளும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

    தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது.
    • "மக்களின் வாக்குகள் நாய்களுக்கு வழங்கப்படும் போலிருக்கிறது" என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் பாபு என்ற ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் சமயத்தில் நடந்த இச்சம்பவம், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

    சான்றிதழ் எண் BRCCO/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்சில் என்றும் இந்த பகுதியில் பாபு வசித்து வருகிறார் என்றும் அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    விவகாரம் வைரலான நிலையில் இந்த இருப்பிட சான்றிதழ் இன்று ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், சான்றிதழ் பெற விண்ணப்பித்த கணினி ஊழியர் மற்றும் அவருக்கு சான்றிதழ் அளித்த அதிகாரி ஆகியோருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது என பாட்னா மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

    ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், "லஞ்சம் இல்லாமல் பீகாரில் எதுவும் நடக்காது. சன்னி லியோன் மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் பெயரிலும் ஆதார் அட்டைகள் தயாரிக்கப்பட்டன. நாயும் லஞ்சம் கொடுத்திருக்க வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

    வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார், EPIC கார்டுகள் நிராகரிக்கப்படும் நிலையில், ஒரு நாய்க்கு  இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டது, இந்தத் திருத்தப் பணியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

    "மக்களின் வாக்குகள் நாய்களுக்கு வழங்கப்படும் போலிருக்கிறது" என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும் கவலை தெரிவித்தார்.
    • சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பீகாரில் உள்ள NDA அரசாங்கத்தில் உள்ளது.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். நிதிஷ் குமாரை ஆதரிப்பதில் தான் வருத்தப்படுவதாக அவர் கூறினார்.

    பீகாரில் சமீபத்தில் நடந்த வீட்டுக் காவல் பணிக்கான ஆட்சேர்ப்புத் தேர்வு எழுத வந்த மாணவி மயக்கமடைந்து ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய சிராக் பாஸ்வான், பீகார் நிர்வாகம் குற்றவாளிகளுக்கு அடிபணிந்துவிட்டதாகவும், கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும் கவலை தெரிவித்தார்.

    குற்றங்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு முற்றிலும் தவறிவிட்டதாகவும், பீகாரில் மக்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் அவர் கூறினார். மக்களைப் பாதுகாக்க முடியாத ஒரு அரசாங்கத்தை ஆதரிப்பதில் தான் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    அரசாங்கம் விழித்தெழுந்து குற்றங்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

    தற்போது, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பீகாரில் உள்ள NDA அரசாங்கத்தில் உள்ளது.

    இருப்பினும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி அனைத்து இடங்களிலும் தனியாகப் போட்டியிடும் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட 26 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
    • ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் ஆகிய இருவரை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.

    பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட 26 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

    ஜூலை 24 ஆம் தேதி, உடல் தகுதி தேர்வின் போது அந்த இளம் பெண் மயங்கி விழுந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது, ஊழியர்கள் ஓடும் ஆம்புலன்சில் வைத்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, உடல் பரிசோதனையின் போது தான் சுயநினைவை இழந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது என்ன நடந்தது என்பது ஓரளவு மட்டுமே அறிந்திருந்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.

    ஆம்புலன்சில் இருந்த மூன்று அல்லது நான்கு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறினார். பின்னர் இது குறித்து காவல்துறை மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

    பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பெறப்பட்டு, புத்தகயா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழுவும், தடயவியல் குழுவும் அமைக்கப்பட்டன.

    முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், ஆம்புலன்சில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் ஆகிய இருவரை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. இருவரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்துள்ளது.
    • 35 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

    இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. அதன்படி 35 லட்சம் வாக்காளர்கள் வெளிமாநிலத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர் அல்லது தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.

    பீகார் மாநிலத்தில் சுமார் 7.90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 22 லட்சம் வாக்காளர்கள் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 7 லட்சம் வாக்காளர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட இடத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1.2 லட்சம் வாக்காளர்களிடம் இருந்து இன்னும் ஃபார்ம் திரும்பப்பெறவில்லை. 7.23 கோடி வாக்காளரிடம் இருந்து ஃபார்ம் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

    7.23 கோடி வாக்காளர்கள் வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள். அனைத்து பணிகளும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என்னை தேற்கடிக்க முடியாவிட்டால் எங்களை நீக்க முயற்சி செய்கிறீர்கள்.
    • அனைத்து ஜனநாயக ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிர்த்துப் போராடுவோம்.

    பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (S.I.R) உடனடியாக கைவிட வேண்டும். தங்களுக்கு எதிராக வாக்களிக்கக் கூடிய மக்களை வாக்களிக்கவே விடாமல் தடுத்து, பாஜகவுக்கு சாதகமாக களத்தை மாற்றப் பார்க்கிறார்கள். எங்களை வீழ்த்த முடியவில்லை என்பதால், நீக்க முயற்சிக்கிறீர்கள்.

    இது ஒற்றை மாநிலத்தை பற்றியது மட்டுமல்ல இந்திய குடியரசின் அடித்தளத்தைப் பற்றியது. நெருப்புடன் விளையாடாதீர்கள். முழு வீச்சில் இதற்கு எதிராக தமிழ்நாடு போராடும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை 99.8 சதவீதம் நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    • உயிரிழந்த 22 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

    பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை நிறைவுப் பெற்றுள்ளது.

    பீகாரில் 7.23 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை 99.8 சதவீதம் நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, பீகாரில் 65.6 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    உயிரிழந்த 22 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

    பீகாரில் ஒரு லட்சத்து இருபதாயிரம் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபர், மனைவியை சரமாரியாக தாக்கினார்.
    • வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பீகார் மாநிலம் கயா அடுத்த கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த வாலிபர் அவரது மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது வாலிபர், மனைவியை சரமாரியாக தாக்கினார். பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்த அவரது மனைவி, திடீரென ஆவேசமடைந்தார். கணவனை அடித்து கீழே தள்ளினார். பின்னர் கணவனின் உடல் மீது உட்கார்ந்து கொண்டு அவரது நாக்கை கடித்து மென்று விழுங்கினார்.

    நாக்கு துண்டானதால் வாலிபர் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது மனைவி கணவன் மீது உட்கார்ந்து கொண்டு இருந்தார். அவரது வாய், முகம் மற்றும் உடல் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது.

    இருவரையும் சமாதானம் செய்தனர். வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரது உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலைக்கு சென்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மகத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீகாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த ஆய்வு மூலம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கம்.
    • குடியுரிமை சட்டத்தை மறைமுகமாக அமல்படுத்த பாஜக முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு.

    பீகார் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்த ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்தது.

    அதன்படி வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படும். அப்போது வாக்காளர்கள் முறையான சான்றிதழ் வழங்க வேண்டும். ரேசன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை தவிர்த்து குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஜூலை 25ஆம் தேதிக்குள் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாது என தேர்தல் ஆணையம் காலக்கெடு நிர்ணயித்தது.

    இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குடியுரிமை சட்டத்தை மறைமுகமாக தேர்தல் ஆணையம் மூலமாக பாஜக அமல்படுத்த முயற்சி செய்வதாக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    தேர்தல் ஆணையத்தின் SIR நடைமுறையால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட இருக்கிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைவு பட்டியலை வெளியிடுகிறது. இதில் 50 லட்சம் பேர் பெயர் இடம்பெறாது. இவர்களில் பெரும்பாலானோர் இறந்தவர்கள், வெளி மாநிலத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் வாக்காளர் நீக்கப்பட்டதற்கு அம்மாநில முன்னாள் துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், "மெகா கூட்டணியில் (Mahagathbandhan) உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்கனும். அதைத்தவிர வேறு வழியில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
    • தான் மேற்கொண்ட செயல்முறை சட்டபூர்வமானது என்று தெரிவித்துள்ளது.

    பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

    இதற்கான காரணங்கள் வாக்காளர்களின் இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகும். வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பட்டியல் வெளியிடப்படும் என்று ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அந்த அறிக்கையில், இதுவரை நடத்தப்பட்ட பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் 18 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், 7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்  செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு  தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் தான் மேற்கொண்ட செயல்முறை சட்டபூர்வமானது என்றும், அரசியலமைப்பின் 324வது பிரிவின்படி இந்தத் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகவும் கூறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீகாரில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
    • வரும் 25-ம் தேதியுடன் இந்தப் பணி நிறைவு பெற உள்ளது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வரும் 25-ம் தேதியுடன் இந்தப் பணி நிறைவு பெற உள்ளது.

    இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பீகாரில் வாக்காளர் பட்டியலில் இறந்த அல்லது இடம்பெயர்ந்த வாக்காளர்கள் என 52 லட்சம் பேரை நீக்கியுள்ளோம்.

    சிறப்பு தீவிர திருத்தத்தின்படி வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 1-ம் தேதி வெளியிடப்படும்.

    இந்தப் பட்டியலில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவது அதன் அரசியலமைப்பு கடமை. முழு செயல்முறையும் நிலையான மற்றும் அதிகார வரம்புக்குட்பட்ட முறையில் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிதிஷ் குமார் கட்சி வைத்திருக்கும் ஊரக பணிகள் துறை மூலமாக தேர்தலுக்கு முன்னதாக 1000 கோடி ரூபாய் விடுவிக்க அக்கட்சி இலக்கு.
    • அரசாங்கம் வெளியேறப் போகிறது என்பதை மற்ற அமைச்சர்கள் நன்கு அறிவார்கள்.

    பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் ஊரக வேலைகள் துறைக்கு (RWD) 1000 கோடி ரூபாய் விடுவிக்க இருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறுகையில் "தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை முதல்வர், சீனியர் அமைச்சர் ஒரு கூட்டத்தில் ஊழல் கொள்ளை தொடர்பாக மோதிக் கொண்டனர்.

    நிதிஷ் குமார் கட்சி வைத்திருக்கும் ஊரக பணிகள் துறை மூலமாக தேர்தலுக்கு முன்னதாக 1000 கோடி ரூபாய் விடுவிக்க, அக்கட்சி இலக்கு வைத்துள்ளது. இந்தப் பணம் உலகளாவிய டெண்டர் மூலம் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெறப்பட உள்ளது.

    தேர்தலுக்கு முன்பு கிராமப்புற சாலைகள் எதுவும் அமைக்கப்படுவதில்லை, ஆனால் டெண்டர் செயல்முறையை நிர்வகிப்பதன் மூலம் ஒரு கொள்ளையடிக்கும் விளையாட்டு நடந்து வருகிறது.

    முதல்வர் சுயநினைவில் இல்லை, அமைதியாக இருக்கிறார். அரசாங்கம் வெளியேறப் போகிறது என்பதை மற்ற அமைச்சர்கள் நன்கு அறிவார்கள். எனவே, கொள்ளையடிப்பதற்கான வெளிப்படையான போராட்டம் உள்ளது.

    இவ்வாறு தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

    ×