என் மலர்

    பீகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூன்றே மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்.
    • அமித் ஷாவுடன் இவருக்கு மிக நெருக்கமான நட்பு உள்ளது.

    முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த நவம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெரும் வெற்றியை பெற அதில் இடம்பெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வர் ஆனார். பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர் ஆகினர்.

    இந்நிலையில் மூன்றே மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்த நிதிஷ், எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

    இதனால் பீகாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவை சேர்ந்த ஒருவரே முதல்வர் ஆக அதிக வாய்ப்புள்ளது.

    பீகாரில் ஜாதி பிரதிநிதித்துவத்தை கருத்தில் வைத்து பாஜக மூவரை முதல்வர் பதவிக்கு பரிசீலித்து வருகிறது.

    சாம்ராட் சௌத்ரி - நிதிஷ் குமார்  

    பீகார் மாநில துணை முதலமைச்சராக உள்ள சாம்ராட் சௌத்ரி பட்டியலில் முதலில் உள்ளார்.

    குஷ்வாஹா சமூகத்தை சேர்ந்த இவர் ஓபிசி பிரிவில் வருவார். பீகாரில் நிதிஷ் குமாருக்கு மாற்றாக ஒரு வலுவான ஓபிசி தலைவரை உருவாக்க பாஜக விரும்புகிறது.

    எனவே கட்சியிலும், ஆட்சியிலும் இவருக்கு இருக்கும் செல்வாக்கு இவரை முதல்வர் பதவிக்கு முதல் தேர்வாக மாற்றியுள்ளது.

    இரண்டாமவர் மத்திய அமைச்சராக உள்ள நித்யானந்த ராய். இவர் யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்.

    பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சிக்கு இருக்கும் யாதவ வாக்கு வங்கியை உடைக்க, நித்யானந்த ராயை முதலமைச்சராக்குவது ஒரு சிறந்த உத்தியாக இருக்கும் என்று பாஜக கருதுகிறது.

    மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் இவருக்கு மிக நெருக்கமான நட்பு உள்ளது.

    திலிப் ஜெய்ஸ்வால்

    மூன்றாமவர் தற்போது பீகார் அமைச்சரவையில் உள்ள திலிப் ஜெய்ஸ்வால். இவர் வைசிய சமூகத்தை சேர்ந்தவர். பாஜகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான வைசிய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், கட்சியின் மேலிடத்தில் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

     விஜய் குமார் சின்ஹா 

    பீகாரின் மற்றொரு துணை முதல்வரான பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா ஆதிக்க சாதியாக கருதப்படும் பூமிஹார் சமூகத்தைச் சேர்ந்தவர்.

    பீகார் அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது ஓபிசி மற்றும் மிகவும் பின்தங்கிய சமூக வாக்குகள்தான் என்பதால் இவருக்கு முதல்வர் வாய்ப்பு எட்டாக்கனியே என்று கூறப்படுகிறது. 

    நிதிஷ் குமார் ராஜினாமா செய்தவுடன், பாஜக தனது புதிய முதலமைச்சர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

    மொத்தத்தில் மகாராஷ்டிராவை போல் கூட்டணி கணக்கில் கவனம் செலுத்தி மாநில சக்திகளை பின்னுக்கு தள்ளி ஆட்சி அதிகாரத்தை பீகாரில் பாஜக முழு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
    • நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல்.

    பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற 4 மாதங்களே ஆன நிலையில் பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

    ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் பீகாரின் புதிய அரசிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் முழு மனதுடன் பீகார் மக்களுக்கு பணியாற்றியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணியில் வென்ற நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பொறுப்பேற்றார்.

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின் நிதிஷ் குமார் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில்,"தொடக்கத்தில் இருந்தே சட்டமன்ற, நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. எனவே இம்முறை மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன்" என்றார்.

    இந்நிலையில், அமித்ஷா, நிதின் நபின் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீகாரின் புதிய அரசிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
    • பீகாரில் அமையப்போகும் புதிய அரசுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்.

    பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற 4 மாதங்களே ஆன நிலையில் பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

    ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் பீகாரின் புதிய அரசிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் முழு மனதுடன் பீகார் மக்களுக்கு பணியாற்றியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணியில் வென்ற நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பொறுப்பேற்றார்.

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின் நிதிஷ் குமார் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    20 ஆண்டுகளுக்கும் மேலாக என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வந்துள்ளீர்கள், அந்த நம்பிக்கையின் காரணமாகவே பீகார் வளர்ச்சியை கண்டுள்ளது அதற்கு என் நன்றிகள்.

    தொடக்கத்தில் இருந்தே சட்டமன்ற, நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. எனவே இம்முறை மாநிலங்களவை உறுப்பினராக விரும்புகிறேன். பீகாரில் அமையப்போகும் புதிய அரசுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
    • நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல்.

    நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

    பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்பட்டது.

    அதேசமயம் நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற 4 மாதங்களே ஆன நிலையில் பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார்.

    ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் பீகாரின் புதிய அரசிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் முழு மனதுடன் பீகார் மக்களுக்கு பணியாற்றியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு தேர்தலில் என்டிஏ கூட்டணியில் வென்ற நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பொறுப்பேற்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார்.
    • நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

    அதே சமயம் நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்துள்ளான்.
    • சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    தன்னுடைய போதைப்பழக்கம் குறித்து வீட்டில் புகார் செய்ததால் 9 வயது சிறுமியை 13 வயது சிறுவன் கொலை செய்த கொடூரம் பீகாரில் அரங்கேறி உள்ளது.

    பீகாரின் கதிஹார் நகரின் கொலாசி பகுதியில் உள்ள சந்தல்பூர் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் கடந்த சில காலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்துள்ளான்.

    அதே கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி, அச்சிறுவன் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதை நேரில் கண்டு, அது குறித்து அவனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இதனால் சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். தன் மீது புகார் செய்த சிறுமியின் மீது சிறுவன் கடும் கோபத்தில் இருந்துள்ளான்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தச் சிறுமி வயலில் தனியாக இருப்பதைக் கண்ட சிறுவன், கூர்மையான ஆயுதத்தால் சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    இரத்த வெள்ளத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நேற்று காலை குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை போலீசார் காவலில் எடுத்தனர்.

    சிறுவன் மைனர் என்பதால், அவனை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுமக்களின் புனிதமான உணர்வுகள் மற்றும் மத நம்பிக்கைகள் புண்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
    • சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம்

    பீகாரில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா அறிவித்துள்ளார்.

    நேற்று செய்தியாளர்கள் சந்திபில் பேசிய அவர், பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    சிறுவர்களிடையே வன்முறைப் குணம் உருவாவதைத் தடுப்பது, பொதுமக்களின் புனிதமான உணர்வுகள் மற்றும் மத நம்பிக்கைகள் புண்படாமல் பாதுகாப்பது, சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் விற்கப்படும் உணவுகளால் ஏற்படும் உடல்நலக் கேடுகளை தவிர்ப்பது, பொது இடங்களில் தூய்மையைப் பராமரித்தல் ஆகிய காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விஜய் குமார் சின்ஹா தெரிவித்தார்.

    மேலும், மக்களின் உணவு விருப்பங்களுக்கு அரசு எதிரானது அல்ல என்று குறிப்பிட்ட விஜய் குமார் சின்ஹா, பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும், சமூக கண்ணியத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும் கூறினார்.

    விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் பொருட்களைப் பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மற்ற இடங்களில், இறைச்சிக் கடைகள் பொதுமக்களின் பார்வையில் நேரடியாகப் படாதவாறு திரைகள் அல்லது கண்ணாடி பேனல்கள் மூலம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சகோதரர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
    • தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் மனிஷ் குமார் (27), மஞ்சீத் குமார் (25). அண்ணன்-தம்பியான இருவரும் அதே கிராமத்தில் நடந்த உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    அப்போது திருமண வரவேற்பு விழாவில் திடீரென உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சகோதரர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். உடனே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சகோதரர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் சொத்து பிரச்சனை தொடர்பான முன்பகை காரணமாக சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணத்திற்கு பிறகு நிதீஷ் குமாரை கடத்திச் சென்று வீட்டில் அடைத்து வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தியாவில் வடமாநிலங்களில் ஆண்,பெண் விகிதச்சாரம் வெகுவாக மாறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் திண்டாடி வருக்கின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க பீகார் மாநிலத்தில் அரசு வேலை மற்றும் உயர் கல்வி படித்த மாப்பிள்ளைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    நல்ல மாப்பிள்ளை கிடைக்காத விரக்தியில் இருக்கும் சிலர் ஆண்களை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற ஒரு திருமணம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம், சமஷ்தி பூர் மாவட்டம், பகார் கிராமத்தை சேர்ந்தவர் நிதீஷ் குமார். பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு தயாராகி வந்தார். பக்கத்து கிராமமான சக்கரஜா அலி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராய்.

    இவரது குடும்பத்தினர் போலீஸ் வேலைக்கு தயாராகி வரும் நிதிஷ் குமாரை தங்களது மருமகனாக்க விரும்பினார்கள். நிதீஷ் குமாரின் நடவடிக்கைகளை சங்கர் ராய் குடும்பத்தினர் கண்காணித்து வந்தனர்.

    கடந்த 7-ந்தேதி நிதிஷ்குமார் நூலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சங்கர் ராய் குடும்பத்தினர் காரை எடுத்து வந்து நிதிஷ்குமாரை வலுக்கட்டாயமாக காரில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர்.

    நிதீஷ்குமார் கத்தி கூச்சலிட்டதால் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் நிதிஷ்குமாரின் வாயில் வலுக்கட்டாயமாக போதை மருந்தை ஊற்றினர். சிறிது நேரத்தில் நிதிஷ் குமார் மயக்கமடைந்தார்.

    சங்கர் ராய் குடும்பத்தினர் மோர்வாலில் உள்ள கோவிலுக்கு அவரை கொண்டு சென்றனர். தங்களது மகள் லட்சுமி குமாரிக்கு மணப்பெண் அலங்காரம் செய்தனர். அதேபோல் நிதீஷ் குமாருக்கும் புது உடைகளை அணிவித்து அலங்கரித்தனர்.

    பின்னர் வலுக்கட்டாயமாக நிதீஷ் குமாரை லட்சுமி குமாரியின் கழுத்தில் தாலி கட்ட வைத்தனர். அங்கிருந்த ஒருவர் திருமண நிகழ்ச்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

    திருமணத்திற்கு பிறகு நிதீஷ் குமாரை கடத்திச் சென்று தங்களது வீட்டில் அடைத்து வைத்தனர். நூலகத்திற்குச் சென்ற மகன் திரும்பி வராததால் இதுகுறித்து அவரின் பெற்றோர் சமஷ்தி பூர் போலீசில் மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நிதிஷ்குமாரின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தனர். போலீசார் சங்கர் ராய் வீட்டிற்கு சென்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நிதீஷ் குமாரை மீட்டனர்.

    தன்னை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து வைத்த சங்கர் ராய் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் ராய் குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகாரில் அரசு வேலை மற்றும் உயர் கல்வி முடித்த வாலிபர்களை குறி வைத்து கட்டாய திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 1224 ஆண்களை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்துள்ளனர்.

    பெண்களின் பெற்றோர் வாலிபர்களை கடத்திச் சென்று ஆயுதங்களை காட்டி மிரட்டி அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    பீகார் மாநிலத்தில் திருமணமாகாத ஆண்களுக்கு இது போன்ற திருமணங்கள் பெரும் சோதனையாக மாறியுள்ளது.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நானே சென்று கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்தேன்.
    • ஒரு சிறிய அறையில் தான் ஒரு சுகாதார அமைப்பு இயங்கி வருகிறது.

    பிரபல நாட்டுப்புறப் பாடகியும், பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வுமான மைதிலி தாகூர், இன்று (பிப்.10) சட்டப்பேரவையில் தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சரை விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான மங்கல் பாண்டேவை மைதிலி தாகூர் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அதாவது தனது தொகுதியான அலிநகரில் உள்ள அரசு மருத்துவமனையின் மோசமான நிலைக்குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் கட்டிடம் மோசமான நிலையில் இல்லை என்றும், பழுதுபார்ப்பு மட்டுமே தேவை என்றும் பதிலளித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மைதிலி சட்டப்பேரவையில், 

    "அமைச்சரின் பதிலில் நான் முழுமையாக திருப்தி அடையவில்லை. ஏனெனில்,'கட்டிடம் மோசமான நிலையில், சிறிய பழுதுவேலைலகள் மட்டுமே இருப்பதாக' தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நானே சென்று கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்தேன்.

    அங்கே ஒரு சிறிய அறையில் தான் ஒரு சுகாதார அமைப்பு இயங்கி வருகிறது. அங்கு இப்போது மருத்துவர் யாரும் இல்லை, கடந்த காலத்தில் அங்கு இரண்டு மருத்துவர்கள் இருந்தார்கள், ஆனால் தற்போது இல்லை. நான் மிகவும் சிறிய வயதிலிருந்தே சுகாதார அமைச்சரைப் பார்த்து வருகிறேன். அவர் சுகாதாரத் துறையில் பணியாற்றுவதை நான் கவனித்து வருகிறேன். எனவே, இது மிகவும் முக்கியமானது என்பதால், அவர் பொதுமக்களின் நலனுக்காக இதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    ஐந்து முதல் ஏழு பஞ்சாயத்துகள் இந்த மருத்துவமனையைச் சார்ந்துள்ளன. இந்த மருத்துவமனையிலிருந்து 40,000 முதல் 50,000 பேர் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த மருத்துவமனை எனது முழு தொகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, இதன் மூலம் கன்ஷ்யாம்பூர் மற்றும் அலினகர் ஆகிய இரண்டு கிளைகளும் பயனடைய முடியும்" என தெரிவித்தார். 

    தனது சொந்தக் கட்சியின் அமைச்சரையே சட்டப்பேரவையில் விமர்சித்தது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் பலரும் மைதிலி தாகூரின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பப்பு யாதவ் வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
    • விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்றனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் பூர்ணியா தொகுதியைச் சேர்ந்தவர் சுயேட்சை எம்.பி. பப்பு யாதவ்.

    இந்நிலையில், பாட்னாவில் உள்ள பப்பு யாதவ் வீட்டுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். அவரை பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்ற போலீசார், அதன்பின் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், 1995-ம் ஆண்டு நடந்த பழைய குற்ற சம்பவம் தொடர்பாக பப்பு யாதவை கைது செய்துள்ளோம். விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. ஆகவே அவரை கைது செய்தோம் என தெரிவித்தனர்.

    சுயேட்சை எம்பி பப்பு யாதவை நள்ளிரவில் போலீசார் கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேஜஸ்வி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.
    • 26 வயதிலேயே பீகாரின் மிக இளைய துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

    ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவராக பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரின் தேசிய தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ஜேடி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மூத்த தலைவர்கள் முன்னிலையில் தனது மகனுக்கு நியமனக் கடிதத்தை முறையாக வழங்கினார். இந்த நிகழ்வில் தேஜஸ்வியின் தாயார் ராப்ரி தேவியும் கலந்து கொண்டார். 

    ஆனால் தேஜஸ்வி யாதவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யாவுக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தேஜஸ்வியின் பதவி உயர்வு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ரோகிணி ஆச்சார்யா, "அரசியலின் உச்சம் - ஒரு வகையில், ஒரு மனிதனின் புகழ்பெற்ற இன்னிங்ஸின் மகத்தான இறுதிப் போட்டி; தங்கள் கைகளில் பொம்மையாக மாறிய இளவரசரின் முடிசூட்டு விழாவிற்காக, அந்தச் ஜால்ராக்களுக்கும் 'ஊடுருவல் கும்பலுக்கும்' வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து திடீரென ஓய்வு எடுத்து, தனது தாய்வழி குடும்பத்துடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டார் ரோகிணி ஆச்சார்யா. 

    தேஜஸ்வியின் அரசியல் பயணம்

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனான தேஜஸ்வி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். தனது தந்தை கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டபோது கட்சியின் தலைமைப் பொறுப்புக்குத் தள்ளப்பட்டார். தேஜஸ்வி 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராகோபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2015-ல் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணியில், 26 வயதிலேயே பீகாரின் மிக இளைய துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

    இந்த துணை முதலமைச்சர் பதவியும், 2017-ல் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி நிதிஷ் குமார் கூட்டணியை விட்டு வெளியேறியபோது திடீரென முடிவுக்கு வந்தது. இந்தக் கூட்டணி முறிவு, தேஜஸ்வியை எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்புக்குத் தள்ளியது. அப்போது ஆர்ஜேடி அமைப்பை மீண்டும் வலுப்படுத்திய தேஜஸ்வி, தனது தேர்தல் பிரச்சார உத்திகளைக் கூர்மைப்படுத்தி, பீகாரில் என்.டி.ஏ கூட்டணிக்கு முதன்மையான சவாலாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

    2020 சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியை வழிநடத்திய தேஜஸ்வி அதிகாரத்தை கைப்பற்றவில்லையென்றாலும், தனிப்பெரும் கட்சியின் தலைவராக உருவெடுத்தார். 2022 ஆகஸ்டில் நிதிஷ் குமார் மீண்டும் மகா கூட்டணியுடன் இணைந்தபோது, தேஜஸ்வி இரண்டாவது முறையாகத் துணை முதல்வராகப் பதவியேற்றார். 2024-ல் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்ததால் இப்பதவி முடிவுக்கு வந்தது. 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இருப்பினும், கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.


    ×