என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    உடல் ஆய்வுகளை நீங்களே செய்துகொள்ள இயலுமா?
    X

    உடல் ஆய்வுகளை நீங்களே செய்துகொள்ள இயலுமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுவாக மனிதர்களுக்கு வரும் நோய்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றோம்.
    • பிற பொதுப் போக்குவரத்து ஊர்திகள் ஆகியவற்றில் நோய்தாக்கிய ஒருவரிடமிருந்து கிருமிகள் படிகின்றன.

    உடலும் மனமும் நலமாக உள்ளனவா? என்பதை நாம் அவ்வப்போது ஆய்ந்தறிய வேண்டும். உடலுக்குள் உள்ள இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை, ஹீமோகுளோபின், இரத்தக் கொழுப்பு, வைட்டமின் பி12 மற்றும் டி, தாது உப்புகள், மூளைக்குள் உள்ள வேதியியல் பொருட்கள் ஆகியவைகள் எவ்வளவு இருக்க வேண்டும், குறைந்தால் ஏற்படும் குறைகள் யாவை? பொதுவாக மனிதர்களுக்கு வரும் நோய்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றோம்.

    பரவா நோய்கள்: வாழ்வியல் முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் (எ.கா நீரிழிவு நோய், மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய், வலிப்பு நோய்).

    பரவும் நோய்கள்: ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றக்கூடிய தொற்றுநோய்கள் ஆறு முக்கிய வழிகள் மூலம் பரவுகின்றன. நேரடித் தொடர்பு, தொடுபொருட்களின் மூலம், காற்றுவழி, வாய்வழி, மற்றும் வெக்டார் மூலம், ரத்தம் மற்றும் உடலுறவு மூலம்.

    நேரடித்தொடர்பு: பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிப் பழகும்போது, நோயுற்ற ஒருவரிடமிருந்து நலமிக்க மற்றவருக்கும் நோய்கள் பரவுகின்றன.

    தொடுபொருட்களின் மூலம்: நாம் அன்றாடம் தொடக்கூடிய கைப்பிடிகள், கதவுகள், மின்பொருத்திகள், ஆடை, காகிதங்கள், எழுதுபொருட்கள், அலைபேசி, தொலைபேசி, கணினி, கணினி சார்ந்த பொருட்கள், நாற்காலி, மின்தூக்கி, பேருந்து, மற்றும் பிற பொதுப் போக்குவரத்து ஊர்திகள் ஆகியவற்றில் நோய்தாக்கிய ஒருவரிடமிருந்து கிருமிகள் படிகின்றன. இவற்றை நலமிக்க ஒருவர் தொடும்போது, அவருக்கு அந்நோய்த்தொற்று ஏற்படுகிறது.

    காற்றுமூலம்: நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சை அல்லது வைரஸ்கள் போன்றவை காற்றில் கலந்து மூச்சு மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகின்றன. எடுத்துக்காட்டுக்கு அம்மை, சளி, இருமல், மூளைக்காய்ச்சல் மற்றும் கோவிட்-19 ஆகிய அனைத்தும் இந்த வழியில் பரவக்கூடியவை.

    மரு.அ.வேணி

    வாய்வழி (உணவு நீர்) மூலம்: பெரும்பாலான நோய்கள் நாம் உண்ணும் உணவு, அருந்தும் நீர் ஆகியவற்றில் கலந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. எடுத்துக்காட்டுக்கு போலியோ, வயிற்றுப்போக்கு.

    வெக்டார்மூலம்: இந்த நோய்கள் கொசுக்கள், உண்ணிகள் போன்ற பறக்கக் கூடிய அல்லது ஊர்ந்து செல்லக்கூடிய உயிரினங்கள் மூலம் மற்றவர்க்குப் பரவுகிறது.

    ரத்தம் மற்றும் உடலுறவின் மூலம்: சில வைரஸ், பாக்டீரியாக்கள் இம்முறையில் பரவுகின்றன. எடுத்துக்காட்டுக்கு எச்.ஐவி, ஹெபடைடிஸ்

    மேற்கூறிய அனைத்தும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் தன்மையுடைய நோய்கள். ஆனால் பரவா நோய்கள் அனைத்தும் நம் வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படுகின்றன. இவை வராமல் தடுக்க, நம் உடலின் நலம் எவ்வாறு உள்ளது? என்பதை ஆய்வு செய்து பார்த்துக்கொள்ள வேண்டியது நன்று. உடல் ஆய்வு என்பதை இரு வகையில் செய்யலாம். உங்களை நீங்களே தன்னாய்வு செய்து கொள்வது, முழு உடல் ஆய்வு மருத்துவமனைகளில் செய்து கொள்வது.

    தன்னாய்வு செய்து கொள்வது:

    உங்களை நீங்களே ஆய்ந்து கொள்வதை மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, கட்டாயம் செய்து கொள்வது நல்லது. உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களைத் தாண்டிச் சில கடினமானவற்றைச் அவ்வப்போது செய்ய முயல வேண்டும். இது தொடர்பான சிலவற்றை நான் இங்குக் குறிப்பிடுகிறேன்.

    மாதம் ஒரு முறை 10-15 கிலோமீட்டா் சைக்கிள் ஓட்டலாம்.

    6-10 கிலோமீட்டர் தொலைவு ஓட முயலலாம்.

    மலையில் உள்ள கோயில்களுக்குப் படிகளில் ஏறிச் சென்று வரலாம்.

    108 முறை சூரிய வணக்கம் (நமஸ்காரம்) என்ற யோகக் கலையைச் செய்ய முடிகிறதா? என ஆய்ந்து பார்க்கலாம்.

    500 முறை கயிறு தாண்டுதல் பயிற்சி மேற்கொள்ளலாம்.

    100 முறை தோப்புக்கரணம் போடலாம்.

    ஒரு மணிநேரம் அமைதியாக அமர்ந்து உங்கள் எண்ணங்களைக் கவனிக்கலாம்.

    நீங்கள் நாளும் மூன்று கிலோமீட்டர் நடைப்பயிற்சி மேற்கொள்பவராக இருந்தால், 10-கும் மேற்பட்ட கிலோமீட்டர் நடக்க முயன்றிடலாம்.

    இவற்றை நம்மால் செய்ய முடிந்தால் நம் உடல் நலமாய் இருக்கிறது என்று நம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாம். இப்படி நாம் செய்து பழகாத சில பயிற்சிகளை அவ்வப்போது செய்தால் நம் மூளையும், உடலும் அதன் திறனை அதிகரிக்க வாய்ப்பாக இருக்கும்.

    முழு உடல் ஆய்வு செய்து கொள்வது:

    தற்போது பல நிறுவனங்கள், தம்மிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக, இந்த முழு உடல் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றன. மருத்துவமனைகளில் செய்யப்படும் முழு உடல் ஆய்வில், உடல் உறுப்புகளின் நலம் எவ்வாறு உள்ளது? என்று அறியப்படுகிறது.

    குறிப்பாக இரத்தத்தில் உள்ள அணுக்கள், சிறுநீரகத்தின் செயல்பாடு, கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாடு, இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, இரத்தம் உறைதலின் தன்மை, இரத்தத்தில் உள்ள தாது உப்புகளின் அளவு, தைராய்டு சுரப்பியின் செயல்பாடு ஆகியவற்றை இரத்தம் மற்றும் சிறுநீர் ஆய்வு மூலம் கண்டறியப்படுகிறது. மேலும் இதயம் மற்றும் நுரையீரல் ஆய்வு, நெஞ்சுப்பகுதி எக்ஸ்-ரே, ரத்தக் குழாய்களை ஆய்வது, வயிற்றுப் பகுதி ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கியது.

    சிலருக்குக் குறிப்பிட்ட இடர்பாடு இருப்பின், அவற்றிற்கு ஏற்றாற்போல் கண், மூளை, நரம்பு, பற்கள், காது மூக்கு தொண்டை ஆகிய பகுதிகள் ஆய்வு செய்து (CT or MRI Scan / TCD / Scopy) அறியப்படுப்படுகின்றன.

    சிலர், ஆண்டு தவறாமல் முழு உடல் ஆய்வு செய்து கொள்வார்கள். ஆனால் ஒரு சிலரோ, அதில் எவையேனும் சிக்கல்களைக் கண்டுபிடித்துவிட்டால், என்ன செய்வது? என்று அஞ்சி ஆய்வு செய்துகொள்ளவே மாட்டார்கள். 40 வயதைக் கடந்து விட்டால் நம் உடல் உறுப்புகளில் எவையேனும் மாற்றங்கள் இருக்கின்றனவா? இல்லையா? என்று ஆய்ந்து பார்ப்பதில் என்ன அச்சம் வேண்டியுள்ளது? சிக்கல்களைத் தொடக்க நிலைகளிலேயே கண்டறிந்து, சில வாழ்வியல் முறை மாற்றங்களை முதற் கட்டத்திலேயே செய்துவிட்டால், பின்னர்ப் பல்வேறு நோய்களுக்கு ஆளாகித் துன்புறும் நிலை ஏற்படாது அல்லவா? சிந்தித்துப் பாருங்களேன். எனவே தன் ஆய்வு மற்றும் முழு உடல் ஆய்வு தேவை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

    செல்: 75980-01010, 80564-01010.

    Next Story
    ×