என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    மரியாதை - மகிழ்ச்சி எப்போது கிடைக்கும்?
    X

    மரியாதை - மகிழ்ச்சி எப்போது கிடைக்கும்?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுயநலமாய் இருப்பது என்பது எதனை நீங்கள் மறைத்தாலும் எம்.ஆர்.ஐ. போல் தெளிவாகக் காட்டி விடும்.
    • பிறரை நம் லாபத்திற்காக வஞ்சகமாக உபயோகிக்காதீர்கள். மகா மட்டமான குணம் இது.

    மரியாதை: 'பிறருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். பிறர் நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இது அனைவருக்கும் அறிவுறுத்தப்படுவது ஆகும்.

    * மனைவியை அடிமைபோல் நடத்தும் கணவன், உதவியாளர்களை ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவர் போல் நடத்தும் மக்கள், பிள்ளைகளை குத்தி காட்டி பேசும் பெற்றோர்கள்- இவர்கள் எல்லாம் மரியாதை கொடுப்பதும் இல்லை. மரியாதை பெறுவதும் இல்லை.

    * பிறர் உங்களை மதிக்கவில்லையென்றால் நீங்கள் அமைதியாய் நகர்ந்து விடலாம். இதுவே உங்கள் பண்பினைக் காட்டும். மரியாதையினைக் கூட்டும்.

    * மரியாதை வேண்டும் என அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் சிலருக்கு மட்டுமே கிடைக்கின்றது. காரணம் என்ன?

    * முதலில் ஒவ்வொருவரும் தன்னைத்தானே மதிக்க வேண்டும். மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

    * ஆடை விஷயத்தில் பலர் ஏனோ தானோ என நேர்த்தியின்றி உடுத்துகின்றனர். சிலர் நாகரீகம் என்ற பெயரில் பலருக்கு பிடிக்காத மாதிரி உடுத்துகின்றனர். சுத்தமான, இஸ்திரி செய்யப்பட்ட, கவுரவமான உடை நிறைய மரியாதையினை வாங்கித் தரும்.

    * சோம்பேறித்தனமும், மெத்தனமும் மரியாதை வாங்கித் தராது. சுறுசுறுப்புக்கு நிறைய மரியாதை கிடைக்கும்.

    * பொறுப்பின்றி இருந்தால் ஒருவருக்கு மரியாதை கிடைக்காதது மட்டுமல்ல வேறு மட்டமான பட்டப் பெயர்களும் கிடைக்கும்.

    * சுயநலமாய் இருப்பது என்பது எதனை நீங்கள் மறைத்தாலும் எம்.ஆர்.ஐ. போல் தெளிவாகக் காட்டி விடும்.

    * எல்லாவற்றிற்கும் 'ஆமாம் சாமி' போட்டால் பூச்சி போல் நம்மை நசுக்கி விடுவார்கள்.

    * தன்னைத் தானே மட்டம் தட்டி பேசுவது தற்கொலைக்கு சமம்.

    * நீங்கள் செய்யாத எந்த தவறுக்கும் மன்னிப்பு கேட்காதீர்கள். நீங்கள் பழி தாங்கும் பிறவி அல்ல.

    * கெட்ட வார்த்தைகள், வம்பு இவை வேண்டவே வேண்டாம்.

    * எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களை நார் நாராய் பிய்த்து போட்டுக் கொள்ளாதீர்கள். யாரும் சிறுவார்த்தையோ, நன்றியோ தெரிவிக்கப் போவதில்லை. மாறாக பழி சுமத்துவர்.

    * பிறரை நம் லாபத்திற்காக வஞ்சகமாக உபயோகிக்காதீர்கள். மகா மட்டமான குணம் இது.

    * வாய் ஓயாது பேசாதீர்கள். எதிரில் உள்ளவர் தலைவலியில் ஓடி விடுவார்.

    * நான் தான், நான் வைத்தது தான் சட்டம், எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மூர்க்கத்தனங்கள் புதை குழியில் நம்மை தள்ளி விட்டு விடும்.

    * பொய்யும், ஏமாற்றுதலும் இந்த காலத்தில் வெளிச்சம் போட்டு காட்டி விடும்.

    * எதிலும் வரையறை, எல்லை கோடுகள் வேண்டும். இல்லையெனில் உங்களது வாழ்க்கை கோணல், மாணல் ஆகி விடும்.

    ஆக இவை அனைத்திலும் கவனம் செலுத்தினால் மரியாதை நம்மை தேடி வரும்.

    இத்தோடு கூடவே, கையோடு இதனையும் செய்யலாமே.

    * அம்மாகிட்ட அன்போடும், ஆசையோடும் பேச வேண்டும்.

    * அப்பாகிட்ட மரியாதையோடு பேச வேண்டும்.

    * மனைவியிடம் உண்மையாக பேச வேண்டும்.

    * உடன் பிறந்தவர்களிடம் பாசத்தோடு பேச வேண்டும்.

    * உறவினர்களிடம் பச்சாதாபம் வேண்டும்.

    * நண்பர்களுடன் மகிழ்ச்சியான பேச்சுவார்த்தை வேண்டும்.

    * அதிகாரிகளிடம் அமைதியாக, பண்போடு பேச வேண்டும்.

    * உதவியாளர்களிடம் தன்மையாய் பேச வேண்டும்.

    செய்கின்றோமா? இல்லையெனில் இப்போதே செய்யத் தொடங்குவோம்.

    இன்னும் கொஞ்சம் கூட...

    * சொன்ன நேரம் மாறாமல் இருப்போமே

    * முயற்சியினை தினம் கொஞ்சம் கூட்டலாமே.

    * கனிவாக இருப்போமே.

    * வளர வேண்டும் என்று உறுதி எடுப்போம்.

    * ஆரம்பித்த வேலையினை சரியாக முடிப்போம். படிப்போம், கற்போம்.

    * சக்தியினை இறக்குவோம்.

    * ஆக்கப்பூர்வமாகவே இருப்போம்.

    * நமது தோற்றம், உணவு, உடை இவற்றில் அதிக கவனம் கொடுப்போம்.

    * நம் பலவீனம், பாதுகாப்பு இல்லை என அஞ்சுவது இவற்றினை எந்த அந்தஸ்தும் சரி செய்யாது.

    * நம்மை விரும்புவதனை விட நமக்கு மரியாதை கொடுப்பது நல்லது.

    * நான்கு வயதில் ஏற்பட்ட குழந்தை சண்டையை மனதில் வைத்து 52 வருடங்கள் சென்று ஒருவர் மற்றவர் முகத்தில் கடுமையாய் தாக்கினார் என படித்தேன். இந்த நிலை மாற நாம் ஒவ்வொருவரும் சில ஒழுக்கங்களை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.

    மகிழ்ச்சி

    * நம்முடைய வாழ்க்கையினை நாம் அமைத்துக் கொள்ளும் விதமே உன்னத வாழ்க்கையினை நாம் வாழ காரணம் ஆகின்றது. சுற்றுப்புற சூழ்நிலைகள் உங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுக்கக் கூடாது. சுற்றுப்புற சூழ்நிலை உங்கள் கட்டுப்பாட்டில் வரவேண்டும். உங்கள் இலக்குகளை அடைய அவை உதவ வேண்டும்.

    * மகிழ்ச்சி, அமைதி, சந்தோஷம் இவை அனைத்துமே வாழ்வின் வெற்றியின் முடிவு அல்ல. இது வாழ்வின் பயணம். தொடர் பயணம். அன்றாடம் வளர்க்க வேண்டிய ஒன்று.

    * பத்திரமாய், பாதுகாப்பாக வாழ்வது சரிதான். இருப்பினும் வாழ்வில் சில துணிவுகள் வேண்டும். இல்லையெனில் வாழ்வு சப்பென இருக்கும்.

    * தன்னம்பிக்கையே வாழ்வின் சாவி. தன்னம்பிக்கை இருந்தால் உங்கள் முன்னேற்றத்தினை யாரும் தடுக்கவே முடியாது.

    * இந்த உலகியல் வாழ்க்கை முடிவுக்கு வரும்போது ஒருவரின் வெற்றிகளும், சாதனைகளும் கூட மறந்து விடும். ஆனால் நீங்கள் காட்டிய அன்பு பரவி நிற்கும்.

    * உங்கள் வாழ்வின் எழுத்தாளர் நீங்கள் தானே. சோகமாக எழுத வேண்டாமே.

    * நீங்கள் எதனையும் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது கண்ணாடி போன்றது. பிரதிபலிக்கும். ஆக நாம் ஏன் நம் வாழ்வகையினை மகிழ்ச்சியாக ஆக்கிக் கொள்ளக் கூடாது?

    * வாழ்வில் எந்த நேரம் வேண்டுமானாலும் யார் வேண்டுமென்றாலும் நம்மை பிரிந்து செல்லலாம். எனவே யார் மீதும் அதிகம் சாய வேண்டாம்.

    * ரொம்ப கவலைப்படாதீங்க. கவலைப்படுவதால் ஒன்ணும் ஆகப் போவது இல்லை.

    * எது உன்னை மன வலிமை, உடல் வலிமை இழக்கச் செய்கின்றதோ? அது உங்களுக்கு ஒத்துக் கொள்ளாத ஒன்றே.

    * படியுங்கள், படியுங்கள், அன்றாடம் ஒரு நல்ல புத்தகத்தினை படியுங்கள்.

    * கனிவுடன் இருப்போமே.

    * பிரச்சினையில் மூழ்காமல் தீர்வுகளை கண்டுபிடிப்போமே.

    * நன்றி உணர்வோடு இருப்போமே. இப்படியெல்லாம் இருந்தால் மகிழ்ச்சிக்கு என்ன குறைவு இருக்கும்!

    தெரிந்து கொள்வோம்...

    ஒவ்வொரு உணவிலும் வானவில் 7 நிறத்தில் கொண்ட உணவுகள் இருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை என்று கூறுகின்றோம். 7 வண்ணம் என்பது இயலவில்லை என்றாலும் சிகப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு இந்த நான்கு நிறங்களையாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள்.

    சிகப்பு கலர் பழங்கள் இருதயத்தினை உறுதியாய் வைக்கும். இதில் உள்ள லைகோபேன் இந்த சிகப்பு நிறத்தினைக் கொடுக்கின்றது. இது உடலின் பல நோய்களில் இருந்து காக்கின்றது.

    ஆரஞ்சு நிற பழங்களும் காய்கறிகளும் அடர்ந்த பீட்டா கரோட்டீன் என்ற பொருள் கொண்டது மற்றும் வைட்டமின் சி சத்தும் உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் குறிப்பாக கண்களையும் காக்கின்றது.

    மஞ்சள் நிற உணவு புண்களை ஆற்றும். உடலை பழுது பார்க்கும்.பற்களை பாதுகாக்கும்.

    பச்சை நிற உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும்.

    நீல ஊதா நிற உணவுகள் மூளை ஆரோக்கியத்திற்கு உகந்தது. இப்படி எல்லா நிறங்களுக்கும் கூடுதலாக பயன்கள் எழுதலாம். ஆகவே உணவு 'வானவில்லாக' இருக்கட்டும்.

    (கொஞ்சம் நேரம் ஒதுக்கி மனித சமுதாய முன்னேற்றத்தினை பார்ப்போம். கல்லை தேய்த்து நெருப்பு உருவாக்கி உணவு உண்ட காலத்தினையும் இன்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கும் காலம் வரை மகா அசுர வளர்ச்சியினை நினைத்து பார்க்கின்றோமோ. இன்று உங்களை முக்கால் நிர்வாண ஆடையுடன் 2 கல்லை தேய்த்து நெருப்பினை உருவாக்கச் சொன்னால் தாங்குவீர்களா?

    எல்லாமே அசுர முன்னேற்றம்தான்.

    கமலி ஸ்ரீபால்

    அசுர வளர்ச்சி என்றால் என்ன?

    ஒரு குழந்தை பிறந்தவுடன் 15 முதல் 20 வயது வரை போல் வளர்ந்து நொடியில் நின்றால் என்னவோ அதுதான் அசுர வளர்ச்சி.

    இதையெல்லாம் ஒவ்வொரு மனிதனும், படித்து தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

    இன்று மனிதன் கூர்மையான அறிவும், இருந்த இடத்தில் இருந்த உலகையே அச்சுறுத்தி கட்டுப்படுத்தும் ஆயுதங்களும் உருவாக்கி உள்ளான்.

    இதனை நாம் சர்வ சாதாரண நிகழ்வு போல் பார்க்கின்றோம். ஊர் வம்பு, புரளி ஈர்க்கும் அளவு இந்த முன்னேற்றங்கள் (அவை ஆக்கப் பூர்வமோ, அழிவு பூர்வமோ) நம் கவனத்தில் நிற்பதில்லை.

    ஆகவேத்தான் நம்மை நாமே, நாம் மட்டுமே பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * சிலர் ஏனோ நம்மை கோபப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். தப்பி தவறி கூட நம் நிதானத்தினை நாம் இழந்து விடக்கூடாது. இல்லையெனில் அவன் எப்போது அழிவான், அவனுக்கு எப்போது கஷ்டம் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். கவனமாய் இருப்போம்.

    * பிறரின் ஆதரவு இல்லாமல் நம்மை நாமே உருவாக்கிக் கொண்டு செயல்பட முடிந்தால் எத்தனை பெரிய சுதந்திரம். ஆனந்தம் தெரியுமா?

    * மற்றவர் இப்படி நினைப்பாரோ, அப்படி நினைப்பாரோ என்ற கவலையே இருக்காது.

    * தனித்தன்மையே ஒரு சாதனை தான்.

    * நிலையான குறிக்கோள்களை நிர்ணயிக்க முடியும். அடைய முடியும்.

    * சமுதாயத்தில் கொள்கை பிடிப்புள்ள மனிதனாகத் தெரிவீர்கள்.

    * நம் மனதில் உணர்ந்த உண்மைகளை எதிர்த்து போராட மாட்டோம்.

    * நம்முடைய காந்த சக்தி பெருகும்.

    * தனி ஒளியாய் பிரகாசிப்பீர்கள்.

    * உடல் ஆரோக்கியமே வளமான சொத்து, உண்மையான சொத்து என்று தெரியும்.

    * நம்மை முன்னேற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் இருக்கும். பிறரிடம் குறை கண்டுபிடிக்க நேரமே இருக்காது.

    * வாழ்க்கையில் முன்னேற 'லிப்ட்' வேண்டும் என்ற சோம்பேறித்தனம் இருக்காது.

    பிறப்பும், இறப்பும் தனிமை தான்

    * ஆழ்மன, உள்மன மகிழ்ச்சிதான் வெற்றி.

    'இதுதான் அசுர வளர்ச்சி'

    Next Story
    ×