என் மலர்

    சிறப்புக் கட்டுரைகள்

    அமைதி- தவறு செய்வதை தடுக்கும்!
    X

    அமைதி- தவறு செய்வதை தடுக்கும்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திங்கட்கிழமைகளில் அதிக மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
    • உடலின் 99 சதவீதம் கால்சியம் பற்களில்தான் இருக்கின்றது.

    நீங்கள் வெட்கப்படும் போது கன்னம் மட்டுமல்ல வயிறும் சிவக்கின்றது.

    * உடலில் 1 சதவீதம் தண்ணீர் குறைந்தாலே தண்ணி தாகம் ஏற்படும். 5 சதவீதத்துக்கு மேல் உடலில் நீர் குறைந்தால் மயக்கம் ஏற்படும். 10 சதவீதம் நீர் வற்றினால் உயிர் இழப்பே ஏற்படும்.

    * சுமார் 700 என்சைம்களாவது உடலில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன.

    * கண் வெண் விழிபடலத்துக்கு மட்டும் ரத்த ஓட்டம் இல்லை. இதற்குத் தேவையான ஆக்சிஜனை இது காற்றில் இருந்து பெறுகின்றது.

    * பிறந்த குழந்தையால் சுமார் 6 மாதம் வரை மூச்சு விட்டுக் கொண்டு விழுங்குவதனை சுமார் 6 மாதம் வரை செய்ய முடியும்.

    * மண்டைக்கு மட்டும் 29 வித்தியாசமான எலும்புகள் உள்ளன.

    * 2 மற்றும் 3 பகுதி மக்கள் தலையினை வலது பக்கம் சற்று சாய்ப்பார்கள்.

    * சுமார் 7 சதவீதம் மக்கள் இடது கை பழக்கம் உடையவர்கள்.

    * உடலின் 99 சதவீதம் கால்சியம் பற்களில்தான் இருக்கின்றது.

    * 100 முதல் 200 வைரஸ் கிருமிகள் சளி பிடிக்க காரணம் ஆகின்றன.

    * நாக்குதான் உடலின் வலுவான தசை.

    * ஒரு வளர்ந்த மனிதன் மூச்சை உறிஞ்சி உள்ளிழுத்து 23 ஆயிரம் முறை வெளி விடுகிறான். இது ஒருநாள் கணக்கு.

    * கண்ணை திறந்து கொண்டு தும்ம முடியாது.

    * திங்கட்கிழமைகளில் அதிக மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    * மனித மூளையின் ஞாபகத்திறன் 4 டெராபைட்ஸ்-ஹார்ட் டிசைன்ஸ் என்கின்றனர்.

    * நரம்புகளின் உணர்வு, செய்திகள் 274 கி.மீ. / ஒரு மணி என்று ஆய்வு கூறுகின்றது.

    * மனித கருவின் 3 மாதத்திலேயே விரல் பதிவுகள் ஏற்படுகின்றன.

    * 90 சதவீத மக்கள் தங்கள் கனவினை மறுநாள் மறந்து விடுகின்றார்கள்.

    * தலை மூலமாகவே உடலின் 40 சதவீத உஷ்ணம் வெளியேறுகின்றது.

    * நமது சருமம் நம் வாழ்நாளில் 1000 முறை புதுப்பிக்கப்படுகின்றது.

    * நம் உடலின் ரத்த குழாய்களை நீட்டினால் 1,00,000 கி.மீ. ஆகும்.

    * மனிதர்கள் மட்டுமே முதுகின் மேல் படுத்து தூங்குகின்றனர்.

    * சுமார் 7 நிமிடத்தில் நல்ல தூக்கம் வருவது ஆரோக்கியத்தின் அறிகுறி.

    கைரேகை: விரல்களில் உள்ள கோடுகள்- தெய்வ ரகசியம்.

    * வயிற்றில் கரு 4 மாதம் இருக்கும் போதே இந்த கோடுகள் உருவாகின்றன. இந்த அடையாளம் பதிக்கப்படுகின்றது.

    * இவை நமது உடலின் டி.என்.ஏ. கட்டளைப்படி உருவாகின்றது. இவை அக்குழந்தையின் பெற்றோர்கள், மூதாதையர் ரேகைளை ஒத்திருப்பதில்லை.

    * ஏதோ கண்ணுக்குத் தெரியாத (ரேடியோ) காந்த அலைகள் சக்தியால் உருவாக்கப்படுகின்றதோ? என்று தோன்றும். மனித சக்தியினை தாண்டிய செயலாகத் தெரியும்.

    * ஒவ்வொரு தனி மனிதனின் வரிகளும் உலகில் உள்ள ஒருவருடனும் ஒத்து இருக்காது.

    * இதனை வித்தியாசமான தனித்தன்மை வாய்ந்த கலைஞன் தனித்தனியான ஒற்றை உருவத்தினை உருவாக்கும் வல்லமை பெற்றுள்ளான்.

    * மிகச் சிறந்த நுட்பம் கொண்ட கம்ப்யூட்டரால் கூட இவ்வாறு உருவாக்க முடியாது. எனவே இது மனித சக்திக்கு அப்பாற்பட்டது.

    * இது இறைவனின் மொழி.

    * விபத்தில் கை விரல்கள் பாதிக்கப்பட்டாலோ, அல்லது தீ விபத்தில் பாதிக்கப்பட்டாலோ காயம் ஆறி விரல் பழைய நிலை அடையும் போது அதே வரிகள் ஒரு புள்ளி மாற்றம் இல்லாமல் அப்படியேத் தோன்றும்.

    * எனவே இது வெறும் சருமத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல. நம் ஆன்மாவோடு சம்பந்தப்பட்டது.

    * உலகின் வேறு எந்த பகுதிக்கும் இப்படி மறு உருவாக்கம் தர இயலாது.

    * விஞ்ஞானம் இன்று வரை இதற்கு விளக்கம் முழுமையாய் அளிக்க முடியவில்லை.

    இதன் சங்கு, சக்கர சுற்றுகள், வளைவுகள் இவைப் பிரத்யேக மொழி. படைத்தவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

    * பிரபஞ்ச விதி, நாம் செய்த கர்ம வினைகளை கூறும் மொழி.

    * எந்த முறையாலும் ஏ.ஐ. உள்பட இந்த வரிகளைப் போல் உருவாக்க முடிவதில்லை என்கின்றனர்.

    * இது நமது விதியின் தெய்வீக ஸ்கிரிப்ட் என்கின்றனர்.

    * மேலே ஒருவன் நம்மை கவனிக்கின்றான், உருவாக்குகின்றான், நடத்துகின்றான்.

    * இதனை 'பிரம்மா' என்று குறிப்பிடுகின்றனர். மனிதன் ரத்தம், சதையால் ஆன பொம்மை அல்ல. பரந்து விரிந்தவன். ஆத்ம பலம் கொண்டவன். எழுந்து இயங்குங்கள். நீங்கள் சாதாரணமானவர் அல்ல.

    இக்கட்டுரையினை நான் படித்து பகிர்ந்து கொள்கிறேன். நம்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவே.


    கமலி ஸ்ரீபால்

    நீங்கள் ' ஏமாந்த சோணகிரி' இல்லை என மற்றவர்கள் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமா?

    * மற்றவர்களின் எதிரில் இருப்பவரின் கண்களைப் பார்த்து பேசுங்கள். இது உங்களின் மனத் தெளிவினை, சுய கட்டுப்பாட்டினை, தன்னம்பிக்கையினை வெளிப்படுத்தும். எதிரில் இருப்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கண்ணைப் பார்த்து பேசுங்கள். இது மரியாதைக் குறைவு அவருக்கு ஏற்படுத்தாது. மாறாக உங்கள் சுய மரியாதையினைக் கூட்டும். உங்கள் மன வலுவினைக் காட்டும்.

    * எதற்கும் உடனடி யாக, நொடிப் பொழுதில் ரியாக்ஷன் வேண்டாம். உடனடியாக ஓடுவது, எதிர்ப்பது, தாவி கொடுப்பது போன்றவை ஒருவரது பதட்டத்தினையே காண்பிக்கும். எதற்கும் சில நொடிகள் அவகாசம் கொடுங்கள். மனம் அமைதி பெறும். தெளிவு பெறும். வார்த்தைகள் கட்டுப்பாட்டில் இருக்கும். உணர்ச்சி பூர்வ செயல்கள் வராது. உணர்வு பூர்வ செயல்களே இருக்கும்.

    * நமது பலம் அடுத்தவருக்கு தெரிகின்றதோ இல்லையோ நமது பலவீனம் பிறருக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் 'ஏமாந்த சோணகிரி" ஆக்கி விடுவர். பயம், பாதுகாப்பு உணர்வின்மை, அதிகம் யோசித்தல், சுய சந்தேகம், சுய நம்பிக்கை இன்மை பிறர் முன்னே நம்மை தாழ்த்தி விடும். யாரும் இரக்கம் கொள்ள மாட்டார்கள். மாறாக உங்களை நன்கு பயன்படுத்தி தலையில் மிளகாய் அரைத்து விடுவர்.

    * எப்போதும் அமைதியாய் இருக்க வேண்டும். வாழ்க்கையில் புயலே வீசினாலும் அமைதி அவசியப்படுகின்றது. பேசுவது எளிது, முடியுமா? எனலாம். முடியத்தான் வேண்டும். உங்கள் அமைதி மற்றவரை கதி கலங்கச் செய்து விடும். குழப்பத்தில், அமைதி நம்மை தவறு செய்ய விடாது தடுக்கும். எதனையும் நம்மால் கையாள முடியும்.

    * சுத்தமாக, நேர்த்தியாக உடை உடுத்துங்கள். நாம் பேசுவதற்கு முன்னால் நம் உடை பேசும். பேச்சு எடுபடும். நாம் சித்தர் அல்ல. ஒரு அழுக்கு துணி சுத்தி இருந்தாலும் உடலில் கண்களில் இருந்து சித்தர்கள் ஒளி வீசுவார்கள். நறுமணம் ஊரை கூட்டும். சாதாரண மனிதனுக்கோ அன்றாடம் குளித்தாலே அடுத்த வேளை வியர்வை நாற்றம் நாறும். ஆக சுத்தமான குளியல், நேர்த்தியான ஆடை இவை நம்மைப் பற்றி அதிகம் பேசும். உங்கள் பேச்சை மக்கள் காது கொடுத்து கேட்பார்கள்.

    ஒலி பெருக்கி போல் சத்தம் போட்டு பேசாதீர்கள். வேகமாக பேசாதீர்கள். நிதானமாய், மெதுவாய் பேசும் பொழுதே அடுத்தவர் உங்கள் பேச்சை கூர்ந்து கவனிப்பார். சிங்கம் போல் கர்ஜிப்பது வீரம். அது சாதாரண பேச்சில் இடம் பெறாது. சத்தமான பேச்சு அடுத்தவருக்கு தலைவலி ஏற்படுத்தும். அமைதியான பேச்சு அதிக முக்கியத்துவம் பெறும்.

    வளைந்து, நெளிந்து, மடங்கி, கூன் போட்டு மனித வடிவே இல்லாத தோற்றத்தில் நிற்காதீர்கள், நடக்காதீர்கள், இவை உங்களுக்கு 'பவர்' இல்லாதது போல் காட்டும். நிமிர்ந்த நன்னடை அமைதியான ஆனால் 'பவர்' நிறைந்தவராகக் காட்டும்.

    இவங்க என்ன நினைப்பாங்க, அவங்க என்ன நினைப்பாங்க என்று ரொம்ப யோசிக்காதீங்க. அளவு கடந்த யோசனை எதனையும் செய்ய விடாது. நீங்கள் நன்கு ஆராய்ந்து மனதிற்கு சரி என்று பட்டதை தைரியமாய் செய்யுங்கள்.

    நம்மை மீறிய சில செயல்கள் இருக்கும். புயல், மழை இவை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கூட நிகழலாம். நம்மால் அனைத்தையும் மாற்ற முடியாது. நிகழ்வுகளை ஏற்று கடந்து செல்லத்தான் வேண்டும். அதை எதிர்ப்பது என்பது தெரிந்தே சுவரில் முட்டிக் கொள்வது போல்தான்.

    வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் தனித்தன்மை இருக்கட்டும்.

    புன்னகையுங்கள். கண்களும் புன்னகைக்கட்டும். அது மனதார இருக்கும். அடுத்தவர்களுக்கு அச்சம் இன்றி இருக்கும். உறுதியாக இருங்கள். இலக்கை அடைய வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு இருங்கள். மனம் இரும்பு போல் உறுதியாக இருக்க வேண்டும்.

    எதற்கெடுத்தாலும் பிறரின் அனுமதி தேவையில்லை. இப்படியொரு பழக்கம் இருந்தால் நீங்களாகவே அடிமை ஆகி விடுவீர்கள்.

    சண்டை போடத்தெரிய வேண்டும். விருப்பமில்லாததற்கு, முடியாத செயலுக்கு 'நோ' என்பதனை உறுதியாக சொல்ல வேண்டும். மறுப்பதற்கு அடிதடி, குத்து சண்டை தேவையில்லை. அமைதியே மிகப்பெரிய ஆயுதம். ஆயினும் தேவைப்படும் பொழுது கையுறை, ஷூ அணிந்து எதிர்ப்பினைக் காட்டி சாதிக்கவும் தெரிய வேண்டும்.

    இப்படியெல்லாம் இருந்தால் எல்லோரும் உங்களை "ஏமாந்த சோணகிரி" என்று சொல்ல மாட்டார்கள். கெட்டிக்காரன் என்பார்கள்.

    Next Story
    ×