என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    3 மணி நேரம் மோசமாக ஆடியதை வைத்து இந்திய அணியை மதிப்பிட முடியாது- ரோகித் சர்மா
    X

    3 மணி நேரம் மோசமாக ஆடியதை வைத்து இந்திய அணியை மதிப்பிட முடியாது- ரோகித் சர்மா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணிக்கு தொடர்ந்து நம்பிக்கையான விஷயங்களை பகிர்வது முக்கியம்.
    • தோற்றாலும் நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும்.

    பெங்களூரு டெஸ்ட் தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த டெஸ்ட் குறித்து நான் அதிகமாக கவலைப்படபோவதில்லை. ஏனெனில் முதல் இன்னிங்சில் அந்த 3 மணி நேரம் (46 ரன்னில்சுருண்டது) மோசமாக விளையாடியதை வைத்து இந்திய அணி எப்படிப்பட்டது என மதிப்பிடுவது நியாயமாக இருக்காது.

    அணிக்கு தொடர்ந்து நம்பிக்கையான விஷயங்களை பகிர்வது முக்கியம். தோற்றாலும் நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும். இந்த டெஸ்டில் செய்த சிறிய தவறின் விளைவால் (டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்தது) தோல்வியை தழுவினோம். ஆனால் அதற்காக எல்லாமே முடிந்து விட்டதாக அர்த்தம் அல்ல. இப்போது நாங்கள் பதற்றமின்றி, அமைதியான சூழலை உருவாக்கி, மனதளவில் வலுவாக இருக்க வேண்டியது முக்கியம்.

    தொடரின் முதல் டெஸ்டில் தோல்வி காணும் இது போன்ற சூழலை ஏற்கனவே சந்தித்த அனுபவம் உண்டு. ஆண்டின் தொடக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் டெஸ்டில் தோற்று அதன் பிறகு வரிசையாக 4 டெஸ்டுகளில் வெற்றி பெற்றோம். எனவே கிரிக்கெட்டில் இவ்வாறு நடப்பது சகஜம் தான். இன்னும் இரு டெஸ்ட் போட்டிகள் உள்ளது. அவற்றில் ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அடுத்த டெஸ்டில் சிறப்பாக ஆட முயற்சிப்போம். ஒரு போட்டியின் அடிப்படையில் எங்களது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள மாட்டோம்.

    முதல் இன்னிங்சில் நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை. ஆனால் 2-வது இன்னிங்சில் சரிவில் இருந்து மீண்டு வந்தோம். முதல் இன்னிங்சில் 356 ரன்கள் பின்தங்கி இருக்கும்போது நீங்கள் எதை பற்றியும் அதிகமாக யோசித்து கொண்டிருக்க முடியாது. ஏனெனில் 2-வது இன்னிங்சில் அந்த ஸ்கோருக்குள் எளிதாக ஆல்-அவுட் ஆகி, இன்னிங்ஸ் தோல்வியை கூட சந்திக்க நேரிடலாம்.

    இப்படிப்பட்ட நிலைமையில் 2-வது இன்னிங்சில் எங்களது வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். சில பார்ட்னர்ஷிப்பை பார்க்கவே உற்சாகமாக இருந்தது. அதுவும் ரிஷப் பண்டும், சர்ப்ராஸ்கானும் விளையாடிய போது, ஒவ்வொருவரும் சீட்டின் நுனிக்கே வந்து விட்டனர். ரிஷப் பண்ட் எல்லா பந்துகளையும் அடிக்காமல், சில பந்துகளை விட்டு தடுப்பாட்டத்திலும் ஈடுபட்டார். இதே போல் சர்ப்ராஸ்கானுக்கு இது 4-வது டெஸ்ட் தான். ஆனால் அவரது பக்குவமான பேட்டிங்கை பார்க்க அருமையாக இருந்தது. சுப்மன் கில்லுக்கு பதிலாக இடம்பிடித்த அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சதம் அடித்து அசத்தினார்.

    விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் காயம் குறித்து கேட்கிறீர்கள். பந்து தாக்கிய அதே காலில் தான் அவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டு பெரிய அளவில் ஆபரேசன் செய்யப்பட்டிருந்தது. அதனால் நாங்கள் அவரது விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் தான் அவருக்கு விக்கெட் கீப்பிங்கில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    Next Story
    ×