தமிழ்நாடு (Tamil Nadu)
விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- அரசு பள்ளிகளுக்கு வார விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கனமழை பெய்து வருவதை அடுத்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்:
மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளுக்கு வார விடுமுறை விடுக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்து வருவதை அடுத்து புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Next Story