என் மலர்

    விழுப்புரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது அன்புமணி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • தற்போதைய பொதுச்செயலாளரை மாற்றி விட்டு புதிய பொதுச்செயலாளர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்த ராமதாஸ் 2026 தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன். அதன் பின்னர் அன்புமணி இருந்து கொள்ளட்டும் என்றார். இதற்கிடையே நேற்று டாக்டர் ராமதாஸ் திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். என் உயிர் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன் என்றார். மேலும் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இது அன்புமணி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்த உள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நாளை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் தற்போதைய பொதுச்செயலாளரை மாற்றி விட்டு புதிய பொதுச்செயலாளர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது.
    • என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு எல்லாம் அன்புமணிதான் என கூறினார்.

    இந்த நிலையில் இன்று அவர் தைலாபுரம் தோட்டத்தில் திடீரென நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறும்போது, என் மூச்சு உள்ளவரை நான்தான் தலைவராக இருப்பேன் என கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    அன்புமணியின் செயல்பாடுகளால் அவருக்கு தலைவர் பதவி வழங்க மாட்டேன். குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பா.ம.க.வை தொய்வின்றி நடத்த எனக்கு ஆதரவு உள்ளது.

    கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறியதால்தான் அன்புமணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பெற்றோரை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும். தாய்-தந்தையை மதிக்க வேண்டும். ஆனால், அன்புமணி மைக்கை தூக்கி வீசுவதும், தாயை பாட்டிலால் தாக்குவதும் போன்ற செயலில் ஈடுபட்டார்.

    என் உத்தரவுபடி செயல் தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனக்கு மகிழ்ச்சி. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என கூறினால், அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார்.

    2026 வரை நான் தலைவராக இருப்பேன் என நான் கூறியிருந்தேன். அந்த முடிவை மாற்றி கொள்கிறேன்.

    அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என்னை மார்பிலும், முதுகிலும் குத்துகின்றனர்.
    • பா.ம.க. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன்.

    தைலாபுரம்:

    தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 2026 தேர்தலுக்குப் பிறகு தலைவர் பொறுப்பை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது செயல்பாடுகளை பார்க்கும் போது, என் மூச்சு அடங்கும் வரை தலைவராக தொடர்வேன்.

    * பா.ம.க. தொண்டர்களில் 100-ல் 90 சதவீம் பேர் எனக்கு ஆதரவு தருகின்றனர்.

    * நான் பிரசாரத்திற்கு போகும்போது 200 பேர் தான் கூட வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.

    * குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறியிருந்தேன். ஆனால் அந்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை.

    * பிள்ளைகள் தங்களது தாய்- தந்தையை மதிக்க வேண்டும் என சொன்னால் கோபம் வருகிறது.

    * நான் 100 ஆண்டுகள் வரை உயிருடன் இருப்பேன்.

    * நான் தலைவராக இருப்பதில் அன்புமணிக்கு என்ன பிரச்சனை?

    * என்னை மார்பிலும், முதுகிலும் குத்துகின்றனர்.

    * பா.ம.க. எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை நானே முடிவு செய்வேன் என்றார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 43 ஆண்டுகளாக போராடிய கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா?
    • 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார்.

    தைலாபுரம்:

    பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவி வரும் கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ராமதாசை சமாதானம் செய்யும் முயற்சியாக சந்தித்த அன்புமணி, 45 நிமிடம் சந்தித்த போதிலும் தோல்வியில் முடிந்தது.

    இதனை தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி 3 மணிநேரம் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து சென்னை சென்ற ராமதாஸ் அங்கும் குருமூர்த்தியை சந்தித்ததாக தெரிவித்தார். பா.மக. நிறுவனர் ராமதாஸ் நீக்கும் பொறுப்பாளர்கள், கட்சி பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே கட்சியின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி அப்பொறுப்பில் சையத் மன்சூர் உசேனை ராமதாஸ் நியமனம் செய்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கட்சியின் வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவராக இருந்த வக்கீல் பாலுவை பொறுப்பில் இருந்து நீக்கி, உயர்நீதிமன்ற வக்கீல் கோபுவை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். மேலும் அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி வருகிறார்.

    இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    43 ஆண்டுகளாக போராடிய கட்சியில் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் கிடைத்திருக்கும். 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை கைப்பற்ற அன்புமணி முயற்சி செய்தார். அப்பா கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என்று அப்போது அவர் கூறியது எனக்கு புரியவில்லை. அன்புமணி என் கண்ணை குத்திவிட்டார். ஒரு வாரத்தில் தலைவரை மாற்றி விடலாம் என சவுமியா அன்புமணி தன்னிடம் கூறினார். என் குடும்ப பெண்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு போக கூடாது என சவுமியாவிடம் கூறினேன். யார் சொன்னாலும் அன்புமணி கேட்க மாட்டார். நாம் அனைவரும் முயலுக்கு 4 கால் என்றால் அன்புமணி 3 கால் என்பார். கட்சியை முன்னேற்ற வலுப்படுத்த உழைப்பதற்கு அன்புமணி தயாராக இல்லை. அதனால் அவர் பதவி பறிக்கப்பட்டது.

    பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன் என கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ம.க. ஒரு சாதியினருக்கான கட்சி அல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்கமான கட்சி.
    • பா.ம.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு நல்லது, கெட்டது எல்லாம் தெரியும்.

    தைலாபுரம்:

    வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி மாநாடு உள்ளிட்டவை குறித்து கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே புதிதாக கட்சி தொடங்கிய விஜய், வருகிற சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி பணியாற்றி வருகின்றார். இதற்கிடையே அவர் யாருடன் கூட்டணி? என்பது பலரால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜயின் த.வெ.க.வுடன் பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,

    * பா.ம.க. ஒரு சாதியினருக்கான கட்சி அல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்கமான கட்சி.

    * பா.ம.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு நல்லது, கெட்டது எல்லாம் தெரியும்.

    * தவெகவுடன் நான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ம.க.வின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் எனக்கே உள்ளது.
    • எனது வார்த்தையை ஏற்று செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றுக்கொண்டால் தீர்வு எட்டப்படும்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தனது மனக்குமுறல்களை ராமதாஸ் தெரிவித்தார்.

    ராமதாஸ் கூறியதாவது:-

    * தன்னை லேசாக விமர்சித்தவர் மீதே பாய்ந்தவர் அன்புமணி.

    * தலைவராக இருந்த அன்புமணியை யாரும் பார்க்க முடியாது, யாரிடமும் பேசமாட்டார்.

    * அன்புமணியின் 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்துவிட்டது. மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

    * பா.ம.க.வின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் எனக்கே உள்ளது.

    * 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்.

    * எனது வார்த்தையை ஏற்று செயல் தலைவர் பதவியை அன்புமணி ஏற்றுக்கொண்டால் தீர்வு எட்டப்படும்.

    * பா.ம.க.வின் நிறுவனர், தலைவர் நான் தான். வாக்களிக்கும் மக்கள் என் பக்கம் உள்ளனர்.

    * அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மாட்டேன் என்றார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2019-ம் ஆண்டிலேயே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்தது.
    • முயலுக்கு 3 கால் என்று வாதிட்டு கொண்டிருக்கிறார்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * சௌமியா என்னை வந்து பார்த்து மாமா என்றார், நான் ஏம்மா என்றேன்.

    * ஒரு வாரத்தில் தலைவரை மாற்றிவிடலாமா என என்னிடம் சௌமியா கூறினார்.

    * பா.ஜ.க.வினர் கூட்டணி குறித்து பேச தைலாபுரம் வருவது எனக்கு தெரியாது.

    * என் பேச்சுக்கு மாறாக தருமபுரியில் வேட்பாளராக்கப்பட்டார் சௌமியா அன்புமணி.

    * 2019-ம் ஆண்டிலேயே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அன்புமணிக்கு இருந்தது.

    * பா.ம.க. என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவர் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்.

    * அன்புமணியுடனான பிரச்சனைக்கு தீர்வே இல்லை என்று தான் எண்ணுகிறேன்.

    * முயலுக்கு 3 கால் என்று வாதிட்டு கொண்டிருக்கிறார்.

    * 2026 தேர்தலுக்கு பின்னர் எல்லாவற்றையும் அன்புமணி தான் பார்த்துக்கொள்ள போகிறார்.

    * அன்புமணி கட்சியை சரியாக வழிநடத்தவில்லை என்று கூறினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அய்யாவுக்கு பிறகே அன்புமணி.
    • அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தேவையற்ற பொய்களை கூறி அன்புமணி மாவட்ட செயலாளர்களை மிரட்டினார்.

    * என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிற அளவுக்கு அன்புமணியின் செயல்பாடுகள் இருந்தன, இருக்கின்றன.

    * அய்யாவுக்கு பிறகே அன்புமணி.

    * என்னை நடைபிணமாக்கி என் பெயரில் நாடுமுழுவதும் நடைபயணம் செய்ய போகிறார்கள்.

    * அன்புமணி தரப்பில் பேசுவது அனைத்தும் நாடகம்.

    * பா.ம.க. தொண்டர்களை நான் வழிகாட்டிகளாக நினைக்கிறேன்.

    * இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா?

    இவ்வாறு ராமதாஸ் கூறினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதே தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம்.
    • தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மமாகும்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அன்புமணி மீதான ஆதங்கத்துடன் பேசினார். மேலும் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

    ராமதாஸ் கூறியதாவது:-

    * ஒத்து போயிருந்தால் ஓரிரு ஆண்டுகளில் நானே முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன்.

    * இன்னும் ஓரிரு ஆண்டுகள் பாமகவுக்கு தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா என கேட்பதற்கு அவமானமாக உள்ளது.

    * அன்புமணி பா.ம.க. தலைவராக்கப்பட்ட போது ஆனந்த கண்ணீட் விட்டேன்.

    * என்னை மானபங்கம் செய்துவிட்டார் அன்புமணி.

    * தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதே தீர்வு காண்பதற்கான தாரக மந்திரம்.

    * தந்தைக்கு மீறிய தனையன் இல்லை என்பதே தர்மமாகும்.

    * குலசாமி என கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகின்றனர் என கூறினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நான் தைலாபுரத்திலேயே இருக்க வேண்டும் என பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறினர்.
    • அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என்று கூறினேன்.

    தைலாபுரம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அன்புமணியை செயல் தலைவர் என்று குறிப்பிட்டு பேசினார். மேலும் தண்ணீர் விட்டே வளர்த்தோம், இப்பயிரை கண்ணீரால் காத்தோம் என பாடியிருப்பார் பாரதி என்று சுட்டிக்காட்டி பேசத் தொடங்கினார்.

    இதையடுத்து அவர் கூறியதாவது:-

    * நான் தொடங்கிய 34 அமைப்புகளை சேர்ந்த நான் நியமித்தவர்களே எனக்கு பஞ்சாயத்து செய்ய வந்தனர்.

    * சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

    * நான் தைலாபுரத்திலேயே இருக்க வேண்டும் என பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் கூறினர்.

    * அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என்று கூறினேன்.

    * ஜி.கே.மணி, சிவபிரகாசம் ஆகிய இருவரையும் தூது அனுப்பினேன். இருவரையும் சந்திக்க அன்புமணி சம்மதிக்கவில்லை.

    * என்னை நம்ப முடியாது என அன்புமணி கூறினார்.

    * கொள்ளு பேரன், பேத்திகளோடு கொஞ்சி விளையாடுங்கள் என என்னிடம் கூறினர்.

    * நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று முடிவுக்கு வந்து செய்தியாளர்களை சந்திக்கிறேன்.

    * எல்லாம் தனக்கே வேண்டும் என எண்ணுகிறார் அன்புமணி.

    * தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களை நான் சந்தித்து கொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு ராமதாஸ் கூறினார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆட்டோவில் வந்த செல்வன் மீண்டும் பஸ்சில் ஏறியதும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    திண்டிவனம்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று சென்றது. இதில் நாகர்கோவிலை சேர்ந்த செல்வன், அவரது மனைவி ஆன்சி, குழந்தை மற்றும் உறவினர் ரிஷாந்த் ஆகியோர் பயணம் செய்தனர்.

    இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் செல்வன் குழந்தைக்கு உணவு வாங்குவதற்காக பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் செல்வன் வருவதற்குள் டிரைவர் பஸ்சை இயக்கினார். இந்த சம்பவத்திற்கு பின்னர், ஆட்டோவில் வந்த செல்வன் மீண்டும் பஸ்சில் ஏறியதும், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    அதன் பின்னர் பஸ் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவிற்காக நிறுத்தப்பட்டது. அங்கு, பஸ் டிரைவர் மற்றும் அவருடன் இருந்த 5 பேர் சேர்ந்து இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை மற்றும் தடியால் செல்வன், ஆன்சி தம்பதியினர் மற்றும் அவருடன் வந்த அவரது உறவினர் ரிஷாந்த் ஆகியோரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வன், ஆன்சி தம்பதியினர் கொடுத்த புகார் பேரில் போலீசார் பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

    மேலும் தம்பதியினரை தாக்கியதாக கூறப்படும் டிரைவர்களான திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் தென்காசி மாவ ட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்த ராம கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தாக்குதலில் காயமடைந்த செல்வன் மற்றும் ஆன்சி தம்பதியினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாற்று பஸ் டிரைவர் மூலம் பஸ் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
    • ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினர்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியது. இதனால் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியடைந்தனர்.

    இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஆனால் இருவருக்கும் இடையேயான மோதல் இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.

    இதனிடையே ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்து பேசினர்.

    இந்த சந்திப்புக்கு பின் கட்சியிலும், தேர்தலிலும் பா.ம.க.வின் நிலைப்பாடு தொடர்பாக சில முக்கிய முடிவுகளை ராமதாஸ் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் அன்புமணிக்கு எதிராக அடுத்தடுத்து புதிய நிர்வாகிகளை நியமித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.

    ×