என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசுடன் தி.மு.க. கூட்டணி தலைவர் திடீர் சந்திப்பு
    X

    தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசுடன் தி.மு.க. கூட்டணி தலைவர் திடீர் சந்திப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெளியூருக்கு சென்று இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க முடியவில்லை.
    • ஜனவரியில் தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வான பேச்சுவார்த்தை நடைபெறும்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுடன் தி.மு.க. கூட்டணி தலைவர் சந்தித்து பேசினார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை செய்து கொண்டார்.

    தைலாபுரம் தோட்டத்தில் சிறிது நாட்கள் ஓய்வெடுத்த அவர் பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் தர்மபுரி, சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

    இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசை சந்திக்க தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நேற்று மாலை நேரில் வந்தார்.

    அப்போது அவர்கள் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பா.ம.க. உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பின் போது பா.ம.க. செயல் தலைவரும், டாக்டர் ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தி, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    டாக்டர் ராமதாசை சந்தித்து விட்டு வெளியே வந்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் வெளியூருக்கு சென்று இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க முடியவில்லை.

    இதனால் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். பூரண குணமடைந்து உடல் நலத்துடன் ராமதாஸ் உள்ளார். அவர் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

    கருத்து வேறுபாடு இல்லாமல் வலிமையான சக்தியாக பா.ம.க. ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை ராமதாசிடம் தெரிவித்துள்ளோம். பா.ம.க. தொண்டர்களின் விருப்பமும் அதுதான். நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என மனதார விரும்புகிறோம்.

    தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவது குறித்து தி.மு.க. தலைவர் மற்றும் பா.ம.க. நிறுவனர் பேசக்கூடிய விஷயம். தி.மு.க. கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம்.

    கூட்டணி பேசும் அதிகாரம் எங்களுக்கு கிடையாது. ஜனவரியில் தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வான பேச்சுவார்த்தை நடைபெறும்.

    பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் தவறுகள் நடைபெற்றுள்ளதால் தமிழகத்திலும் தவறுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் கூட்டியிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தான் எங்களது நிலைப்பாடு. திருத்தப்பணி நடைபெறும் போது மக்கள் விழிப்புடனும், அரசியல் கட்சியினர் கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் கரூரில் உயிரிழந்த 41 பேரின் உறவினர்களை மகாபலிபுரம் அழைத்து விஜய் சந்தித்தது குறித்த கேட்ட போது,

    விஜய் அன்றைய தினமே அல்லது ஒரு சில நாட்களிலே அவர்களை சந்தித்திருக்க வேண்டும். விஜய்யின் செயல் விரும்பக்கூடியது அல்ல. கண்டிப்பாக அவர் கரூரில் சென்று சந்தித்திருக்க வேண்டும் என்றார்.

    தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க காய்களை ராமதாஸ் நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அவரை நேரில் சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத் தக்கது.

    Next Story
    ×