என் மலர்

    தமிழ்நாடு (Tamil Nadu)

    வந்தே பாரத் ரெயிலில் செல்போன் வெடிப்பு- பயணிகள் கூச்சல்
    X

    வந்தே பாரத் ரெயிலில் செல்போன் வெடிப்பு- பயணிகள் கூச்சல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரெயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டு புகை முழுவதும் வெளியேற்றப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து மைசூரு செல்லும் வந்தே பாரத் ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை கடந்து சென்றபோது ரெயிலில் இருந்த பயணியின் செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    வந்தே பாரத் ரெயிலின் C11 பெட்டியில் பயணித்த குஷ்நாத்கர் என்பவர் செல்போன் சார்ஜ் போட்டிருந்தபோது திடீரென வெடித்தது.

    செல்போன் வெடித்து புகை வந்ததால் பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது.

    பின்னர் ரெயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டு புகை முழுவதும் வெளியேற்றப்பட்டது.

    பயணிகளுக்கு எந்தபாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் சுமார் 35 நிமிடங்கள் காலதாமதமாக வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் சார்ஜ் போட்டபோது செல்போன் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×