என் மலர்

    திருப்பத்தூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஸ் வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போதுதான் தமிழகத்தில் பார்க்கிறேன்.
    • அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று வந்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஒருநாள் பெய்த மழை வெள்ளத்துக்கே சென்னை தாங்கவில்லை. எங்கு பார்த்தாலும் சாலைகளில் குளம் போல் மழை நீர் தேங்கியது. இது வெறும் டிரெய்லர் மட்டும் தான். டிசம்பர் மாத காலங்களில் பெய்யும் மழைக்கு தமிழக அரசு எந்த அளவுக்கு தயாராக இருக்கப் போகுது என தெரியவில்லை.

    ஒரு நாள் மழைக்கே தமிழக அரசின் சாதனையென்று சொல்லி கொண்டு இருக்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு இது சாதனை கிடையாது. அடுத்து வருகின்ற பெருமழைக்கு தயாராக வேண்டும்.

    ஒரு நாள் பெய்த மழைக்கு படகுகள் மற்றும் தீபாவளிக்காக பஸ்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர். இதுவரைக்கும் பஸ் வாடகைக்கு எடுக்கக்கூடிய அரசை நான் இப்போதுதான் தமிழகத்தில் பார்க்கிறேன்.

    தமிழ்தாய் வாழ்த்து விவகாரத்தில் தூர்தர்ஷன் ஊழியர்கள் பாடியது தவறு. அவர்கள் தவறு செய்துவிட்டனர் என மன்னிப்பு கேட்டு விட்டனர். இதற்கும் கவர்னருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் கவர்னரை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது. தமிழ் தாய் வாழ்த்து விவகாரத்தில் தி.மு.க. அரசு அரசியல் செய்து வருகிறது.

    சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கஞ்சா, கள்ளச்சாராயம், மது விற்பனை என பல்வேறு பிரச்சினைகள் நிலவிக் கொண்டுள்ளது.

    மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது. விவசாயம் இல்லை. நெசவுத்தொழில் முற்றிலும் அழிந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

    இந்த அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

    ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வோம் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் இதுவரைக்கும் நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. இந்த அரசு வெறும் வாய் அரசியல் செய்து கொண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டுக்கு சென்ற பெண் ஆசிரியர், நடந்த விவரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிக விடுப்பு எடுத்து பள்ளிக்கு வரவில்லை.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் விசாலப்பட்டு அடுத்த பெரிய மோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூனை குட்டி பள்ளம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் தற்காலிக பணியாளராக 28 வயது ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.

    இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானதை தொடர்ந்து தற்போது அவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பெண் ஆசிரியர் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்ல தயாராகினார். அப்போது அங்கு சென்ற அந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், பெண் ஆசிரியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பின்னர் வீட்டுக்கு சென்ற பெண் ஆசிரியர், நடந்த விவரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் பள்ளி திறந்ததும், பெண் ஆசிரியரின் சகோதரர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை முன்கூட்டியே அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிக விடுப்பு எடுத்து பள்ளிக்கு வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அசோக் குமார், பெரிய மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் கமல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களிடம் சமரசம் பேசினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சந்திரா பாய் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத் ராவ், முன்னாள் ராணுவ வீரர்.

    இவரது மனைவி சந்திராபாய் (வயது 75). தம்பதியினருக்கு ரமேஷ் ராவ், சீனிவாச ராவ் என்ற மகன்களும், லட்சுமிபாய் என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விஸ்வநாத்ராவ் கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து சந்திராபாய், மகள் லட்சுமி பாய் கட்டிய வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி பாய் வழக்கம் போல் தனது தாய் சந்திரா பாய்க்கு இன்று காலை 7 மணி அளவில் போன் செய்தார்.

    அப்போது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமிபாய் உடனடியாக, அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் அண்ணன் ரமேஷ் ராவ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ரமேஷ் ராவ் மற்றும் உறவினர்கள் உடனடியாக சென்று பார்த்தனர்.

    அப்போது சந்திரா பாய் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுவற்றில் ரத்த காயங்கள் இருந்தது. அவரது ஆடைகளும் கலைந்து கிடந்தது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கீர்த்தி, மங்கையர்கரசி, பேபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணை குறித்து அவர்கள் கூறியதாவது:-

    மூதாட்டி தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட மர்மகும்பல் திட்டமிட்டு, மூதாட்டியின் தலையை சுவற்றில் மோதி கொலை செய்துள்ளனர். இறந்தகிடந்த சந்திராபாயின் பின்பக்க தலையில் ரத்தக்காயம் இருப்பதோடு, வீட்டின் சுவற்றில் ரத்தக்கரைகளும் படிந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காஞ்சனா தனது மகள் வரலட்சுமியுடன் ஒன்றாக வசித்து வந்தார்.
    • குமரேசன் வரலட்சுமியை சரமாரியாக அடித்து உதைத்தார்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் அருகே உள்ள பட்டாளம்மன் கோவில் வட்டத்தை சேர்ந்தவர் முனிசாமி மனைவி காஞ்சனா (வயது 57).

    இவரது மகள் வரலட்சுமிக்கும் (29), அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் குமரேசன் (32) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    காஞ்சனா தனது மகள் வரலட்சுமியுடன் ஒன்றாக வசித்து வந்தார்.

    குமரேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு குமரேசன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குமரேசன் வரலட்சுமியை சரமாரியாக அடித்து உதைத்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த காஞ்சனா, மருமகன் குமரேசனை தடுக்க முயற்சித்தார். அப்போது குமரேசன் வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து, காஞ்சனாவின் தலையில் ஓங்கி அடித்தார்.

    வலி தாங்க முடியாமல் கதறியபடி ரத்த வெள்ளத்தில் காஞ்சனா சரிந்து விழுந்தார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள், காஞ்சனாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் காஞ்சனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வழக்கு பதிவு செய்து குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் (வயது 40), கூலி தொழிலாளி. இவரது மகன் லோகேஸ் (15), அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இவர்கள் 2 பேரும் வனவிலங்குகளை வேட்டையாட ஏலகிரி மலைக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இருவரும் உறவினரான பெருமாப்பட்டு கிராமத்தை சேர்ந்த கரிபிரான் (65) என்பவருடன், நாட்டு துப்பாக்கியுடன் நேற்று இரவு வேட்டையாட சென்றனர்.

    அவர்கள் திருப்பத்தூர் அடுத்த பெருமாப்பாட்டு, காளியம்மன் கோவில் வட்டம் மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக நடந்து சென்றனர். அந்த பகுதியில் சில விவசாயிகள் தங்களது வயல்களில் பயிரிட்ட பயிர்களை காட்டு பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க வயல்களை சுற்றி மின்வேலி அமைத்திருந்தனர். இதனை அறியாத இவர்கள் 3 பேரும் எதிர்பாராதவிதமாக அந்த மின்வேலியில் சிக்கிக்கொண்டனர். ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று, 3 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

    இன்று வயலுக்கு வந்த விவசாயிகள், அங்கு 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இரவு நேரத்தில் வனவிலங்குகள் மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக நீதி என்பவர் தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார ஓயர்கள் அமைத்து உள்ளார். நேரடியாக மின்சார கம்பம் மற்றும் விவசாய நிலங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் இணைப்பில் இருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே 3 பேரின் உடல்களும் வைக்கப்பட்டு இருந்த அரசு மருத்துவமனைக்கு. அவர்களது உறவினர்கள் திரண்டு வந்தனர். குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

    இந்நிலையில், அந்த காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.2,000 நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காரில் கட்டுக்கட்டாக இருந்தது போலி ரூ.2000 நோட்டுகள் என தெரியவந்துள்ளது.

    மேலும், தான் சினிமா தயாரிப்பாளர் எனவும், படப்பிடிப்பிற்காக கொண்டு சென்றதாகவும் வாகன ஓட்டி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரெயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டு புகை முழுவதும் வெளியேற்றப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து மைசூரு செல்லும் வந்தே பாரத் ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை கடந்து சென்றபோது ரெயிலில் இருந்த பயணியின் செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    வந்தே பாரத் ரெயிலின் C11 பெட்டியில் பயணித்த குஷ்நாத்கர் என்பவர் செல்போன் சார்ஜ் போட்டிருந்தபோது திடீரென வெடித்தது.

    செல்போன் வெடித்து புகை வந்ததால் பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது.

    பின்னர் ரெயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டு புகை முழுவதும் வெளியேற்றப்பட்டது.

    பயணிகளுக்கு எந்தபாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் சுமார் 35 நிமிடங்கள் காலதாமதமாக வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் சார்ஜ் போட்டபோது செல்போன் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செல்போன் வெடித்து வடமாநில வாலிபர் படுகாயம்.
    • ரெயில் 35 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.

    ஜோலார்பேட்டை:

    சென்னை-மைசூரு செல்லும் வந்தே பாரத் ரெயில் இன்று காலை 8 மணி அளவில் வாணியம்பாடி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது ரெயிலில் பயணம் செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த குஷ்நாத்கர் (வயது 31) என்பவர், தனது செல்போனை சார்ஜ் போட்டபடி பயன்படுத்தி வந்தார். திடீரென செல்போன் சூடாகி, பயங்கர சதத்துடன் வெடித்து சிதறியது. இதில் படுகாயம் அடைந்த வடமாநில வாலிபர் வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டார்.

    செல்போன் வெடித்த போது புகை கிளம்பியதால் அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதால், ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று, 2 ரெயில் பெட்டிகளின் பிரதான கதவுகளைத் திறந்து புகையை அகற்றினர்.

    இதன்பிறகு ரெயில் 35 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • விமானம் மூலம் டெல்லி சென்று, ஜம்மு காஷ்மீரில் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் தவுலத் மகள் சுமையா பேகம் (வயது 22).

    இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கத்தமிழன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களுடைய காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகம் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 5-ந் தேதி 2 பேரும் வீட்டில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் மூலம் சென்னைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்று, ஜம்மு காஷ்மீரில் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் 2 பேரும் மணக்கோலத்தில் பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனுமக்காவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டேன். அவர் பணம் தர மறுத்ததால் எனக்கு கோபம் அதிகமானது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பலப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபால்.

    இவரது மனைவி அனுமக்கா (வயது 82). கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மூதாட்டி அணுமக்கா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் மூதாட்டி கடந்த 27-ந் தேதி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தலையணை அழுத்தி வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது காது மற்றும் மூக்கு பகுதியில் வெட்டு காயங்கள் இருந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொலை குற்றவாளிகளை பிடிக்க வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அனுமக்காவை கொலை செய்த, அவரது மகன் வழி பேரன் சிவராஜ் மகன் சிவகுமார் (வயது 31), அதற்கு உடனடியாக இருந்த மருமகள் மலர் (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிவக்குமார் போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. எனது பாட்டி அனுமக்காவிடம் அடிக்கடி சென்று அடிக்கடி பணம் வாங்கி வருவேன். அதன்படி கடந்த 27-ந் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் போதையில் பாட்டி வீட்டுக்கு சென்றேன்.

    அனுமக்காவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டேன். அவர் பணம் தர மறுத்ததால் எனக்கு கோபம் அதிகமானது.

    அப்போது அவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, தலையணை வைத்து அமுக்கி பாட்டியை கொலை செய்தேன்.

    பின்னர் அவர் கழுத்தில் அணிந்த 1½ நகை மற்றும் கால் கொலுசு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டேன்.

    பாட்டியிடம் எடுத்த நகைகளை எனது தாய் மலரிடம் கொடுத்து, நடந்த விவரத்தை கூறினேன். எனது தாய் என்னை அங்கிருந்து அனுப்பி வைத்தார். பின்னர் நாங்கள் ஒன்றும் தெரியாது போல் ஊரிலேயே இருந்தோம். போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது.
    • தற்போது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று நேற்று மாலை திடீரென நுழைந்தது. இதை பார்த்ததும் மாணவ- மாணவிகள் அச்சம் அடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகம் மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

    அதற்குள் அந்த சிறுத்தை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது ஒரு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தை மரங்கள் அடர்ந்த பகுதியில் புகுந்து மறைந்துள்ளது. சிறுத்தை மறைந்துள்ள பகுதியில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    கார் நிறுத்தத்தில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் ஈடுபட்டனர்.

    கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது. அப்போது வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை வனத்திற்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    திருப்பத்தூரில் பெரும் பீதியை ஏற்படுத்திய சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியதால் தற்போது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    இதை தொடர்ந்து, மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட சிறுத்தையானது பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. கூண்டை திறந்தவுடன் சிறுத்தையான சீறி பாய்ந்து வனப்பகுதியில் ஓடியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில பெற்றோர்கள் பள்ளிக்குள் விரைந்து தங்களது குழந்தையை கட்டித்தழுவி, குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினர்.
    • கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி, அதன் அருகில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் என்று அந்த பகுதி மிகவும் பரபரப்பு நிறைந்தது ஆகும்.

    நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ஜெயராமன் என்பவரது வீட்டின் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து உள்ளனர்.

    அவர்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பரபரப்பான நகர பகுதியில் சிறுத்தை வருவதற்கு வாய்ப்பு இருக்காது, அது காட்டுப்பூனையாக இருக்கலாம் என்றனர். ஆனால் அவர்களின் கணிப்பு தவறு என்பதை போன்று அங்கு ஒரு சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிறுத்தை வனத்துறையினரிடம் இருந்து தப்பி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மேரி இமாகுலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் பாய்ந்து சென்றது. அப்போது அங்கு பள்ளி சுற்றுச்சுவருக்கு பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புத்தகரத்தை சேர்ந்த கோபால் (வயது 55) என்பவரை நெற்றி, காது பகுதியில் சிறுத்தை தாக்கிவிட்டு மறைவான இடத்தில் புகுந்தது.

    சிறுத்தை தாக்கியதை அருகில் இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டு பள்ளிக்குள் சிறுத்தை புகுந்து விட்டது, குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் தொற்றியது.

    பள்ளி வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்த தகவல் அறிந்து மாணவிகளை வகுப்பறையின் உள்ளே வைத்து ஆசிரியர்கள் பூட்டி பாதுகாத்தனர். சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த கோபாலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    சிறுத்தை பள்ளி வளாகத்தில் இருப்பதால் மாணவிகளை வெளியே அனுப்ப வேண்டாம், கதவுகளை திறக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அருகில் இருந்த பள்ளிகளிலும் எச்சரிக்கையாக இருக்கும்படி தகவல் தெரிவித்தனர். சிறுத்தை புகுந்த தகவல் திருப்பத்தூர் நகர பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் தங்கள் குழந்தைகளின் நிலைமை என்ன ஆனதோ என்ற அச்சத்துடன் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு பதற்றத்துடன் குவிந்தனர்.

    இதையடுத்து அங்கு சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை திடீரென 10 அடி உயர சுற்றுச்சுவரை தாண்டி குதித்து அருகே உள்ள கார் நிறுத்தும் பகுதிக்குள் புகுந்தது. சிறுத்தை பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிய தகவல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வகுப்பறை கதவுகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மாணவிகளை பத்திரமாக பெற்றோருடன் அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சில பள்ளி குழந்தைகள் பயத்துடன் அழுது கொண்டு ஓடினர். அவர்களுக்கு ஆசிரியர்களும், சக மாணவிகளும் ஆறுதல் கூறினர்.

    சில பெற்றோர்கள் பள்ளிக்குள் விரைந்து தங்களது குழந்தையை கட்டித்தழுவி, குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினர். மாலை 5.30 மணிக்கு அனைத்து மாணவிகளும் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது பொதுமக்களும், பெற்றோர்களும் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் புகுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மாணவிகளை பெற்றோருடன் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.

    பின்னர் கார் நிறுத்தத்தில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் ஈடுபட்டனர்.

    கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது. அப்போது வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை வனத்திற்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    திருப்பத்தூரில் பெரும் பீதியை ஏற்படுத்திய சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியதால் தற்போது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 

    ×