தமிழ்நாடு (Tamil Nadu)
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து 2 நாட்கள் ரத்து
- பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் 4 நாட்கள் பயணிகள் கப்பல்(சிவகங்கை) போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம், சூறைக்காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17-ந் தேதி(வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story