என் மலர்

    நாகப்பட்டினம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நண்டின் பின்பகுதியில் சுமார் 8 லட்சம் முட்டைகள் இருப்பது தெரியவந்தது.
    • மீனவர்கள் அந்த கல் நண்டை ஒரு பெட்டியில் தண்ணீரை நிரப்பி வென்டிலேட்டர் பொருத்தி உயிருடன் விட்டனர்.

    நாகப்பட்டினம்:

    கடல் நீர் மற்றும் நன்னீரில் வாழும் உயிரினம் நண்டு. நண்டுகள் ஒரே நேரத்தில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். கடல் உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கும் நண்டு நரம்பு மண்டல செயல்பாடுகளுக்கு உதவி செய்கிறது. குறைவான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நண்டு ஒரு நல்ல உணவாக உள்ளது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் நேற்று மீனவர்கள் வலையில் சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல் நண்டு சிக்கியது.

    மீனவர்கள் அந்த கல்நண்டுடன் கரைக்கு வந்தனர். அந்த நண்டை அவர்கள் சோதனை செய்தனர். நண்டின் பின்பகுதியில் சுமார் 8 லட்சம் முட்டைகள் இருப்பது தெரியவந்தது.

    உடனே மீனவர்கள் அந்த கல் நண்டை ஒரு பெட்டியில் தண்ணீரை நிரப்பி வென்டிலேட்டர் பொருத்தி உயிருடன் விட்டனர். தொடர்ந்து இந்த கல் நண்டு குஞ்சு பொரிப்பதற்காக அந்தமான் மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு விமானத்தில் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.

    குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து ஒரு வாரத்தில் குஞ்சுகள் பொரித்தவுடன் நண்டு குஞ்சுகள் பத்திரமாக கடலில் விடப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    குஞ்சு பொரிப்பதற்காக நண்டு ஒன்று அந்தமானுக்கு விமானத்தில் பறக்க இருப்பது மீனவர்களிடம் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
    • குறைந்த அளவிலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    வேதாரண்யம்:

    மிககனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மீன் வளத்துறை மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனை அடுத்து வேதாரண்யம் தாலுக்காவை சேர்ந்த 5000 மீனவர்கள் தங்களது பைபர்படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

    மழை இல்லாததாலும், வானிலை சீராக உள்ளதாலும் இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அனுமதி அளித்ததால் 3 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    தென் வங்ககடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

    மேலும் வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து நாகை மாவட்ட பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

    இந்நிலையில் வங்ககடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை புதுச்சேரி நெல்லூருக்கு இடையே கரையை கடந்ததை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் குறைந்த அளவிலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், நாகை மீன்வளத்துறை மூலம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆறுக்காட்டு துறை, கோடியக்கரை ஆகிய கிராமங்களில் இருந்து நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்ற விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் அவசர, அவசரமாக இன்று காலை கரை திரும்பி வருகின்றனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் அவசர, அவசரமாக கரை திரும்பியதால் மீன்கள் எதுவும் இன்றி ஏமாற்றத்துடன் வந்தடைந்தனர்.

    மேலும், இதன் எதிரொலியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வில்லை. இதனால் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காற்றின் வேகமானது 35 கி.மீ - 65 கி.மீ வரை வீசக்கூடும்.
    • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பாக நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மிக அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3500-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    மீன்வளத் துறையினரின் உத்தரவின் பெயரில் ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைத் திரும்பி வருகின்றனர்.

    காற்றின் வேகமானது 35 கி.மீ - 65 கி.மீ வரை வீசக்கூடும். மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் 4 நாட்கள் பயணிகள் கப்பல்(சிவகங்கை) போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம், சூறைக்காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17-ந் தேதி(வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேதாரண்யம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உப்பள பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
    • தற்போது ஒரு டன் உப்பு ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை ஆகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது . தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்து இங்கு தான் உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது.

    ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை எட்டிய நிலையில் விற்பனை போக ஒரு லட்சம் டன் உப்பு உற்பத்தி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேதாரண்யம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உப்பள பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இவர்கள் விவசாயம் உள்ளிட்ட பிற பணிகளுக்கு செல்கின்றனர்.

    இதையடுத்து உப்பத்தில் சேமித்து வைத்துள்ள உப்பை பனை ஓலைகள் மற்றும் தார்பாய்களைக் கொண்டு தொழிலாளர்கள் முழுமையாக மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    தற்போது ஒரு டன் உப்பு ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை ஆகிறது. மழைக்கால விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பிற்கு கூடுதல் விலை கிடைக்கும் எனவும் மீண்டும் மூன்றுமாத ஓய்விற்கு பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 பைபர் படகுகளில் இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் வந்தனர்.
    • மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை காவல்துறையில் புகார் அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் செருதூர் மீனவகிராமத்திலிருந்து சத்தியசீலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விஜயன், ரமணன், விக்னேஷ் குமார், ரீகன் ஆகிய 4 பேரும் கடந்த 8-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நேற்று இரவு கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே 15 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 பைபர் படகுகளில் இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் வந்தனர்.

    அவர்கள் நாகை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தாக்கி சுமார் 250 கிலோ மதிப்புள்ள மீன்பிடி வலை, செல்போன் 1 ஜிபிஎஸ் 1, டீசல் சுமார் 100 லிட்டர் மற்றும் ரேசன் பொருட்களை பறித்துச் சென்று விட்டனர்.

    இந்நிலையில் கோடியக்கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் சுவற்றின் மீது மோதி நின்றது.
    • விபத்தில் கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் சுவர் பலத்த சேதமடைந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேதாரண்யம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன்.

    இவர் இன்று வேதாரண்யத்தில் இருந்து கீழ்வேளூருக்கு காரில் புறப்பட்டார். காரில் முன்இருக்கையில் ஓ.எஸ்.மணியன் அமர்ந்திருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டினார்.

    கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் மதில் சுவற்றின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இருந்தாலும் ஓ.எஸ்.மணியன், டிரைவர் ஆகியோர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சைக்காக சென்றனர்.

    இந்த விபத்தில் கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் மதில் சுவர் பலத்த சேதமடைந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 பைபர் படகுகளையும் விசைப்படகில் கட்டி இழுத்துச் சென்றனர்.
    • இரும்பு உருண்டை, ஐஸ்க ட்டி போன்றவற்றையும் வீசி தாக்குதல்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் எல்லையம்மன் கோவில்தெருவை சேர்ந்த சத்யராஜ் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சற்குணம் (35), செந்தில் (50) வில்பிரட் ஆகியோர் கடந்த 28-ந்தேதி காலை செருதூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இதேபோல், செருதூர் வடக்குத்தெருவை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அவரும் அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (40), ஆனந்தவேல் (38), அஜித் (24) ஆகியோரும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    இதேபோல், செருதூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த செந்தில் (42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த மணிவண்ணன் (28), காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த அருள் வடிவேல் (40), சரவணன் பிள்ளை, சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரமேஷ் (38) ஆகியோரும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அப்போது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தோப்புத்துறையில் இருந்து கிழக்கே சுமார் 23 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் தங்களது படகை நங்கூரம் இட்டு நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது அங்கு 2 விசைப்படகுகளில் வந்த மீனவர்கள் இவர்களது வலையை அறுத்துவிட்டு சென்றனர்.

    இதுகுறித்து கேட்டதற்கு தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மேற்கண்ட 3 பைபர் படகுகளையும் அவர்களது விசைப்படகில் கட்டி இழுத்துச் சென்றனர். அதோடு மட்டுமின்றி இரும்பு உருண்டை, ஐஸ்க ட்டி போன்றவற்றையும் வீசி தாக்கி உள்ளனர்.

    பின்னர், காயங்களுடன் மீனவர்கள் நேற்று மாலை கரை திரும்பினர். தகவல் அறிந்ததும் சக மீனவர்கள் உதவியுடன் காயமடைந்த செந்தில், வில்பிரட், சத்தியமூர்த்தி ஆகியோர் சிகிச்சைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பைபர் படகு மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி, விசைப்படகு மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகை:

    நாகப்பட்டினம் மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பைபர் படகு மீனவர்கள் மீது இரும்பு குண்டுகளை வீசி, விசைப்படகு மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த செருதூரை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகையில் பைபர், விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது விசைப்படகு மீனவர்களுக்கும் பைபர் படகு மீனவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    அந்த காட்சியில் சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த 4 பைபர் படகு மீனவர்கள், இரண்டு விசை படகின் மீது மோதுவது போன்று பதிவாகி இருந்தது. நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களுக்கிடையே மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும், தகராறில் படகுகளை மோத செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நங்கூரமிட்டு இருந்த பைபர் படகின் கயிற்றை, விசைப்படகு மாட்டி இழுத்துச் சென்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில் 4 பைபர் படகுகளில் 2 பைபர் படகுகள் கரை வந்து சேர்ந்துள்ளதாகவும் மற்ற 2 பைபர் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிறுதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மோதல் குறித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கடுமையாக பாதிப்பு.
    • இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    பாம்பன்:

    தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மற்றும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.

    அவர்கள் பாக்ஜலசந்தி உள்ளிட்ட இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்புகிறார்கள். இதற்கிடையே எல்லை தாண்டி வந்தாக கூறி அண்டை நாடான இலங்கையை சேர்ந்த கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களின் பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுளை பறிமுதல் செய்வதும் காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.

    அதிலும் சமீப காலமாக சிறைபிடிக்கப்படும் மீனவர்களுக்கு இலங்கை கோர்ட்டு கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதுடன், அதனை கட்டத்தவறினால் கூடுதல் சிறைவாசம் அனுபவிக்க உத்தரவிடுகிறது.

    இதனால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு மாற்று தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இலங்கையில் சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. எனவே மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் பாரம்பரிய இடங்களில் சுமூகமான முறையில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீனவர்கள் பாதியில் கரை திரும்பியுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியில் இருந்து நேற்று காலை 470 விசைப் படகுகளில் 1,800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே மீன்வளம் நிறைந்த பகுதியில் வலைகளை விரித்திருந்தனர்.

    வழக்கமான நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தான் இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்கு வந்து அவர்களை எச்சரிப்பதும், சிறைபிடிப்பதும் நடக்கும்.

    ஆனால் நேற்று ஒரே நேரத்தில் 6 ரோந்து கப்பலில் வந்த கடற்படையினர் தமிழக மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர்.

    இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு புறப்பட தயாரானார்கள். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தங்களிடமிருந்த எந்திர துப்பாக்கிகளை உயர்த்திப்பிடித்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    எங்கள் நாட்டின் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க வந்தால் உங்களையும் சுட்டுத்தள்ளுவோம் என்று எச்சரித்துள்ளனர்.

    உடனடியாக ராமேசுவரம் மீனவர்கள் அங்கு தொடர்ந்து மீன்பிடிக்கும் சூழ்நிலை இல்லாததால் பாதியிலேயே புறப்பட்டனர்.

    ஒரு சில படகுகளில் இருந்த மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் கடலில் வீசியிருந்த வலைகளை தாங்களே அறுத்துக்கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று கரையை நோக்கி படகை செலுத்தினர்.

    ஒரே பகுதியில் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் மீன்பிடித்த நிலையில் சில படகுகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடத்திற்கு சென்றது. 15-க்கும் மேற்பட்ட படகுகளை சேர்ந்த மீனவர்கள் கரை திரும்பினர்.

    இதனால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புலம்பினர். ஆனால் இதுதொடர்பாக அவர்கள் போலீசில் எந்தவித புகாரும் தெரிவிக்க வில்லை.

    இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபர் பதவியேற்ற ஒரு சில நாட்களில் அந்நாட்டு கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை குறிவைத்து அராஜக செயல்களில் ஈடுபடுவது பெரும் கொந்தளிப்பையும், பதட்டத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    ஏற்கனவே புரட்டாசி மாதம் பிறந்துள்ள நிலையில் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காமல் மீனவர்கள் தவித்துவருகிறார்கள். இதற்கிடையே நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்களை மத்திய, மாநில தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவர்னர் 2 நாள் சுற்றுப்பயணமாக நாகைக்கு வருகை தந்துள்ளார்.
    • உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை.

    நாகப்பட்டினம்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நாகை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

    சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் திருச்சி வந்து இறங்கியவர் சாலை மார்க்கமாக வேதாரண்யம் வருகை தந்தார்.

    வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவி உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


    பின்னர் அருகில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர் வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு சென்ற கவர்னர் இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

    இன்று காலை நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் கலந்து கொள்கிறார்.இந்நிலையில் நாகையில் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் அமிர்த ராஜா தலைமையில் கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் நாகை புத்தூர் மேம்பாலம் அருகே கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பேராட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    ×