தமிழ்நாடு செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
- இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
- காயமடைந்த தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான எஞ்சின், ஜிபிஎஸ், 2 செல்போன்கள், பேட்டரி மற்றும் 30 கிலோ மீன்களை பறித்துச் சென்றனர்.
Next Story