என் மலர்

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தூத்துக்குடியில் பரவலாக கனமழை: மணியாச்சியில் 7.5 சென்டிமீட்டர் பெய்த மழை
    X

    தூத்துக்குடியில் பரவலாக கனமழை: மணியாச்சியில் 7.5 சென்டிமீட்டர் பெய்த மழை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனா நதி பகுதிகளில் சாரல் அடித்தது.
    • மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மாலை நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் பிற்பகலில் ராதாபுரம் பகுதியில் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டது. தொடர்ந்து கனமழை பெய்ய தொடங்கியது. கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு சுமார் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக களக்காட்டில் 5 சென்டிமீட்டர் மழை கொட்டியது. மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டியிலும் சாரல் அடித்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 18 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 16 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை நேற்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது. எனினும் மழை பொழிவு எதுவும் இல்லை. பாபநாசம் அணையில் தற்போது 93.45 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறில் 105.18 அடியும், மணிமுத்தாறில் 63.64 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனா நதி பகுதிகளில் சாரல் அடித்தது. அதிகபட்சமாக கருப்பாநதியி 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், சங்கரன்கோ விலில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக கயத்தாறு, மணியாச்சி, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் நீர் தேங்கியது.

    இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மணியாச்சியில் அதிகபட்சமாக 7.5 சென்டிமீட்டர் மழை கொட்டியது. கயத்தாறில் 37 மில்லிமீட்டரும், கடம்பூரில் 41 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டையபுரம், காடல்குடி பகுதிகளில் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. கீழ அரசடி பகுதியில் சுமார் 1 மணி நேரம் கொட்டிய மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்தது. விளாத்திகுளம் சுற்றுவட்டார கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாநகர், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்தில் வெயில் அடித்தது.

    Next Story
    ×