தமிழ்நாடு (Tamil Nadu)
தவெக மாநாட்டு திடலில் எஸ்பி ஆய்வு
- தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
- மாநாட்டு பந்தல் அமைக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எஸ்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் வி.சாலையில் உள்ள மாநாட்டு திடலில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் ஆய்வு மேற்கொண்டார். மாநாட்டு பந்தல் அமைக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
Next Story