என் மலர்

    தமிழ்நாடு (Tamil Nadu)

    நாகை மீனவர்களை தாக்கி மீன்வலை, தொழில் நுட்பசாதனங்கள் கொள்ளை
    X

    நாகை மீனவர்களை தாக்கி மீன்வலை, தொழில் நுட்பசாதனங்கள் கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 பைபர் படகுகளில் இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் வந்தனர்.
    • மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை காவல்துறையில் புகார் அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் செருதூர் மீனவகிராமத்திலிருந்து சத்தியசீலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விஜயன், ரமணன், விக்னேஷ் குமார், ரீகன் ஆகிய 4 பேரும் கடந்த 8-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நேற்று இரவு கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே 15 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 பைபர் படகுகளில் இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் வந்தனர்.

    அவர்கள் நாகை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தாக்கி சுமார் 250 கிலோ மதிப்புள்ள மீன்பிடி வலை, செல்போன் 1 ஜிபிஎஸ் 1, டீசல் சுமார் 100 லிட்டர் மற்றும் ரேசன் பொருட்களை பறித்துச் சென்று விட்டனர்.

    இந்நிலையில் கோடியக்கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×