என் மலர்

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஆட்சி அதிகாரத்தில் திருமாவளவன் பங்கு கேட்பது நியாயமானது தான்- எச். ராஜா
    X

    ஆட்சி அதிகாரத்தில் திருமாவளவன் பங்கு கேட்பது நியாயமானது தான்- எச். ராஜா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு.
    • அ.தி.மு.க.விலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன்.

    திருச்சி:

    திருச்சியில் பா.ஜ.க. தமிழக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    3-வது முறையாக அரியானாவில் பாஜக ஆட்சி அமைய உள்ளது. தேர்தலில் வெற்றியை பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்த காங்கிரஸ் கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். ஒரு அரசு எப்படியெல்லாம் ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்கு ஒரு அடையாளமாக மெரினாவில் நடைபெற்ற ஏர் ஷோ நடந்துள்ளது.

    இந்த அரசால் மக்களுக்கு குடிநீர் கூட கொடுக்க முடியவில்லை.

    தனது நண்பர்கள் நலனுக்காக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது கார் பந்தயம் நடப்பதற்கு முன்னேற்பாடுகளை தொடர்ந்து கவனித்த உதயநிதி துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் தனது பணியை மறந்துவிட்டார். தமிழக காவல்துறை இதுவரையிலும் எந்த ஒரு பயங்கரவாதிகளையும் கைது செய்யவில்லை.

    கஞ்சாவை தவிர வேறு எந்த ஒரு போதைப் பொருளையும் தமிழக காவல்துறை பிடித்ததாக தெரியவில்லை. எந்த வகையிலும் தோற்றுப் போன அரசாக திமுக ஆட்சி உள்ளது. 2026-ல் மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள்.

    ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் கேட்டது நியாயம். ஆனால் கூட்டணிக்கு மட்டும் தான் கட்சிகள் தேவை. அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு.

    அரசின் கஜானாவை காலி செய்துவிட்டு அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் தற்போது தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம்போட முடியாத நிலை தமிழகத்தில் அடுத்த மூன்றுமாதத்தில் உருவாகும், நிர்வாக திறன்மையின்மைக்கு மத்திய அரசு குறைசொல்வதை ஏற்கமுடியாது.

    அ.தி.மு.க.விலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைய வேண்டும். ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தால்தான் தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். சமூக நீதி வேண்டும் என்றால் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். தி.மு.க. என்பது இந்து விரோத அமைப்பு தான். அதன் இந்து விரோத கொள்கைகள் மாறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முரளி, ஸ்ரீராம் சங்கர், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முரளி, ஸ்ரீராம் சங்கர், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×