என் மலர்

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பா.ஜ.க. அரசின் எண்ணம் நிறைவேறாது- கார்த்திக் சிதம்பரம்
    X

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பா.ஜ.க. அரசின் எண்ணம் நிறைவேறாது- கார்த்திக் சிதம்பரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவாக இருக்கும்.
    • சென்னையில் கூவம் நதி தூய்மைப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தனக்கு வாக்களித்த பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடவுள், மதம் தனிப்பட்ட நம்பிக்கை. அதை அரசியலோடு சேர்க்க கூடாது என உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதை வரவேற்கிறேன். காவிரி பிரச்சனையை தமிழகம், கர்நாடகம் மாநிலங்கள் சேர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகலாம். காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவாக இருக்கும்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் பாரதிய ஜனதா கூட்டணி அரசின் எண்ணம் நிறைவேறாது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா இரு அவைகளிலும் நிறைவேற வாய்ப்பில்லை. சென்னையில் கூவம் நதி தூய்மைப்படுத்துவது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு பதில் வரவில்லை. தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×