என் மலர்

    தமிழ்நாடு (Tamil Nadu)

    Thirumavalavan
    X

    திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் - மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விசாரணை மயிலாடுதுறை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
    • வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறையில் மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக 2003-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, மயிலாடுதுறை ரெயிலடி பகுதியில் இருந்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் பேரணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கலவரம் ஏற்பட்டது.

    இது தொடர்பான விசாரணை மயிலாடுதுறை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று (புதன்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தொல்.திருமாவளவன் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும், வக்கீல்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக வி.சி.க. தரப்பில் வக்கீல்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து, இந்த வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Next Story
    ×