என் மலர்

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போக்சோவில் போலீஸ்காரர் கைது
    X

    சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போக்சோவில் போலீஸ்காரர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பெரம்பூர் காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முதல் நிலைக்காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கியுள்ளார்.

    இந்நிலையில் சம்பவதன்று அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஆடு மேய்க்க வந்துள்ளார். அந்த சிறுமிக்கு, திருநாவுக்கரசு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து அவரை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ்காரர் திருநாவுக்கரசை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் போலீஸ்காரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×