என் மலர்

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கல்லார் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்- சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
    X

    கல்லார் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்- சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லாறு மற்றும் அதற்கு மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
    • ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    இதனால் கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக மேட்டுப்பாளையம் வனச்சரத்துக்குட்பட்ட கல்லாறு மற்றும் அதற்கு மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

    இந்த கனமழையால், பவானி ஆற்றுக்கு தண்ணீர் வரும் கல்லார் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    வனப்பகுதியில் பெய்த மழையால் செந்நிறத்தில் கல்லாறு ஆற்றில் இதுவரை மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்தது. நேற்று ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பாராங்கற்க்களுக்கு மத்தியில் வளைந்து நெலிந்து இரைச்சல் சப்தத்துடன் தண்ணீர் பாய்தோடி வரும் காட்சிகள் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    சில சுற்றுலா பயணிகள் இந்த ஆற்றுக்கு சென்று அதனை பார்வையிட்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

    இதற்கிடையே இந்த ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் சென்று புகைப்படம் எடுப்பதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×