என் மலர்

    கோயம்புத்தூர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 28 மாதங்கள் கழித்து தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் எனக்கூறி மகளிர் உரிமைத்தொகை கொடுத்துள்ளார்.
    • விளாத்திகுளம் சம்பவத்தில் மெத்தனமாக இருப்பது ஏன்?.

    கோவை:

    கோவையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த மகளிர் தின நிகழ்ச்சியில் நடிகை கவுதமி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறுதிவரை பெண்களுக்காகவே வாழ்ந்தார்.

    ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார். இதற்கு சாட்சி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராடிய பின்னர் 28 மாதங்கள் கழித்து தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் எனக்கூறி மகளிர் உரிமைத்தொகை கொடுத்துள்ளார்.

    ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். மு.க.ஸ்டாலின் தனது ஆட்சி முடியும் தருவாயில் கொடுத்துள்ளார். அவர்களுக்கு வாக்குரிமை வந்துவிட்டது என்பதற்காகத் தான் இப்போது கொடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விளாத்திகுளம் வன்கொடுமை, கொலை சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும் என்று கனிமொழி எம்.பி., கூறியிருப்பது மனிதத் தன்மையற்றது.

    பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஒரு ஆறுதல் கூட சொல்ல முடியாத நீங்கள் எப்படி உங்களைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும். கரூர் சம்பவத்தில் இரவோடு இரவாக அறிக்கை தந்தவர்கள், விளாத்திகுளம் சம்பவத்தில் மெத்தனமாக இருப்பது ஏன்?.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிகப்பெரிய பெருமை என்னவென்றால், போதைப்பொருள் பரவலால் இந்தத் தலைமுறையையும், அடுத்த இரண்டு தலைமுறைகளையும் நாசமாக்கி அழித்ததுதான்.

    வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தாலும், அது தி.மு.க. மற்றும் அ.தி.மு.க இடையிலான நேரடிப் போட்டியாகவே இருக்கும். மற்றவர்கள் இடையில் வந்த 'தொல்லைகள்' போன்றவர்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விளம்பரம் தேடுவதிலேயே தான் இந்த ஆட்சியினர் குறிக்கோளாக உள்ளனர்.
    • போனமுறை எத்தனையோ பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர்

    கோவை:

    கோவையில் அ.தி.மு.க. சார்பில் நடந்த மகளிர் தினவிழாவில் நடிகை விந்தியா பேசியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஞாபகம் இருக்கிற அளவுக்கு இந்த 5 ஆண்டுகளில் நாங்கள் சாதனை செய்துள்ளோம் என மைக்கிலேயே மேகி கிண்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    அப்படி என்ன சாதனைகள் செய்து விட்டார் என்று யோசித்து பார்த்தேன். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகளில் எந்த அரசும் 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கியது இல்லை. ஆனால் 5 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி கடன் வாங்கியது தான் தி.மு.க அரசின் சாதனை.

    காமராஜர் காலத்தில் இருந்து எடப்பாடியார் காலம் வரையிலான ஆட்சியில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று படித்தனர். ஆனால் இந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மாணவர்கள் போதையில் சுற்றி கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுதான் இந்த தி.மு.க அரசின் சாதனை.

    இதுபோன்ற சாதனைகள் செய்துள்ள பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே உண்டு. இதற்கு மேல் தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க. இருக்கும். ஆனால் தமிழ்நாடு இருக்காது.

    தி.மு.க. பல்லு முளைக்காத குழந்தை முதல் பல்லு போன மூதாட்டி வரை யாருக்கும் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக முதலமைச்சர் கூறுகிறார். வெல்லும் பெண்கள் என்ற பெயரில் வெட்கமே இல்லாமல் இந்த ஆட்சியினர் விளம்பரம் தேடுகின்றனர். விளம்பரம் தேடுவதிலேயே தான் இந்த ஆட்சியினர் குறிக்கோளாக உள்ளனர்.

    இன்று தி.மு.க ஆட்சியில் இருப்பதற்கு காரணம் பெண்கள் தான். ஆனால் அந்த பெண்களுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.

    போனமுறை எத்தனையோ பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். இப்பவும் கட்டு, கட்டாக, பொய்களை தூக்கி கொண்டு வருவார்கள். யாரும் அவர்களை நம்பாதீர்கள். தி.மு.க.வினர் உண்மையான விஷயங்களை எப்போதும் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு அது தெரியாது. நேருக்கு நேர் நின்று சண்டை போடுவதற்கு தி.மு.க.வுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தெரியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போர் காரணமாக அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
    • த.வெ.க தொடர்பான பா.ஜ.க நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை.

    கோவை:

    பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விளாத்திகுளம் சிறுமி மாயமான 10-ந்தேதி சிறுமியின் பெற்றோர் குளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க சென்றுள்ளனர். அவர்கள் விளாத்திகுளம் மகளிர் காவல்நிலையம் செல்லுமாறு கூறியுள்ளனர்.

    ஆனால் அங்கும் புகாரை ஏற்காமல் அலட்சியம் செய்துள்ளனர். மேலும் தேடுதல் வேட்டை நடைபெற்ற பகுதியிலேயே சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியை காப்பாற்றி இருக்கலாம்.

    இது காவல்துறையின் தோல்வி என்பதை விட முதலமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும் காவல்துறை நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. முதலமைச்சர் வெட்கி தலைகுனிய வேண்டும்.

    பெட்ரோல் கிடைக்காது என்று தி.மு.க, கூட்டணி கட்சியினர் வதந்தியையும், பொய்யையும் பரப்பி மக்களை வீதியில் நிறுத்தியுள்ளனர். மத்திய அரசு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளது. நமது உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி உயர்ந்து இருக்கிறது என்று மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து கப்பலில் எரிபொருள் வருகிறது.

    போர் காரணமாக அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.

    தி.மு.க. கூட்டணியினர் பீதியை கிளப்பியதால் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கேன்கள், பாட்டிலகளில் அவர்கள் பிடித்து சென்றனர். தமிழக மக்களை பெட்ரோல் பங்குகளில் நிற்க வைத்துள்ளது தி.மு.க அரசு. தமிழகம் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் இப்படிப்பட்ட நிலைமை காணப்படவில்லை.

    தி.மு.க ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 2,080 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. குந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது.

    தமிழக வெற்றி கழகத்தினர் நடத்திய கூட்டம் குறித்து நான் கருத்து கூற முடியாது. என்னை பொறுத்தவரை விஜயை பற்றி நான் இதுவரை பேசிய கருத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை. நான் அப்படியே தான் இருக்கிறேன்.

    த.வெ.க தொடர்பான பா.ஜ.க நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது.

    தி.மு.க கூட்டணியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 3 தொகுதி கூடுதலாக உயர்த்தி கொடுக்கிறபோது எங்களுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். அதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என சி.பி.ஐ. தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    வைகோ மிகவும் கஷ்டப்பட்டு சிரித்து கொண்டிருக்கிறார். வெறும் 4 தொகுதிகள் வாங்கி விட்டு சென்றுள்ளார். எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டார். வைகோவை இப்படி பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது.

    தி.மு.க கொடுக்கும் 5 தொகுதிகளை திருமாவளவன் நிச்சயம் ஏற்கமாட்டார். தி.மு.க கூட்டணியில் இருந்து திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ளது.

    தி.மு.க கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன்பு நிறைய மாற்றம் வரும். டீயும் டீயும், காபியும் சேருமா என்று கேட்கிறீர்கள்.

    பொதுஎதிரியை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்று சேர்வது தமிழக அரசியலில் நடந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு வரை கடைசி நேரத்தில் கூட திருப்பம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க அரசை தூக்கி எறிய வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.க தொண்டர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க.வி.னர் அகங்காரமாக இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசியலில் உயர் பொறுப்புக்கும், அதிகாரத்திற்கும் வருபவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.
    • தாய்மார்கள் தான் அரசியல் திசையை மாற்றுவார்கள். களத்தை மாற்றுவார்கள்.

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவை தொண்டாமுத்தூரில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    கடந்த 10-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல கிருஷ்ணகிரியில் 2 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யாராவது ஈடுபட்டால் அவர்களால் வெளியே இருக்க முடியுமா?. ஆனால் இன்று தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் குழந்தை முதல் பாட்டி வரைக்கும் யாருக்குமே பாதுகாப்பு இல்லை.

    எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக, எம்.எல்.ஏ.வாக ஏழை மக்களோடு சேர்ந்து பழகிய அனுபவம் மிக்கவர். விவசாய குடும்பத்தில் பிறந்து ஒரு மிகப்பெரிய கட்சியின் பொதுச்செயலாளராக இருக்ககூடிய அனுபவம் உள்ளவர்.

    நம்மைப் பார்த்த உடனே இந்த பிரச்சினைக்கு தான் வந்திருக்கிறோம் என்று ஒரு தலைவருக்கு தெரிய வேண்டும் அப்படிப்பட்ட ஒரு தலைவராக தான் எடப்பாடியார் நம்முடன் இருக்கிறார். அரசியலில் உயர் பொறுப்புக்கும், அதிகாரத்திற்கும் வருபவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.

    தாய்மார்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் போட்டு விட்டதால் அவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாக தி.மு.க. நினைத்து கொண்டிருக்கிறது. ஆனால் தாய்மார்கள் யாரும் சந்தோஷமாக இல்லை. அவர்களுக்கு வர வேண்டிய பணம் வங்கி கணக்கிற்கு வந்துள்ளது. அவ்வளவு தான். இதில் சந்தோஷப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

    தாய்மார்கள் தான் அரசியல் திசையை மாற்றுவார்கள். களத்தை மாற்றுவார்கள். அவர்கள் தான் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என முடிவு செய்வார்கள். தாய்மார்கள் முடிவு செய்து விட்டனர் நமக்கு இந்த தி.மு.க ஆட்சி வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டனர்.

    நாம் எல்லோரும் ஒரே குடும்பம். ஆனால் தி.மு.க.விற்கு சபரீசன் குடும்பம், உதயநிதி குடும்பம் மட்டுமே தவிர வேறு யாரும் குடும்பம் கிடையாது. யார் என்ன மாதிரியான அபாண்டமான குற்றச்சாட்டை கூறினாலும் நாம் அனைவரும் ஒரே அணி. அது தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே.

    கடந்த 5 ஆண்டுகளில் மகளிருக்கு 37 ஆயிரம் கொடுத்துள்ளனர். மொத்தம் 1,825 நாட்களில் ஒருநாளுக்கு 20 ரூபாய் வீதம் கொடுத்துள்ளனர்.

    2021-ல் ஒரு குடும்பத்திற்கு ரூ.2.10 லட்சம் கடன் இருந்தது. தற்போது ரூ.4.82 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மகளிருக்கு தி.மு.க 37 ஆயிரத்தை கொடுத்து விட்டு, அவர்களிடம் இருந்து ரூ.2.72 லட்சத்தை திருடியுள்ளது.

    234 தொகுதிகளிலும் நாம் தப்பி தவறி தி.மு.க.விற்கு ஓட்டுபோட்டோம் ஆனால் அது நமது தலையில் நாமே மண்ணை அள்ளி போட்டு கொள்வதற்கு சமம்.

    5 ஆண்டுகளில் 8,008 படுகொலைகள் நடந்துள்ளன. 2,080 கற்பழிப்புகள் நடந்துள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மீது 39 ஆயிரத்து 900 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

    சராசரியாக ஒரு நாளைக்கு 22 குழந்தைகள் மீது குற்ற சம்பவங்கள் நடக்கிறது. இதனால் எந்த காரணத்தை கொண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது.

    கோவை மக்கள் பக்கத்து ஊரையும் கெடுத்து விடுவார்கள் என்று தயாநிதிமாறன் கூறும்போது செந்தில்பாலாஜி கைதட்டி சிரிக்கிறார். இதற்கு வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெற்றோர் கோவை சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவாதித்யா, இன்று மூளைச்சாவு அடைந்தார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதிக்கு சிவாதித்யா(7), நிலன் ஆதித்யா என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சிவாதித்யா தனது தாத்தாவுடன் காரில் சென்றார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் தாத்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சிறுவன் சிவாதித்யா பலத்த காயம் அடைந்தார். அவரை அவரது பெற்றோர் கோவை சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவாதித்யா, இன்று மூளைச்சாவு அடைந்தார்.

    இதுகுறித்து அவரது பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து தமிழ்நாடு உறுப்பு தான ஆணைய அனுமதியுடன், சிறுவனின் கண்ணை தவிர மற்ற 6 உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு தானமாக பெறப்பட்டன. தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் ஈரோடு மற்றும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 7 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவியருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து பாறை மட்டுமே தெரிகிறது.
    • தண்ணீர் குறைந்தாலும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து சென்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியார் அடுத்து கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.

    கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.

    இங்கு வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின்பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள்.

    அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கவியருவியில் தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். குறிப்பாக வால்பாறைக்கு சுற்றுலா செல்லக்கூடியவர்கள் கீழே உள்ள ஆழியார் அணை, கவியருவியில் குளித்து விட்டே மலைப்பகுதியான வால்பாறைக்கு செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் வறட்சி நிலவுகிறது.

    கவியருவிக்கும் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. தண்ணீர் குறைந்தாலும் சுற்றுலா பயணிகள் காத்திருந்து குளித்து சென்றனர்.

    இந்த நிலையில் தண்ணீர் வரத்து குறைவு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று முதல் ஆழியார் கவியருவி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

    தற்போது கவியருவியில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து பாறை மட்டுமே தெரிகிறது. இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அருவியில் உடைந்து காணப்படும் தடுப்பு கம்பிகள், மரக்கட்டைகளை அகற்றி விட்டு, புதிதாக கம்பி அமைக்கப்படும். மீண்டும் மழை பெய்து நீர்வரத்து தொடங்கியவுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
    • வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் பல உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு ஆளாகியுள்ள.

    மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது. மேலும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் பல உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு ஆளாகியுள்ள.

    வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், மத்திய அரசை கண்டித்து கோவையில் காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் 25-க்கும் மேற்பட்டவர்களுக்கும் டி.சி வழங்கியுள்ளனர்.
    • டி.சி. பெற்ற மாணவர்கள் கட்டிட பணி, ஆபீஸ் பணி என வேலைக்கு செல்கின்றனர்.

    கோவை:

    கோவை ஒண்டிப்புதூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையானது 900 வரை இருந்த நிலையில் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. தற்போது பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 450 மாணவர்களே படித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்களே காரணம் என பெற்றோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

    இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நடவடிக்கையால், பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியராக சாந்தி என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமனம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் பள்ளிக்கு சரியாக வராத மற்றும் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை கண்டறிந்து அந்த மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்(டி.சி) வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    அதன்படி பள்ளியில் 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 49 மாணவர்களுக்கு டி.சி கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் 25-க்கும் மேற்பட்டவர்களுக்கும் டி.சி வழங்கியுள்ளனர்.

    இந்த நடவடிக்கை அனைத்தும் ஜூலை முதல் டிசம்பர் வரை நடந்துள்ளது. டி.சி.பெற்ற மாணவர்களின் விவரங்கள் தொடர்பான தகவல்கள் அவர்களது எமிஸ் எண் மற்றும் டி.சி. வாங்கிய தேதியுடன் சமூக வலைதளத்தில் பரவியது.

    டி.சி. பெற்ற மாணவர்கள் கட்டிட பணி, ஆபீஸ் பணி என வேலைக்கு செல்கின்றனர். சிலர் வீடுகளில் இருக்கின்றனர். டி.சி. வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் சரியாக படிக்கவில்லை என கூறி பெற்றோரை அழைத்து டி.சி. வாங்கி செல்ல கூறியதாகவும், அதன்படி டி.சி. வாங்கியதாகவும் தெரிவித்தனர்.

    பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற செயல்களில் தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஓரே ஆண்டில் 49 மாணவர்களுக்கு டி.சி. அளிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணையை தொடங்கியுள்ளார்.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது:-

    மாணவர்களுக்கு டி.சி. வழங்கப்பட்டது என்பது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியையிடம் விளக்கம் கேட்கப்படும். அவரது விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் 49 மாணவர்கள் டி.சி. வாங்கி சென்றுள்ள நிலையில், அந்த மாணவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுதொடர்பான விசாரணை தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் வணிக ரீதியான சிலிண்டர்கள் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாத சில ஓட்டல்களில் உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக நடத்தி வரும் தாக்குதலின் எதிரொலியாக உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஓட்டல் சேவை பெருமளவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று தமிழகத்தில் வணிக ரீதியான சிலிண்டர்கள் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாத சில ஓட்டல்களில் உணவு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோவையில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "கோவையில் தற்போதைக்கு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விசேஷ நாட்களில் மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • பக்தர்கள் மலைப்பாதை வழியாக வாகனங்களிலும், படிக்கட்டுகள் வழியாகவும் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படைவீடு என அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    குறிப்பாக விசேஷ நாட்களில் மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்கள் மலைப்பாதை வழியாக வாகனங்களிலும், படிக்கட்டுகள் வழியாகவும் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு, கோவில் முன்புள்ள கொடிமரம், ராஜகோபுரம் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து செல்வர்.

    இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் நாளை முதல் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் எடுக்கவும் தடைவிதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்ச் 10-ந் தேதி(நாளை) முதல் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் இருந்து ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணியசுவாமி சன்னதி, பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்பட அனைத்து சுவாமி சன்னதிகள் மற்றும் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பேசவும், புகைப்படம் எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

    எனவே பக்தர்கள் அனைவரும் கோவில் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் நுழைவதற்கு முன்பு தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் கோவிலில் பக்தர்கள் பயன்படுத்துவதற்காக லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் பயணித்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் லிப்ட்டில் பயணிக்க கோவில் நிர்வாகம் நேற்றுமுதல் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி லிப்ட்டில் பயணிக்க பக்தர் ஒருவருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் மலையில் சென்று கொண்டிருந்த போது ஹரிதாசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரூர்:

    கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் ஹரிதாஸ்(வயது48). தங்கபட்டறை தொழிலாளி. சிவபக்தரான இவர் கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த 7-ந்தேதி ஹரிதாஸ் தனது நண்பரான மாரியப்பன் என்பவருடன் பூண்டி வெள்ளியங்கிரி மலையடிவாரத்திற்கு சென்றார். அங்கு கீழ் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, இருவரும் மலையேறினர்.

    முதல் மலையில் சென்று கொண்டிருந்த போது ஹரிதாசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியான அவரது நண்பர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    வனத்துறையினர் விரைந்து வந்து மயங்கி விழுந்த ஹரிதாசை டோலிகட்டி மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தனர். அங்கு இருந்த மருத்துவகுழுவினர் மயங்கி விழுந்த ஹரிதாசை பரிசோதனை செய்தனர்.

    அப்போது ஹரிதாஸ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஹரிதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது.
    • கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் குறைவான பேருக்கு தான் அரசு வேலை கொடுத்துள்ளனர்.

    பொள்ளாச்சி:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை பொள்ளாச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டு ரூ.913-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியாவில் எல்.பி.ஜி. இணைப்புகள் வெறும் 14 கோடி மட்டும் இருந்தது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் 33 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. பயன்பாடு அதிகமாக இருப்பதால் 45 சதவீதம் கியாஸ் மட்டும் இறக்குமதி செய்யப்படுகிறது. பிரதமர் மோடி விலையை ஏற்றக்கூடாது என்று முயற்சி செய்து வைத்திருந்தார். ஆனால் சர்வதேச சந்தையில் விலை உயரும்போது, வேறு வழியில்லாமல் விலையை ஏற்ற வேண்டிய நிலை உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அளித்த கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. தற்போது சர்வதேச அளவில் விலை உயர்ந்துள்ளது. எனவே ரூ.100 மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

    கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை சட்டமன்றத்தில் அறிவித்து இருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை மேகதாது அணையை கட்டக்கூடாது. அணையை கட்டினால் டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் டெல்டா விவசாய நலனை அடமானம் வைத்து விட்டாரா? என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியான பிறகு சொல்கின்றனர். இதை பார்க்கும்போது மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்ததை போன்று தெரிகிறது. டெல்டா விவசாயிகளுக்கு தி.மு.க. துரோகம் செய்துள்ளது.

    ஆட்சிக்கு வந்தால் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் குறைவான பேருக்கு தான் அரசு வேலை கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×