என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    ஆனைமலையில் இளநீர் விலை தொடர் வீழ்ச்சி- விவசாயிகள் கவலை
    X

    ஆனைமலையில் இளநீர் விலை தொடர் வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குறிப்பாக சிவப்பு நிற இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
    • கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.40 ஆக இருந்த ஒரு இளநீர் விலை படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.23-க்கு குறைந்து விட்டது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 55 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

    பொள்ளாச்சி இளநீருக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

    பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி மதுரை, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், மகாராஷ்டிரா, அசாம், அரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக சிவப்பு நிற இளநீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.40 ஆக இருந்த ஒரு இளநீர் விலை படிப்படியாக குறைந்து, தற்போது ரூ.23-க்கு குறைந்து விட்டது. இவ்வாறு விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    இதுகுறித்து இளநீர் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

    இளநீர்விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக இளநீர் டிசம்பர் 8-ந்தேதி முதல் ரூ.23 ஆகவும், ஒரு டன் இளநீரின் விலை ரூ.10 ஆயிரம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வடமாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் குளிர்ந்த தட்ப வெப்பநிலை நிலவுவதாலும், பொள்ளாச்சி பகுதியில் பரவலாக மழை பெய்ததாலும், இளநீர் வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதன் காரணமாகவும் இந்த வாரம் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×