என் மலர்

    தமிழ்நாடு (Tamil Nadu)

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் மேள, தாளங்கள் முழங்க நடனமாடி பெருமாளுக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர்
    X

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் மேள, தாளங்கள் முழங்க நடனமாடி பெருமாளுக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீதேவி பூதேவி பெருமாள் சமேதரமாக காட்சி அளித்த பெருமாளுக்கு மாலை மாற்றப்பட்டது.
    • சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோபி:

    புரட்டாசி மாதம் பிறந்தது முதலே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு வருகிறார்கள்.

    மேலும் பக்தர்கள் பலர் புரட்டாசி சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்த பின்னரே உணவு அருந்துகின்றனர். இந்த நிலையில் புரட்டாசி பிறந்து 3-வது சனிக்கிழமையான நேற்று வெகு விமர்சையாக பெருமாள் கோவில்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேதன உடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதே போல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து கோவிலில் பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் மேள தாளங்கள் முழங்க வேத மந்திரங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் வரதராஜ பெருமகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாணம் முடிந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    மேள தாளங்கள் வாசிக்க அதற்கேற்றார் போல் ஸ்ரீதேவி பூதேவி பெருமாள் சமேதரமாக காட்சி அளித்த பெருமாளுக்கு மாலை மாற்றப்பட்டது.

    அப்போது செங்கோட்டையன் எம்.எல்.ஏ. ஆடி, பாடி நடனமாடி மகிழ்ந்தார். இதை தொட ர்ந்து அவர் இசைக்கேற்றப்படி ஆடி கொண்டு சுவாமிக்கு மாலை அணிவித்தார். இதை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

    இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைத்தலங்களில் பரவி வருகிறது. இதை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.

    Next Story
    ×