என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    நாளை கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    நாளை கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லணை பகுதியில் உள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவை வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளன.
    • தஞ்சை மாவட்டத்தில் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் 291 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    பூதலூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதகுகளை இயக்கி தண்ணீரை திறந்து விட்டு மலர்தூவினார்.

    இதையடுத்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேட்டூர் அணையை திறந்து விட்டது போல் கல்லணையில் இருந்தும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.

    இதற்காக தஞ்சாவூர் வருகை தரும் முதலமைச்சர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ரகுபதி, மெய்யநாதன், தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம், டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கல்லணையில் தூய்மைப்படுத்தும் பணிகள், வண்ணம் பூசும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கல்லணை கால்வாய் தலைப்பு பகுதியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள புனரமைப்பு பணிகளும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

    கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் பாலங்கள் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

    கல்லணை பாலங்களில் அமைந்துள்ள மாமன்னன் கரிகாலன், ஆங்கில பொறியாளர் ஆர்டர் காட்டன், காவிரி அம்மன், அகத்தியர், மாமன்னன் ராஜராஜன், விவசாயி, மீன்பிடிக்கும் தொழிலாளி ஆகிய சிலைகள் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

    கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக பூஜை செய்யப்படும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேறும் மதகு பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில், உள்பகுதியில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவில், பூங்காவில் அமைந்துள்ள விநாயகர் கோவில் ஆகிய கோவில்கள் வண்ணம் பூசப்பட்டு தண்ணீரை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

    மேலும் கல்லணை பகுதியில் உள்ள சாலைகள், பாலங்கள் ஆகியவை வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளன.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 114.89 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 85.553 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து 6,836 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் 1.93 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 1.72 லட்சம் ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 0.61 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தஞ்சை மாவட்டத்தில் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் 291 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலமாக 1,379 கிலோமீட்டர் தூரம் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×